December 25, 2008

அவனும் அவளும்....(2)!!!!!



நேரம் காலை பத்து மணி. அவள் அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது அவனிடமிருந்து போன் வந்தது.


"ஹலோ.. சொல்லுப்பா..."


"என்னடிம்மா, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.. உடம்புக்கு எதுவும் முடியலியா?"


"இல்லப்பா... ஒன்னும் இல்ல.. இங்க ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சினை.. அவ்ளோதான்.. நீ சொல்லு.. "


"ஏம்மா... என்ன ஆச்சு?"


"உனக்கு தான் தெரியும்ல.. நமக்கும் மானேஜருக்கும் நல்ல நாள்லயே ஆகாது... இன்னைக்கு இன்னொரு ஆள் பண்ண தப்புக்கு நான் மாட்டிக்கிட்டேன்.. அத விடு.. நீ எதுக்கு கால் பண்ணின.. அத சொல்லு..."


"ஒண்ணும் இல்லமா... பழைய தோஸ்த் ஒருத்தன் ஊருக்கு வந்து இருக்கான்...சாயங்காலமா அவன மீட் பண்ணலாம்னு ஒரு பிளான். மத்த பசங்ககிட்டையும் சொல்லி இருக்கேன். அப்படியே ஒரு படத்துக்கும் போயிட்டு வரலாமேனு ஐடியா...அது தான் மேடம்கிட்டே சொல்லிட்டு..."


"சரி.. சரி.. ரொம்ப இழுக்காத.. போயிட்டு வாப்பா.."


"நீங்க ஜாயின் பண்ண முடியாதா..."


"இல்லப்பா..சாரி.. வேல ஜாஸ்தி.. அதோட மானேஜர் பிரச்சினை வேற இருக்கு... நீ போயிட்டு வா..."


"ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே..."


"லூசே..நான் தான் போயிட்டு வான்னு சொல்றேன்ல..ஒண்ணும் பிரச்சினை இல்ல.. ஹவ் எ நைஸ் டைம் பா..."


"ஓகேமா... டேக் கேர்... "


நேரம் நாலு மணி. அவன் நண்பர்களோடு இருந்த பொது அவளது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.


"ஹலோ.. நான் ஆபீஸ் கிளார்க் பேசுறேன்.. சார் இருக்காங்களா?"

"நான் தான் பேசுறேன்.. சொல்லுங்க..."


"சார், இங்க மேடம்க்கு ஒரு சின்ன அக்சிடென்ட்..."


"என்னப்பா ஆச்சு..: அவன் பதறிப்போனான்.


"பயப்படுறமாதிரி ஒண்ணும் இல்ல சார்.. வண்டில இருந்து கீழ விழுந்துட்டாங்க.. கைல மட்டும் சின்ன காயம்..மருந்து போட்டாச்சு..."


"இப்போ அவங்க எங்கே இருக்காங்க.."


"பக்கத்திலேதான் இருக்காங்க. பேசுங்க சார்..." போனை அவள் வாங்கி கொண்டாள்.


"சொல்லுப்பா..பிரெண்ட பார்த்துட்டயா?"


"இப்போ அது தான் முக்கியமா.. என்னமா ஆச்சு.. கொஞ்சம் பத்திரமா இருக்க வேண்டாமா.. அடி ஏதும் படலியே?"


"இரு.. இரு.. இரு.. நீ டென்சன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் சீரியஸா எல்லாம் அடி படலப்பா.. லைட்டாதான்.. நான் போன் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்,.. ஆபீஸ்ல தான் கேக்காம போன் பண்ணிட்டாங்க.."


"நீ அங்கேயே இரு..நான் கிளம்பி வரேன்.."


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நீங்க போய் படத்த பார்த்திட்டு வாங்க.. வண்டிய இங்கயே விட்டுட்டு நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போறேன்.. நீ பிரெண்ட்ஸ் கூட கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிட்டு வா.."


"இல்லமா..நான் சொல்றத கொஞ்சம் கேளு.."

"முடியாது..நான் சொல்றத நீ கேளு.. ஓடு.. ஓடு..நான் கிளம்பி வீட்டுக்கு போறேன்..சீ யு..பாய்.. "போனை வைத்து விட்டாள்.


அவள் வீட்டுக்கு வந்து இறங்கியபோது கதவு திறந்து இருந்தது. வெளியே அவனுடைய பைக் நின்றது. உள்ளே போனால் அவன் இருந்தான்.


"எங்க அடிபட்டுச்சிமா.. சொல்லு.. மருந்து போடலாம்.."அவன் அவளை நெருங்கி வந்தான்.


"படத்துக்கு போகலையா..?"


"இல்ல..தியேட்டர் வாசல் வரைக்கும் போனேன்.. மனசு சரில்ல..அதனால டிக்கெட் வாங்கி பசங்கள உள்ள அனுப்பிட்டு நான் வந்துட்டேன்.."


"நான் தான் ஒண்ணும் இல்லன்னு சொன்னேன்ல.. ரொம்ப நாள் கழிச்சு வந்த பிரென்ட்னு சொன்ன.. கூட போய்ருக்கலாம்ல..நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவே ஏதும் பண்ணிருக்கியா?"


"அப்படி எல்லாம் இல்லடிமா.."


"பின்ன..பாவம்ல உன் பிரெண்ட்ஸ் எல்லாம்..என்னதான் திட்டி இருப்பாங்க.."


"அதெல்லாம் இல்லடி.. அவங்களுக்கு தெரியும்.. சொல்லிட்டுதான் வந்தேன்.. காலைல இருந்து ஆபீஸ்ல பிரச்சினை..இப்போ இந்த அக்சிடென்ட் வேறே..நீ இங்க எப்படி இருப்பனு எனக்கு தெரியும்டிமா... இதுல போய் என்னால நிம்மதியா படம் பார்த்துகிட்டு உக்கார்ந்து இருக்க முடியாது.. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.."


"என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சுருப்பியே.. உன்ன திருத்தவே முடியாது.."


"பரவாயில்லடிமா.. நீ என்ன எவ்ளோ திட்டினாலும்... நமக்கு ஒண்ணுனு சொன்னவுடனே இந்த பய துடிச்சி போய் ஓடிவந்துட்டான் பார்த்தியான்னு உள்ளுக்குள்ள சந்தோஷந்தான்படுவன்னு எனக்கு தெரியும்டி.." அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.


"பரதேசி..நாயே..பன்னி..என்னோட வீக்பாயிண்ட் தெரிஞ்சுக்கிட்டு, என் உயிரை வாங்குறதுக்கே வந்திருக்கடா.."செல்லமாக அவன் தோள்களில் குத்தியவாறே மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவன் சந்தோஷமாக அவளை அணைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான்."உனக்கென நான்.. எனக்கென நீ.."!!!!!!

No comments: