April 15, 2009

சிகரெட் - தனக்குத்தானே கொள்ளி..!!!!

முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பாக ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் செய்திப்படங்கள் காமிப்பார்கள். அதை பார்ப்பதற்காகவே தியேட்டருக்கு சீக்கிரம் போகும் பழக்கம் எனக்கு இருந்தது. இந்திய நாட்டுத் தலைவர்கள், பயணங்கள், தியாகிகள், சின்ன சின்ன கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும். செய்திப்படங்கள் போடும் பழக்கம் இப்போது சுத்தமாக மறைந்தே போய் விட்டது. ஆனால் அதிசயமாக, சமீபத்தில் அயன் படம் பார்க்க போனபோது மதுரையில் உள்ள தியேட்டரில் ஒரு படம் போட்டார்கள். அது ஒரு கார்ட்டூன் படம். அந்த படத்தின் பெயர்.." The first puff - புகைப்பழக்கத்தின் முதல் தருணம்.."
ஒரு சேரின் மேல் மனிதன் ஒருவன் அமர்ந்து இருக்கிறான். அவனுடைய உடல் இதய வடிவத்தில் இருக்கிறது. கீழே கிடக்கும் ஒரு பீடித்துண்டை எடுத்துப் புகைக்கிறான். அடுத்து அவன் புகைப்பது சிகரெட்டாக மாறுகிறது. இப்போது சிந்திக்கிறான். ஒரு குழாயை எடுத்து அதில் கஞ்சாவை நிரப்பி குடிக்கிறான். கடைசியாக போதை மருந்து. பேப்பரில் போட்டு சூடு பண்ணி அதையும் புகைக்கிறான். அவன் இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது அவனுடைய இதய வடிவிலான உடல் கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக மாறி வருகிறது. அவனுடைய இதயத்தை க்ளோசப்பில் காட்டுகிறார்கள். வேகமாக கறுப்பாக மாறி அதிவேகமாக துடிக்கத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் படாரென வெடித்துச் சிதறுகிறது.
படத்தின் கடைசியில் இரண்டு வரிகள் தோன்றுகின்றன. " the first puff - might be your last puff". மொத்தப்படமும் ரெண்டே நிமிடம்தான். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள். இசையும் அருமை. எனக்குத் தெரிந்த வரை நம் மக்கள் உடம்புக்கு ஆகாது எனத் தெரிந்தும் செய்யும் ஒரு கெட்ட காரியம் என்றால் அது புகை பிடிப்பதுதான். இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அன்றைக்கு தியேட்டரில்.. இடைவேளையின் போது என்னால் வெளியே நிற்கவே முடியவில்லை. எங்கும் புகை மண்டலம். தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும் உடலையும் பாழ் பண்ணி (passive smoking)... இவர்களை என்ன செய்வது?
எனக்கு அரசியல் கட்சிகளில் சுத்தமாக பிடிக்காத ஒரு கட்சி பா.ம.க. அதிலும் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் சுகாதாரத் துறை அமைச்சராக ஆனபோது மண்டை காய்ந்து போனேன். ஆனால், அவர் வாழ்க்கையிலேயே செய்த ஒரே உருப்புடியான விஷயம்.. புகையிலைக்கு எதிராக போராடியதுதான் என்று சொல்வேன். அவர் அதை அரசியல் காரணங்களுக்காக செய்து இருக்கலாம். ஆனால் அந்த முயற்சி ரொம்ப நியாயமானதே. அன்புமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் தன்னுடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெறாமல் பார்த்துக் கொண்டது ஒரு நல்ல உதாரணம். காரணம், நம் தமிழ் மக்களை சினிமா எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அதேபோல பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ததை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் எத்தனையோ மக்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
கிட்டத்தட்ட 400 விஷப் பொருட்களையும், 4000 வேதியியல் பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியதுதான் சிகரெட். புகை பிடிப்பதனால் எட்டு நொடிக்கு ஒரு மரணம் நிகழ்கிறதாம். கேன்சர், இதய நோய்கள் என சிகரெட்டால் வரும் பிரச்சினைகள் ஏராளம். முக்கியமாக ஆண்மைக்குறைவு ஏற்படவும் சிகரெட் காரணமாக இருக்கிறது. புகைப்பவர்களை மட்டும் அல்லாது புகையை உள்வாங்கும் அருகில் இருக்கும் மனிதர்களையும் சிகரெட் வெகுவாக பாதிக்கிறது. இன்று வெளிநாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைக்கிறார்கள். இது அவர்கள் கர்ப்பமாக இருக்கும்போது சிசுவின் மரணத்திற்கு வித்திடுகிறது.
நீர் நிரம்பிய பாட்டில் ஒன்றில் சின்ன ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகி ஓடுவதைபோல.. மனிதன் புகைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் உடலை விட்டு வெளியேறுகிறது. உண்மையை சொல்வதானால், மனிதன் உயிருடன் இருக்கும்போதே தனக்கு தானே வைத்துக் கொள்ளும் கொள்ளிதான் சிகரெட். புகைக்கும் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்... அடுத்த முறை நெருப்பை பற்ற வைக்கும்போது ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்பது நீங்கள் மட்டும் அல்ல.. அதில் உங்கள் குடும்பமும் அடக்கம். உங்களை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் புகைக்கும்போது அவர்களின் நலனையும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான் எரிக்கிறீர்கள். இதை படிக்கும் யாராவது ஒருவர் சிந்தித்தால் கூட அதுவே எனக்குப் போதும்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

