இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது.
"தேங்காய் உடைத்து கருணாநிதி பயணம்"
திராவிடம், கடவுள் மறுப்பு எனச் சொல்லும் கருணாவும் சகுனம் பார்க்கிறார் என நிறுவுகிறார்களாம். அதே இதழில் வெளியாகி இருந்த இன்னும் சில தலைப்புகள்..
"அதிருப்தி.. கோஷ்டி சண்டை காரணமாக சோனியா வருத்தம்.."
"புதுவையில் உடைகிறது தி.மு.க அணி.."
"பாமகவுக்கு ஆதரவாக குஷ்பூ? எப்படி ஆகிப்போச்சு நிலைமை.. திமுகவினர் கவலை.."
இது எல்லாமே சாம்பிள்தான். திமுகவை திட்டி எழுதுவது தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல. அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் சார்ந்து இயங்கக் கூடிய பத்திரிக்கை, இவர்களுக்கும் திமுகவுக்கும் ஆகாது என எல்லாருக்கும் தெரிந்தாலும் இந்தத் தேர்தலில் எல்லா எல்லைகளையும் மீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டபோது இவர்கள் எழுதியது..
“ஜெ.க்கு தெரியாமலே பட்டியல் வெளியானதா?”
ஜெவை நல்லவர் என நிறுவ முயலும் இவர்கள், மன்னார்குடி கும்பல்தான் அவரைச் சீரழிக்கிறது எனச் சொல்லும் இவர்கள், அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என எழுதாது ஏன்? திராவிடம் புண்ணாக்கு என்றெல்லாம் சொல்லி விட்டு கோவில் கோவிலாக ஜெ போகும்போது இவர்களுக்கு கசப்பதில்லையே. லூசுத்தனமாக அவர் காரியம் செய்தால் கூட ஜெ அப்பாவி, கருணாநிதி அதையே செய்தால் அடப்பாவியா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்?
எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை தினமலர் வைகோவை சீண்டிய விதம். தேர்தல் புறக்கணிப்பு என்றதும் “ஓட்டம்” எனக் கார்ட்டூன், ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் என்பதாக வைகோ மீண்டும் ஜெவைச் சந்தித்தார் எனச் செய்தி போட்டு அசிங்கப்படுத்தியது. இதையெல்லாம் வெளிப்படையாக ஒரு கட்சிக்கு ஆதரவு சொல்லி விட்டு செய்யலாமே.. இதுதான் எங்கள் அரசியல் நிலைப்பாடு என முடிவு செய்கிறீர்களா.. தைரியமாக அறிவித்து விட்டு மோதலாமே.. ஏன் நடுநிலை நாளிதழ் என்கிற பெயரில் செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி.
அடுத்ததாக விகடன் குழுமம். தங்கள் வீட்டில் ஒரு அங்கம் எனத் தமிழக மக்கள் பலரும் நம்பும் பத்திரிக்கை. அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன். முதலில் நன்றாக விஜயகாந்துக்கு விளம்பரம் கொடுத்து சுதி ஏற்றினார்கள். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக ஏன் தேமுதிகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் விளக்கினார்கள்.
இப்போது தேர்தல் நேரத்திலோ நேரடியாக களத்திலேயே இறங்கி விட்டார்கள். தொடர்ச்சியாக கருத்து கணிப்புகள், அத்தனையும் மு.க மற்றும் அவர் குடும்பத்தைத் தாக்கி. மறைமுக எண்ணம் என்றெல்லாம் இல்லாமல் நேரடித் தாக்குதல்தான். மறக்க முடியுமா என்று தலையங்கம், துறை வல்லுனர்களின் குற்றச்சாட்டு, அரசாங்கம் நிகழ்த்தும் அராஜகம் என்று பயங்கரமான ஒரு ஊடகத் தாக்குதலை விகடன் இன்றைய அரசு மீது நிகழ்த்தி வருகிறது. அதிலும் விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை அடித்ததை சப்பைக்கட்டு கட்டி ஜூ.வியில் வெளியான கட்டுரை அத்தனை பெரிய கேவலம்.
கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிக்கைகளுமே இந்தத் தேர்தலில் ஏதாவொரு நிலையெடுத்து இயங்குவதாக தெரிகிறது. நக்கீரனைப் பொறுத்தவரை அது அறிவிக்கப்படாத முரசொலி மாதிரி. ஊரில் எல்லாப்பயலும் திமுக ஜெயிப்பது கஷ்டம் என்றால் இவர்களுக்கு மட்டும் எல்லா இடங்களிலும் அதாவது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பார்கள். ஜிங்க்சாக் அடிங்கையா.. ஆனா கொஞ்சமாவது மனசாட்சியோட அடிங்க.
