
வீழ்த்தப்பட்ட நகரத்தின்
சிதிலங்களின் நடுவே
நின்றிருக்கும் அவன்
தகிக்கும் சூரியன்
காலடியில் வரையும்
மெலிந்ததோர் ஓவியம்
அவனே அதுவாகவும்
அதுவே அவனாகவும்
தனை வெறித்தபடி இருக்கும்
ஓநாயின் விழிகள்
உதிரச் சிவப்போடு
நீ தனியன்
இழப்பதற்கு ஏதுமற்ற நாடோடி
உன் நிழலன்றி
உனக்கென எவருமில்லை
ஆன்மாவின் ஓலம்
சூன்யத்தைப் பிளக்கும்
வீழும் பொழுதில்
கரைந்திடும் ஓவியம் கண்டு
செய்வதறியாது கதறித் துடிக்கிறான்
தன்னைத் தொலைத்தவன்
வெளியில் திரியும் காற்று
இசைத்துப் போகிறது
துயரத்தின் பாடலை
4 comments:
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
Press Meet Gallery
கொடியது தனிமை
இது யார் எழுதியகவிதை?
நல்லாயிருக்குங்கோ
good one karthi!!!
Post a Comment