81 comments:

Anbu said...

me the first anna

Anbu said...

படித்துவிட்டு வருகிறேன் அண்ணா

Anbu said...

\\சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள்.\\\

நீங்களும் சொல்ல வந்த விஷயத்தை நன்றாக கூறியுள்ளீர்கள் அண்ணா..

எனக்கும் சில நேரங்களில் மிகவும் எரிச்சலாக வரும் புகை பிடிப்பவர்களை பார்க்கும் போது..
பொது இடங்களில் நிற்கையில்..பேருந்து நிலையம்..இன்னும் சில..

Anbu said...

கொஞ்ச நாளாக ரொம்ப பிஸியா அண்ணா!!!!

வேத்தியன் said...

This is a serius matter...
Wrote about a valid, good point i think...
Congrats mate...

வேத்தியன் said...

" the first puff - might be your last puff".//

Superb...

வேத்தியன் said...

I have posted a article about 'Passive Smoking/ Second hand smoking'...
If you can, read this...

http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_18.html

வேத்தியன் said...

Voted...

மேவி... said...

nalla karuthu ulla padivu....

மேவி... said...

naan adive panni 3 persons hav left smoking

Prabhu said...

நல்லா சொல்லுங்க! தியேட்டர்ல இருக்கும் போதெல்லாம் சரியான கடுப்ப இருக்கும். அத விட கொடும பஸ் ஸ்டாண்டல வெயிட் பண்ணும் போது புகை புடிக்கிறது. விலகி போய் புடிக்க மாட்டானுங்க. நம்மலாலும் விலக முடியாது, பஸ் வருங்கிறதால.

அகநாழிகை said...

கார்த்தி,
நன்றாக எழுதியிருந்தீர்கள். புகை பிடிப்பவர்களையும், அருகிலிருப்போரையும் பாதிக்கிறது என்பதெல்லாம் உண்மைதான். புகையிலையை தடுத்து நிறுத்தும் முயற்சியின் தொடக்கம் எங்கிருக்கிறது ? அரசிடமிருந்துதான் அது தொடங்கப்பட வேண்டும். ‘மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு‘ சரிதான். “வேற யாருக்குதாண்டா அது நல்லது“ என்று கவுண்டமணி பாணியில் கூக்குரலிடத் தோன்றுகிறது.
அனைத்திற்குமே கேடு என்றால் பின் எதற்காக ஒரு மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் அதை சந்தைப்படுத்த வேண்டும். அதன் பின்னாலிருக்கும் நேரடி மற்றும் மறைமுக வருமானங்களை கருதியே இது நடக்கிறது. அதுபோலத்தான் புகையிலை மீதான எந்த தடையும் விதிக்கப்படாமல் இருப்பது. எனக்கு புகைக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் என் நண்பர்களில் பலருக்கு உண்டு. புகை, மது, மாது பழக்கங்கள் அனைத்துமே ஆதிநாட்கள் முதல் மனிதனுக்குள் ரகசியமாய் ஒளிந்து கொண்டிருப்பவை. வாய்ப்பு கிடைக்கிறவர்கள் வாழ்ந்து பார்க்கிறார்கள்.
புகைப் பழக்கத்தினால் புற்றுநோய் வருகிறது என்பதெல்லாம் உலக அரசியல். எய்ட்ஸ், போலியோ, புகைப்பழக்கம் தடுப்பு இதெல்லாம் உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகளாவிய நிதியமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறும் உத்திகள். கடந்த சில வருடங்களில் ‘ஆணுறை‘ இலவசமாக வழங்கப்பட்டதாக மிகப்பெரிய மோசடியே இந்தியாவில் நடந்தேறியுள்ளது. போலியோ மருந்து விஷயத்திலும் இதேதான். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
புகையிலைப் பழக்கத்தினால் எத்தனை பேருக்கு புற்றுநோய் வந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ? சராசரி மனிதனின் ஆயுள்காலமான 60-65 ஆண்டுகளில், வாழ்நாளின் இறுதியில் மட்டுமே மனிதனுக்கு புகையிலைப் பழக்கத்தால் அதிக உடல் சீர்கேடு ஏற்படுகிறது. சிலருக்கு அதீத புகைப்பழக்கத்தினால் 50 வயது முதலே சளி, இரத்த அழுத்தம், நுரையீரல் குறைபாடுகள் போன்றவை தோன்றுகிறது. மற்றபடி புகை பிடிக்கும் 100 பேரில் 80 பேர் சராசரி உடல் நிலையுடன் வாழ்கிறார்கள் என்பதே உண்மை. இது புகைப்பழக்கத்திற்கோ, மதுவிற்கோ ஆதரவாக சொல்லப்படுவதில்லை. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சுதானே... நெருக்கடியான பல சூழல்களில் வாழ நேரிடும், மனச்சிக்கல்கள் நிறைந்த இன்றைய மனிதனுக்கு அன்றாட வாழ்வில் இறுக்கமற்ற சகஜ நிலை ஏற்படுத்திக்கொள்ள சிறு சிறு போதைகள் தேவைப்படுகிறது. இந்த சிறு சந்தோஷம் கூட இல்லையெனில் மனிதனின் நிலை மோசமாகிவிடும். சிறு சிறு போதையென்பது சிலருக்கு புகைப்பிடித்தல், சிலருக்கு மது, உங்களுக்கும், எனக்கும், நம்மைப்போன்றவர்களும் எழுத்து என எல்லாமே ஒரு தற்காலிக விடுபடல்தான்.

அன்புடன்,
பொன். வாசுதேவன்

ராஜ நடராஜன் said...

இந்தப் பதிவு எனக்கில்லை.இருந்தாலும் சிகரெட் என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு விசயமென்பதால் அதுபாட்டுக்கு காசை ஆட்டயப் போடுது.தமிழக கால வெப்பநிலைக்கு சிகரெட் தேவையில்லாத ஒன்றே.அதுவே ரஷ்யா போன்ற பனிப்படலத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்கிட்ட சொன்னா ஒத விழும்:)

Dhavappudhalvan said...

நானும் பேசுபவர்களிடம் முடிந்தவரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். பெரிய கொடுமைதான் இது. புரிந்துக் கொண்டால் நலமாக வாழலாம். முடிந்தவரை சொல்லி பார்ப்போம்

Dhavappudhalvan said...