தினத்தந்தியைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகம். அரசியல் விசயங்ளைப் பொறுத்தவரை ஹிந்து என்பது நம்மைப் பிடித்து இருக்கும் ஒரு கெரகம். ஆ.விக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதாலேயே குமுதம் திமுக பக்கம். துக்ளக் - சொல்லவே வேண்டாம். ஏதோ தமிழக அரசியல் (யார் பத்திரிக்கை என்று தெரியவில்லை) என்கிற ஒரு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எல்லாமே கட்சிசார் நிறுவனங்கள் என்றாகி விட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து எழுத்தொடங்கினால் பொதுஜனம் என்ன செய்வது? எங்களுடைய கருத்துதான் உங்களுடையதாகவும் இருக்க முடியும் என மக்கள் மீது திணிப்பது எத்தனை பெரிய அராஜகம்? நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் எழுத்துத் துறை இந்த லட்சணத்தில் இருந்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது?
பீப்ளி லைவில் ஒரு காட்சி வரும். பல ஆண்டுகளாக உழைத்த ஒருவன் அதே கிணறுக்குள் விழுந்து செத்துப் போயிருப்பான். ஆனால் ஊடகங்களோ சர்ச்சைக்குரிய மனிதன் மலம் கழித்த இடத்தை தேடிக் கொண்டிருப்பர்கள். இங்கே எது விற்குமோ அதைத் தருவதுதான் ஊடகங்களின் கடமை என்பதாக ஒரு நிருபர் சொல்லுவார். இதுதான் நிதர்சனம். உண்மைக்கு இங்கே மதிப்பு இல்லை. விக்கிலீக்ஸுக்கு கேபிள்கள் அனுப்பி உதவிய வீரரொருவர் இருபதாண்டு தனிமைச் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் பைத்தியம் ஆகும் சூழலில் இருக்கிறார். இதை நேர்மையாக எந்த பத்திரிக்கையாவது வெளியிட்டதா? இல்லையே.. எல்லாமே வியாபாரம்னு ஆகிப் போச்சு.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கையோ, டிவியோ இனிமேல் வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. இதே லட்சணத்துல போனா பி.எஸ்.வீரப்பா டயலாக்க சொல்லித்தான் முடிக்கணும்.. “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..”
"தேங்காய் உடைத்து கருணாநிதி பயணம்"
திராவிடம், கடவுள் மறுப்பு எனச் சொல்லும் கருணாவும் சகுனம் பார்க்கிறார் என நிறுவுகிறார்களாம். அதே இதழில் வெளியாகி இருந்த இன்னும் சில தலைப்புகள்..
"அதிருப்தி.. கோஷ்டி சண்டை காரணமாக சோனியா வருத்தம்.."
"புதுவையில் உடைகிறது தி.மு.க அணி.."
"பாமகவுக்கு ஆதரவாக குஷ்பூ? எப்படி ஆகிப்போச்சு நிலைமை.. திமுகவினர் கவலை.."
இது எல்லாமே சாம்பிள்தான். திமுகவை திட்டி எழுதுவது தவிர்த்து எத்தனை செய்திகள் தினமலரில் வருகிறது எனப் பார்த்தால் இரண்டு பக்கம் கூட தேறாது போல. அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனியம் சார்ந்து இயங்கக் கூடிய பத்திரிக்கை, இவர்களுக்கும் திமுகவுக்கும் ஆகாது என எல்லாருக்கும் தெரிந்தாலும் இந்தத் தேர்தலில் எல்லா எல்லைகளையும் மீறிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டபோது இவர்கள் எழுதியது..
“ஜெ.க்கு தெரியாமலே பட்டியல் வெளியானதா?”
ஜெவை நல்லவர் என நிறுவ முயலும் இவர்கள், மன்னார்குடி கும்பல்தான் அவரைச் சீரழிக்கிறது எனச் சொல்லும் இவர்கள், அவர்களை விட்டு வெளியே வாருங்கள் என எழுதாது ஏன்? திராவிடம் புண்ணாக்கு என்றெல்லாம் சொல்லி விட்டு கோவில் கோவிலாக ஜெ போகும்போது இவர்களுக்கு கசப்பதில்லையே. லூசுத்தனமாக அவர் காரியம் செய்தால் கூட ஜெ அப்பாவி, கருணாநிதி அதையே செய்தால் அடப்பாவியா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்?
எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை தினமலர் வைகோவை சீண்டிய விதம். தேர்தல் புறக்கணிப்பு என்றதும் “ஓட்டம்” எனக் கார்ட்டூன், ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள் தினம் என்பதாக வைகோ மீண்டும் ஜெவைச் சந்தித்தார் எனச் செய்தி போட்டு அசிங்கப்படுத்தியது. இதையெல்லாம் வெளிப்படையாக ஒரு கட்சிக்கு ஆதரவு சொல்லி விட்டு செய்யலாமே.. இதுதான் எங்கள் அரசியல் நிலைப்பாடு என முடிவு செய்கிறீர்களா.. தைரியமாக அறிவித்து விட்டு மோதலாமே.. ஏன் நடுநிலை நாளிதழ் என்கிற பெயரில் செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி.
