April 15, 2009
சிகரெட் - தனக்குத்தானே கொள்ளி..!!!!
April 14, 2009
என்ன கொடுமை சார் இது...?
சனிக்கிழமை எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா என்பதால் வேலை ஜாஸ்தி. ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டரை மாணவ நண்பர்களுடன் கோவையில் கொண்டாட முடிவாகி இருந்தது. மறுநாள் இறுதியாண்டு மாணவர்களின் பிரிவு உபச்சார விழா. எனவே மூணு நாலு நாளைக்கு பதிவுகள் பக்கம் சுத்தமா வர முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சரி.. அதுவரைக்கும் நம்ம கடை காலியா இருக்க வேணாமேன்னு ஏழெட்டு படத்த டவுன்லோட் பண்ணி.. ஒரு மொக்கை பதிவு போட்டேன். சும்மா நண்பர்களை ஓட்டுவது மட்டுமே எனது எண்ணம். எனக்குள் இருக்கும் ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுத்தான் அது. ஒரு சில நண்பர்கள் அதை ரசித்து இருந்தனர். ஆனால் சில நண்பர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பதை பின்னூட்டத்திலும் அலைபேசியிலும் சொன்னார்கள். கார்த்தி எழுதுனா கொஞ்சம் உருப்புடியா இருக்கும்னு என்னை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கிற அந்த உள்ளங்களுக்கு நன்றி. அவங்ககிட்ட என் வருத்தத்த தெரிவிச்சுக்கிறேன். (கவனிங்க.. தலைவர் ஸ்டைல்.. வருத்தம்தான்.. )
இதுல ஒரு நொம்பலம் என்னன்னா.. நான் எழுதுனதுலே அதிகமான ஹிட்ஸ் இந்தப் பதிவுக்குத்தான் வந்திருக்கு.. 2000 ஹிட்ஸ்.. மனுஷன் உக்கார்ந்து யோசிச்சு நல்ல விஷயங்களா எழுதுனா அதை படிக்குற மக்கள் கம்மியாத்தான் இருக்காங்க.. ஆனா சும்மா எதையாவது எழுதி அதுக்கு தலைப்பு மட்டும் காமாசோமான்னு வச்சா.. (குறிப்பா இந்த 18 +).. கூட்டம் அள்ளுது.. என்ன கொடுமை சார் இது?
***************
மாணவ நண்பர்களுடன் அடிக்கடி ப்ளாகுகள் பற்றி பேசுவது உண்டு. போன வாரம் இதேபோல் பேசிக்கொண்டு இருக்கும்போது.. எஸ்ராவைப் பற்றி நான் எழுதியதையும் பின்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன். உடனே கேட்டுக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சொன்னான்..
"சார், நீங்க சொல்ற மாதிரி நடக்கும்னா நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சார்..".
எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பரவா இல்லையே.. நாம பேசி ஒரு பையனுக்குள்ள ஆர்வத்த தூண்டிட்டோமேன்னு நினைச்சுக்கிட்டு அவன்கிட்ட கேட்டேன்..
" சொல்லுடா.. எதப்பத்தி எழுதப் போற.."
அதுக்கு அவன் சொன்னான்.. "சார்.. என் வாழ்க்கையின் லட்சியமே நமீதாவை சந்திக்கிறதுதான்.. அதனால நான் ப்ளாக்ல அவங்களைப் பத்தி எழுதி.. அவங்கள போய் பாக்கலாம்னு இருக்கேன்.."
நான் அதுக்கப்பறம் அவன்கிட்ட என்னத்தப் பேச..? ஆணியே புடுங்க வேண்டாம்னு பேச்ச நிப்பாட்டிட்டேன்.. என்ன கொடுமை சார் இது..?
***************
கிளாஸ்ல பாடம் நடத்துறது போக, அப்பப்போ மத்த விஷயங்களையும் டிஸ்கஸ் பண்ணுவது உண்டு. பொது அறிவு, முக்கியமான நிகழ்வுகள்.. இந்த மாதிரி. அப்படித்தான் ஒருநாள் மாணவர்கள் தங்களுடைய தொடர்பு கொள்ளும் திறனை (communication skills) வளர்த்துக் கொள்வது பற்றியும், ஆங்கிலத்தில் தப்பில்லாமல் பேசுவது பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தேன்.
