August 16, 2010

உமாசங்கருக்காக - ஒரு விண்ணப்பம்

இந்த யோசனையைச் சொன்ன தருமி ஐயாவுக்கு நன்றி... உமாசங்கர் பிரச்சினை பற்றி தருமி அய்யா அவர்கள் எழுதிய இடுகையை இங்கே தருகிறேன்..

உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா? -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில் - ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.

இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை: அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.

இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.

வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....

நண்பர்களே.. உமாசங்கர் என்னும் அதிகாரியின் மீது ஏவப்பட்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிரான நம் மன உணர்வுகளைக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு.. இந்த ஒரு அதிகாரி என்றில்லாமல் நாளை இது ஒரு தொடர்கதை ஆகிவிடக்கூடும்.. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.. எனவே இது போன்ற அட்டூழியங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, உமாஷங்கருக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிப்போம்..

உங்களுக்கு விருப்பம் இருப்பின் மேலே சொல்லியிருப்பது போல புதன் அல்லது வியாழன் அன்று.. ஒரு நான்கு வரிகளை உங்கள் தளத்திலே போடுங்கள்..

"நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

நீங்கள் இதே வரிகளைத்தான் எழுத வேண்டும் என்றில்லை.. உங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.. ஆனால் இதை ஒரு சமுதாயக் கடமையாக எண்ணி தயவு செய்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்...

குறிப்புகள்:

தயவு செய்து இதை சாதி ரீதியாக அணுக வேண்டாம். பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ...

நிறைய வாசகர்களைப் பெற்றுள்ள பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். எனவே மறுபதிப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள்.

16 comments:

Gokulakrishnan said...

Good, But whatabout 10% commission govt officials? Can we support them? Please don't support grade "A' to "D" grade govt Officers, employees and staffs. Rarely one or two exceptable, remaining all bloody beggers begging money in post mortem and funeral also.
Who is this Uma Shankar? In 1996, he filed a case against the opposition party, he can't find any malpractices in IAS officers, secretaries, collectors activities?? in last 15 years? A big joke, all are stunt. He is trying to create a mass on his castebase votes.,like ex IAS Sivakaami. What these IAS officers did for their community people in their period. Is there any employment training centre run by these IAS officers???
They just enjoyed the government money, whenever the share for them is not given, they started to criticise the matter and publish the news to Media. Nowadays what media does? they blockmail the politicians, Criminals, Industrialists and the deal was Ok, then everything they wrote Positive, otherwise, they stsrt to criticise.

தமிழ் அமுதன் said...

நிச்சயம் செய்வோம்..!


யோசனை தெரிவித்த தருமி அய்யாவுக்கு நன்றி...!

tsekar said...

பதிவு மட்டும் போட்டால் போதாது ! படிக்கிற எல்லோரும் -பின்னூட்டம் போட வேண்டும் !!
இது அரசை யோசிக்க வைக்கும்

த சேகர்

Unknown said...

நமக்கு தெரிந்த ஒரே ஒரு நல்லவருக்காக... கட்டாயம் செய்வோம்..

தேவன் மாயம் said...

கருத்து அருமை கார்த்தி..

Joe said...

நல்லதொரு முயற்சி, நண்பா, பாராட்டுக்கள்!

பதிவர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.

Jerry Eshananda said...

I Do Support.

sheik.mukthar said...

Well said.Good.I am supporting you!

ஒரு நியாயவாதி எப்படி இருப்பான் said...

///தயவு செய்து இதை சாதி ரீதியாக அணுக வேண்டாம். பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ... ///--இது நல்லாருக்கு...

இறந்த காலங்களில் இந்த ஞானோதயம் வராவிட்டாலும் எதிர்காலத்தில் மறக்காமல் இருக்க வேண்டும்.

சாதி, மதம், இனம், மொழி மறந்து நியாயத்துக்கு மட்டுமே குரல் கொடுக்கும் நேர்மை நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

ramalingam said...

உமாசங்கர் மேல் தவறு இருக்கலாம். ஆனால் அரசு செய்தது மன்னிக்க முடியாத பழி வாங்கும் தவறு.

சுவாமிநாதன் said...

கண்டிப்பாக செய்வோம்.

Jey said...

என் ஆதரவு உண்டு.

தருமி said...

நண்பர்களே,

நாம் எடுக்கும் இந்த முடிவு பிடித்ததென்றால், நம் கையெழுத்தையும் இங்கே போடலாமே. வாருங்கள்.

மதுரை சரவணன் said...

ஆதரவு தெரிவிக்கிறேன். ஒன்று சேர்வோம்...பழிவாங்கும் படலம் தொடரக் கூடாது ... நம் குரல் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கவேண்டும். வாழ்த்துக்கள்

தருமி said...

நாளை நானிடுவதாக உள்ள இடுகையின் அடக்கம்:



உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.


அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Jey said...

இது பர்றிய பதிவு போட்டுட்டேன்.
http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_18.html