அருமையாய் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள்.

வினோத் கெளதம் said...

கார்த்தி சூப்பர் பதிவு.

புகைப்பிடிபவர்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்.
அதுவும் தியேட்டர் போன்ற சில பொது இடங்களில் சில சமயம் மூச்சு கூட விட முடியாது.
நான் காலேஜ் படிக்கும் பொழுது சில நண்பர்கள் வர்புரிதியும் கற்று கொள்ளாத ஒரு பழக்கம் இந்த சிகரட்.

//தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை.//

ரொம்ப தேங்க்ஸ்.

ஹேமா said...

பாண்டியன்,பயனுள்ள பதிவு.வருடத்திற்கு வருடம் சிகரெட்டின் விலையை ஏற்றினாலும்,வாங்குபவர்கள் வாங்கி ஆறாம் விரலாய் வைத்தபடிதான்.நினைத்தாலே அருவருப்பான நாற்றம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
நீங்களும் சொல்ல வந்த விஷயத்தை நன்றாக கூறியுள்ளீர்கள் அண்ணா..
கொஞ்ச நாளாக ரொம்ப பிஸியா அண்ணா!!!!//

நன்றி அன்பு.. கல்லூரியில் கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. பரிட்சைகள் வேறு தொடங்கி விட்டன.. இறுதி நாட்கள் என்பதால் கொஞ்சம் பிசி.. அவ்ளோதான்..

ச.பிரேம்குமார் said...

இது இது இதத்தான் பாண்டியன் எதிர்பார்த்தோம்.

அருமையான பதிவு. வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
This is a serius matter...
Wrote about a valid, good point i think...Congrats mate...Superb...
I have posted a article about 'Passive Smoking/ Second hand smoking'...If you can, read this...//

நன்றி நண்பா.. கொஞ்சம் சீரியசாகத்தான் எழுதினேன்.. உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.. உங்கள் பதிவையும் படித்து விட்டேன்.. பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mayvee said..
nalla karuthu ulla padivu....
naan adive panni 3 persons hav left smoking//

நன்று நண்பா.. உங்களால் மூன்று பேர் திருந்தினர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Pappu said..
நல்லா சொல்லுங்க! தியேட்டர்ல இருக்கும் போதெல்லாம் சரியான கடுப்ப இருக்கும். அத விட கொடும பஸ் ஸ்டாண்டல வெயிட் பண்ணும் போது புகை புடிக்கிறது. விலகி போய் புடிக்க மாட்டானுங்க. நம்மலாலும் விலக முடியாது, பஸ் வருங்கிறதால.//

நான் அதைத்தான் சொன்னேன் நண்பா.. அவர்களால் மற்றவர்களுக்கும் பயங்கரத் தொல்லை என்று.. உணர்ந்தால் சரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை..//

புரிகிறது நண்பா.. நீங்கள் சாதரண மனிதனின் கோணத்தில் பார்க்காமல் உளவியல் ரீதியாக சொல்கிறீர்கள்.. எல்லாருக்கும் எதோ ஒரு ரெலாக்ஸ் தேவைபடுகிறது.. ஆனால் அதை மற்றவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது அல்லவா.. உங்கள் பதிலியே ஒரு பதிவாக போடலாம் போல.. இத்தனை ஆர்வமாக படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராஜ நடராஜன் said..
இந்தப் பதிவு எனக்கில்லை.இருந்தாலும் சிகரெட் என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு விசயமென்பதால் அதுபாட்டுக்கு காசை ஆட்டயப் போடுது.தமிழக கால வெப்பநிலைக்கு சிகரெட் தேவையில்லாத ஒன்றே.அதுவே ரஷ்யா போன்ற பனிப்படலத்துல உட்கார்ந்துகிட்டு இருக்கிறவங்கிட்ட சொன்னா ஒத விழும்:)//