அப்போது ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.."சும்மா சொல்லாதீங்க சார்.. ஆங்கிலம் ஒன்னும் ரொம்ப நல்ல மொழி எல்லாம் கிடையாது.. அதுல நிறைய தப்பெல்லாம் இருக்கு.. எக்கச்சக்கமான உச்சரிப்பு பிராப்ளம் உண்டு.. தெரியுமா.."
"எப்படிடா சொல்ற..." - நான்.
அவன் போர்டுக்கு வந்து எழுதத் தொடங்கினான்.
"ma - இது என்ன சார்?"
"ம..."
"chi - இது என்ன சார்?"
"சி..."
"ne - இது என்ன சார்?" "நி.."
"இப்போ எல்லாத்தையும் சேர்த்து வாசிங்க... ma chi ne - மச்சினி தான.. அப்புறம் என் மெஷின்னு சொல்றாங்க? "
எனக்கு வாயடைச்சுப் போச்சு. உக்கார்ந்து யோசிப்பாங்களோ? அவன் அத்தோடு நிறுத்தவில்லை.
"on - இது ஆன் தான் சார்.. e - ஈ.. அப்போ சேர்த்து எழுதுனா one - ஆணின்னு தான சொல்லணும்.. ஏன் ஒன் அப்படின்னு சொல்றாங்க..."
தெய்வமே என்ன விட்டுடுன்னு கெஞ்சாத குறையா ஓடி வந்தேன். இந்த பயபுள்ளைகள கட்டி மேய்க்கிறதுக்கு உள்ள.. நாம நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம் போல.. எ. கொ. சா. இ..?
***************
கடைசியாக.. ஒரு மாணவன் எனக்கு அனுப்பிய S.M.S...
"உலகின் எல்லா தலைசிறந்த இசைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கக்கூடிய மென்மையான பாடல்கள் கூட.. எங்கள் ஆசிரியரின் தாலாட்டின் முன் தோற்றுப்போகும்.. "
(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இந்த விரோதி ஆண்டு நண்பனாக அமைய.. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. )
April 11, 2009
April 9, 2009
பிரியமான தோழிக்கு...!!!

April 8, 2009
ரயில் பயணங்களில்...!!!
"தம்பி.. கொஞ்சம் இடம் விட்டீங்கன்னா வயசானவ உக்காந்துக்குவேன்.."
"பரவா இல்லை பாட்டி.. இப்படி கீழ உக்காருங்க.."
மெதுவாக கீழே அமர்ந்தவர் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். அவர் மடியில் அந்தக் குழந்தை படுத்துக் கொண்டது. சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார். பக்கத்தில் நடந்து போன ஒருவர் தெரியாமல் அவரை இடித்தபோது காச்மூச்சென்று கத்தத் தொடங்கி விட்டார். எனக்கு எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடி கேட்பார்கள்.." சிரித்துக் கொண்டே நகர்ந்து வந்து கதவை ஒட்டி நின்று கொண்டேன். ரயில் நகரத் தொடங்கி இருந்தது. காற்று மிதமாக என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. இரவின் குளிர் காற்றில் எங்கும் பாவி இருந்தது.
தரையில் நிறைய பேர் உட்கார்ந்து இருந்தார்கள். என்னை ஒட்டி நின்று இருந்த சிலர் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். வடமாநிலத்தவர் போல.. வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள். வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் இருள் படர்ந்து இருந்தது. மரங்களும் விளக்குக் கம்பங்களும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.
வாசற்படியில் அமர்ந்து இருந்த ஒரு ஹிந்தி இளைஞன் காதில் செல்போனை மாட்டிக் கொண்டு சத்தமாக பாடி கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். " பாகோ மே சலே ஆ..." நானும் மெதுவாக அந்தப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். நான் பாடுவதை அவன் கவனித்து விட்டான். சட்டென்று நின்று போன பெருமழை போல, நத்தை தனது கூட்டுக்கள் ஒடுங்குவது போல் அவனுடைய பாடல் தானாகவே தொலைந்து போனது. எதற்காக அவன் பாடலை நிறுத்தினான்? நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம். அவனுடைய சந்தோஷத்தை பறித்துக் கொண்டதுபோல் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது. மெதுவாக ரயிலின் உள்ளே திரும்பி நின்று கொண்டேன். சற்று நேரம் கழித்து அவன் மீண்டும் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.
ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள். கதவை ஒட்டிய முதல் கூபெவில் ஒரு குடும்பம் பொறுமையாக தாங்கள் கொண்டு வந்த புளிச்சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலை ஒட்டி ஒரு ஜோடி அமர்ந்து இருந்தது. புதுமணத் தம்பதி என்பது பார்த்தவுடன் புரிந்தது. பெண் ரொம்ப சின்னவராக இருந்தார். நிறைய பேசிக்கொண்டே வந்தார். அவள் கணவரோ அதில் சுவாரசியம் இல்லாமல் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் பேச்சை நிறுத்தி விட்டு ஜன்னலின் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் தேங்கி நின்றது . இதற்குள் ரயில் திண்டுக்கல்லை அடைந்து விட்டு இருந்தது.
ரயிலுக்குள் இரண்டு குறவர்கள் ஏறினார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையை துவைத்து பல மாதங்கள் இருக்கும். ரயிலில் நின்றவர்கள் எல்லாம் அவர்களைப் பார்த்து முகம் சுளித்தார்கள். ஒருவர் அவர்களிடம்.."டேய்.. இங்க எல்லாம் நிக்கக் கூடாது.. போ.. போய் கக்கூஸ் பக்கத்துல உக்காரு.." அவர்கள் எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? எனக்குப் புரியவில்லை. ரயிலுக்குள் பார்த்தேன். அந்தப் பெண்ணின் கணவர் அவள் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டிருந்தார். நான் கையோடு எடுத்துப் போயிருந்த "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை"யில் ஆழ்ந்து போனேன். கரூர் வந்தபின்தான் உட்கார இடம் கிடைத்தது.
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)
April 6, 2009
அயன் - திரை விமர்சனம்...!!!

April 2, 2009
பற பற பற.. பட்டாம்பூச்சி...!!!
ரொம்ப ஜாலியான மனிதர். மற்றவர்களை ஓட்டுவது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். மும்பையில் வேலை பார்க்கிறார். இவருடைய கற்பனை கவிதைகளும், கார்ட்டூன் குசும்புகளும் அட போட வைக்கும்.
போலிஸ் என்பதையும் தாண்டி எனக்கும் ராமிடம் பிடித்த விஷயம் -நல்ல மனிதர். தீடிர்னு காதல் கவிதை எழுதுவார். அடுத்த நாளே நாட்டுப் பற்றோட சல்யூட் வைப்பார். இன்னொரு முறை தன்னை அசத்திய மனிதர்கள் பற்றி.. எல்லாம் எழுதுபவர். பழமொழியில் சதம் கண்டவர்.
திருப்பூரில் இருந்து எழுதும் நண்பர் சொல்லரசன் சமூகத்தின் மீது தீராத கோபம் கொண்டவர். இவருடைய எல்லாப் பதிவுகளுமே ஏதோ ஒரு வகையில் அரசியல் மீதான கோபம் கொண்டதாகவே இருக்கும். கொஞ்சமாக, ஆனால் காட்டமாக எழுதுபவர்.
புகைப்படக் கலையில் அலாதி விருப்பம் கொண்டவர். யாரும் தொடாத தளங்களை பற்றி திடீர்னு கவிதைகள் எழுதுவார். அவ்வப்போது கதைகளும்... கொஞ்சம் அரசியல் கோபமும் உண்டு.
இளைஞர். சிவகாசியில் இருப்பவர். வாழ்க்கையின் கஷ்டங்களுக்கு இடையே தன்னுடைய விருப்பங்களை காக்க போராடி வருபவர். வித விதமான படங்களாக தேடி பதிவிடுவார். நகைச்சுவையாக படிக்க இவரது தளத்துக்கு சென்றால் போதும். கவிதைகளும் தத்துவமும் கூட உண்டு.








