September 14, 2011

தனிமையின் இசை


வீழ்த்தப்பட்ட நகரத்தின்
சிதிலங்களின் நடுவே
நின்றிருக்கும் அவன்
தகிக்கும் சூரியன்
காலடியில் வரையும்
மெலிந்ததோர் ஓவியம்
அவனே அதுவாகவும்
அதுவே அவனாகவும்
தனை வெறித்தபடி இருக்கும்
ஓநாயின் விழிகள்
உதிரச் சிவப்போடு
நீ தனியன்
இழப்பதற்கு ஏதுமற்ற நாடோடி
உன் நிழலன்றி
உனக்கென எவருமில்லை
ஆன்மாவின் ஓலம்
சூன்யத்தைப் பிளக்கும்
வீழும் பொழுதில்
கரைந்திடும் ஓவியம் கண்டு
செய்வதறியாது கதறித் துடிக்கிறான்
தன்னைத் தொலைத்தவன்
வெளியில் திரியும் காற்று
இசைத்துப் போகிறது
துயரத்தின் பாடலை

3 comments:

பத்மா said...

கொடியது தனிமை

சொல்லரசன் said...

இது யார் எழுதியகவிதை?
நல்லாயிருக்குங்கோ

jeya said...

good one karthi!!!