ஆகா.. நண்பர் புகைப்பவரா.. சரி நண்பா.. கொஞ்சம் பார்த்து யோசிச்சு செய்ங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Dhavappudhalvan said..
நானும் பேசுபவர்களிடம் முடிந்தவரை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். பெரிய கொடுமைதான் இது. புரிந்துக் கொண்டால் நலமாக வாழலாம். முடிந்தவரை சொல்லி பார்ப்போம் அருமையாய் நினைத்ததை எழுதியிருக்கிறீர்கள்.//

உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் நண்பா.. எனக்கென்ன என்று ஒதுங்காமல் எல்லோரும் இதை செய்ய வேண்டும்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
கார்த்தி சூப்பர் பதிவு.
புகைப்பிடிபவர்கள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்.அதுவும் தியேட்டர் போன்ற சில பொது இடங்களில் சில சமயம் மூச்சு கூட விட முடியாது.நான் காலேஜ் படிக்கும் பொழுது சில நண்பர்கள் வர்புரிதியும் கற்று கொள்ளாத ஒரு பழக்கம் இந்த சிகரட்.//

ரொம்ப நல்ல விஷயம் நண்பா.. நானும் எனது கல்லூரி நாட்களில் தம்மடிக்க மறுத்து சீனியர்களிடம் மொத்து வாங்கி இருக்கேன்..

////தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை.//

ரொம்ப தேங்க்ஸ்.//

ஆகா.. இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா.. மிஸ் பண்ணிட்டேனே.. ;-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
பாண்டியன்,பயனுள்ள பதிவு.வருடத்திற்கு வருடம் சிகரெட்டின் விலையை ஏற்றினாலும்,வாங்குபவர்கள் வாங்கி ஆறாம் விரலாய் வைத்த படிதான்.நினைத்தாலே அருவருப்பான நாற்றம்.//

என்ன தோழி செய்வது..மக்கள் இதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.. இதில் கொடுமை என்னவென்றால் புகைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள்தான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
இது இது இதத்தான் பாண்டியன் எதிர்பார்த்தோம்.அருமையான பதிவு. வாழ்த்துகள்//

நன்றி நண்பா.. என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக எழுத முயற்சிக்கிறேன்..

Anonymous said...

சென்னை சங்கமம் தியேட்டரில் படம் போடுவதற்கு முன் ஒரு விளம்பரம்.

அந்த விளம்பரத்தில் வருபவர் தன் மகன் முன்னே சிகரெட் குடிக்கிறhர்.

மகனிடம் காசு கொடுத்து பீடி வாங்கி வர சொல்கிறhர்.

கடைக்கு செல்கின்ற மகன் தந்தைக்கு தெரியாமல் தனக்கும் ஒன்று வாங்கி பத்த வைத்துக்கொள்கிறhன்.

பிறகு அவன் பெரியவனாக ஆவது போல் காட்டுகிறhர்கள். அப்போது அவன் தந்தை முன் சிகரெட் குடித்து புகையை ஊதி விடுகிறhன்.


அப்போது எழுத்து போடுகிறhர்கள். நீங்கள் என்ன பின்பற்றுகிறீர்களே... அதே உன் மகன் பின்பற்றுவான் .


நல்ல விழிப்புணர்வு விளம்பரம் இல்லீயா.... இது போல் மற்ற தியேட்டர்காரர்களும் பின்பற்றலாம்.

சொல்லரசன் said...

//நீங்கள் புகைக்கும்போது அவர்களின் நலனையும் நம்பிக்கையையும் சேர்த்துத்தான் எரிக்கிறீர்கள். இதை படிக்கும் யாராவது ஒருவர் சிந்தித்தால் கூட அதுவே எனக்குப் போதும்..!!!//

யாரை மனதில் வைத்து எழுதிய பதிவு இது.

Anonymous said...

இதான் நம்ம கார்த்தி!

Suresh said...