அடுத்ததாக விகடன் குழுமம். தங்கள் வீட்டில் ஒரு அங்கம் எனத் தமிழக மக்கள் பலரும் நம்பும் பத்திரிக்கை. அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மதுரையில் ஜூ.வி நிருபருக்கு அடி விழுந்த நேரத்தில்தான் இது ஆரம்பித்தது என நினைக்கிறேன். முதலில் நன்றாக விஜயகாந்துக்கு விளம்பரம் கொடுத்து சுதி ஏற்றினார்கள். அதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிமுக ஏன் தேமுதிகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றும் விளக்கினார்கள்.
இப்போது தேர்தல் நேரத்திலோ நேரடியாக களத்திலேயே இறங்கி விட்டார்கள். தொடர்ச்சியாக கருத்து கணிப்புகள், அத்தனையும் மு.க மற்றும் அவர் குடும்பத்தைத் தாக்கி. மறைமுக எண்ணம் என்றெல்லாம் இல்லாமல் நேரடித் தாக்குதல்தான். மறக்க முடியுமா என்று தலையங்கம், துறை வல்லுனர்களின் குற்றச்சாட்டு, அரசாங்கம் நிகழ்த்தும் அராஜகம் என்று பயங்கரமான ஒரு ஊடகத் தாக்குதலை விகடன் இன்றைய அரசு மீது நிகழ்த்தி வருகிறது. அதிலும் விஜயகாந்து தன் கட்சி வேட்பாளரை அடித்ததை சப்பைக்கட்டு கட்டி ஜூ.வியில் வெளியான கட்டுரை அத்தனை பெரிய கேவலம்.
கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிக்கைகளுமே இந்தத் தேர்தலில் ஏதாவொரு நிலையெடுத்து இயங்குவதாக தெரிகிறது. நக்கீரனைப் பொறுத்தவரை அது அறிவிக்கப்படாத முரசொலி மாதிரி. ஊரில் எல்லாப்பயலும் திமுக ஜெயிப்பது கஷ்டம் என்றால் இவர்களுக்கு மட்டும் எல்லா இடங்களிலும் அதாவது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி என்பார்கள். ஜிங்க்சாக் அடிங்கையா.. ஆனா கொஞ்சமாவது மனசாட்சியோட அடிங்க.
தினத்தந்தியைப் பொறுத்தவரை யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு சாதகம். அரசியல் விசயங்ளைப் பொறுத்தவரை ஹிந்து என்பது நம்மைப் பிடித்து இருக்கும் ஒரு கெரகம். ஆ.விக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதாலேயே குமுதம் திமுக பக்கம். துக்ளக் - சொல்லவே வேண்டாம். ஏதோ தமிழக அரசியல் (யார் பத்திரிக்கை என்று தெரியவில்லை) என்கிற ஒரு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் தொலைக்காட்சிகள் எல்லாமே கட்சிசார் நிறுவனங்கள் என்றாகி விட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் உண்மையான செய்திகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் இவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து எழுத்தொடங்கினால் பொதுஜனம் என்ன செய்வது? எங்களுடைய கருத்துதான் உங்களுடையதாகவும் இருக்க முடியும் என மக்கள் மீது திணிப்பது எத்தனை பெரிய அராஜகம்? நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் எழுத்துத் துறை இந்த லட்சணத்தில் இருந்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது?
பீப்ளி லைவில் ஒரு காட்சி வரும். பல ஆண்டுகளாக உழைத்த ஒருவன் அதே கிணறுக்குள் விழுந்து செத்துப் போயிருப்பான். ஆனால் ஊடகங்களோ சர்ச்சைக்குரிய மனிதன் மலம் கழித்த இடத்தை தேடிக் கொண்டிருப்பர்கள். இங்கே எது விற்குமோ அதைத் தருவதுதான் ஊடகங்களின் கடமை என்பதாக ஒரு நிருபர் சொல்லுவார். இதுதான் நிதர்சனம். உண்மைக்கு இங்கே மதிப்பு இல்லை. விக்கிலீக்ஸுக்கு கேபிள்கள் அனுப்பி உதவிய வீரரொருவர் இருபதாண்டு தனிமைச் சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் பைத்தியம் ஆகும் சூழலில் இருக்கிறார். இதை நேர்மையாக எந்த பத்திரிக்கையாவது வெளியிட்டதா? இல்லையே.. எல்லாமே வியாபாரம்னு ஆகிப் போச்சு.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சின்னு எந்த பேதமும் இல்லாம உண்மையா செய்திகள் சொல்ற பத்திரிக்கையோ, டிவியோ இனிமேல் வாய்ப்பே இல்லைன்னுதான் தோணுது. இதே லட்சணத்துல போனா பி.எஸ்.வீரப்பா டயலாக்க சொல்லித்தான் முடிக்கணும்.. “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..”