//the first puff - might be your last puff". மொத்தப்படமும் ரெண்டே நிமிடம்தான். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள்.///

அருமையான வார்த்தைகள் மச்சான் பிண்ணிட்ட ஒரு நல்ல பதிவு

ஆ.சுதா said...

மிக அருமையான பதிவு.
பயனுள்ளது.

சின்னப் பையன் said...

மிக அருமையான பதிவு.
பயனுள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு, நல்ல வேண்டுகோள் கார்த்திகைப் பாண்டியன் .. என் அனுபவத்தில் புகைப்பிடிப்பவர்கள் இதை காதில் வாங்கிகொள்ளவே மாட்டார்கள்.. இப்படிப்பட்ட வேண்டுகோள் ஏனோ அவர்களுக்கு எரிச்சலைதான் கொடுக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சிந்திக்கமாட்டார்கள்... ம்ம்ம்ம்ம் என்ன செய்ய

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
நல்ல விழிப்புணர்வு விளம்பரம் இல்லீயா.... இது போல் மற்ற தியேட்டர்காரர்களும் பின்பற்றலாம்.//

நல்ல விளம்பரமாக உள்ளது நண்பா.. இது ஒரு நல்ல விஷயம்.. கண்டிப்பாக மற்றவர்களும் பின்பற்றலாம்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
யாரை மனதில் வைத்து எழுதிய பதிவு இது.//

அய்யய்யோ நண்பா.. சத்தியமா இது யாரையும் நினைவில் வச்செல்லாம் எழுதல.. அந்தப் படத்தை பார்த்தவுடனே எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன்.. மத்தபடி இதுல சூது எல்லாம் கிடையாது.. இந்தப் பதிவால... யாரவது.. கவனிங்க.. யாரவது ஒருத்தர் யோசிச்சாங்கன்னா போதும்னுதான் எழுதினேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
இதான் நம்ம கார்த்தி!//

நம்பிக்கைக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
அருமையான வார்த்தைகள் மச்சான் பிண்ணிட்ட ஒரு நல்ல பதிவு//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம said..
மிக அருமையான பதிவு.
பயனுள்ளது.//

நன்றி நண்பரே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ச்சின்னப் பையன் said..
மிக அருமையான பதிவு.
பயனுள்ளது.//

ஆகா ரிபீட்டா.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said...
நல்ல பதிவு, நல்ல வேண்டுகோள் கார்த்திகைப் பாண்டியன் .. என் அனுபவத்தில் புகைப்பிடிப்பவர்கள் இதை காதில் வாங்கிகொள்ளவே மாட்டார்கள்.. இப்படிப்பட்ட வேண்டுகோள் ஏனோ அவர்களுக்கு எரிச்சலைதான் கொடுக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டார்கள்... ம்ம்ம்ம்ம் என்ன செய்ய//

நீங்கள் அனுபவசாலி நண்பா.. புகைபிடிக்கும் எனது நண்பர்களே இதைப் படித்து விட்டு உனக்கு எதற்கு வேண்டாத வேலை என்றுதான் கோபித்துக் கொள்கிறார்கள்.. நாம் சொல்வது அவர்களின் நன்மைக்காகத்தான் என்பதை உணரா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்..? :-(

வழிப்போக்கன் said...

நல்ல விழிப்புணார்வு மிக்க பதிவு...
எண்ணத்தை எழுத்தாக்கியிருகிறீர்கள் வாழ்த்துக்கள்...

Unknown said...

/--கிட்டத்தட்ட 400 விஷப் பொருட்களையும், 4000 வேதியியல் பொருட்களையும் தன்னுள்ளே அடக்கியதுதான் சிகரெட்.--/

என்னுடைய நண்பர்களில் சிலரிடம் புகைப் பழக்கத்தை விட்டு விடுமாறு கெஞ்சிககொண்டுதான் இருக்கிறேன்.

என்ன செய்வது ஆண்மையின் அடையாளமென விளம்பரம் செய்யப்படுவதால் இளசுகளைக் கவர்ந்துவிடுகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றிங்க.. என்னைப் பின்தொடர்வதற்கும் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Enathu payanam said..
என்னுடைய நண்பர்களில் சிலரிடம் புகைப் பழக்கத்தை விட்டு விடுமாறு கெஞ்சிககொண்டுதான் இருக்கிறேன். //

முதல் வருகைக்கு நன்றி நண்பா.. யாரவது ஓரிருவர் திருந்தினாலும் சந்தோஷமே..

நையாண்டி நைனா said...

பதிவை படிச்சதுலே கொஞ்சம் 'ரென்சன்' மிகுதியா இருக்கு. போய் ஒரு 'தம்' போட்டுட்டு வந்து பதில் சொல்றேன்.

Raju said...

நீங்க இப்படியெல்லாம் பதிவு போடுவீங்கனு தெரிஞ்சுதான், சிகரெட் பிடிக்கற பழக்கத்தை நான் எட்டாவது படிக்கும்போதே விட்டுட்டேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
பதிவை படிச்சதுலே கொஞ்சம் 'ரென்சன்' மிகுதியா இருக்கு. போய் ஒரு 'தம்' போட்டுட்டு வந்து பதில் சொல்றேன்.//

உங்ககிட்ட சொன்னேன் பாருங்க.. ஐயோ.. ஐயோ.. என்னை நானே நெருப்பால சுட்டுக்கணும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
நீங்க இப்படியெல்லாம் பதிவு போடுவீங்கனு தெரிஞ்சுதான், சிகரெட் பிடிக்கற பழக்கத்தை நான் எட்டாவது படிக்கும்போதே விட்டுட்டேன்....//

ஆகா.. என்ன ஒரு பொறுப்பு.. அவ்ளோ நல்ல பயபுல்லையா நீயி.. மனசு குளிர்ந்து போச்சுப்பா..

பட்டாம்பூச்சி said...

உபயோகமான பதிவு.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு உறைக்குமோ தெரியல.

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி பட்டாம்பூச்சி..
யாராவது கொஞ்சம் யோசிச்சாங்கன்னா கூட போதும்..

Mohan said...

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க! அதுவும் இந்த பீடி நாற்றம் இருக்கிறதே அப்பப்பா கொன்னு
விடும். புகைப் பிடிப்பவர்களுக்கு புரிந்தால் சரிதான்!

தீப்பெட்டி said...

சூப்பர் பதிவு

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mohan said..
நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க! அதுவும் இந்த பீடி நாற்றம் இருக்கிறதே அப்பப்பா கொன்னு
விடும். புகைப் பிடிப்பவர்களுக்கு புரிந்தால் சரிதான்!//

ஓஒ..நண்பர் நேரடியாவே பாதிக்கப்பட்டு இருக்கீங்க.. நீங்க சொல்ற மாதிரி புரிஞ்சா சரிதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said..
சூப்பர் பதிவு//

நன்றி நண்பரே..

புல்லட் said...

அற்புதமான பதிவு சேர்... கடந்த வாரம் மிக மிக முக்கியமான அலுவல்கள் இருந்ததால் வலைப்பூ பக்கம் அதிகம் நேரம் செலவிடமுடியவில்லை.. மன்னிக்கவும்...

அவன் புத்தகம் வாசித்துள்ளீர்களா? சிவசங்கரியின் படைப்பு... வாசித்துப்பாருங்கள்.. :)

குமரை நிலாவன் said...

\\சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் தெளிவாக சொல்லி இருந்தார்கள்.\\\

" the first puff - might be your last puff".

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு உறைக்குமோ தெரியல.

அத்திரி said...

சிகரெட்டும் வணிகமும் பின்னி பிணைந்துள்ளது.. அதன் பின்னால் அரசியல்...... ம்ம்ம்ஹும்

ராம்.CM said...

எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை.என் அருகில் புகைபிடிப்பவரை கண்டால் அவரைவிட்டு விலகி வந்துவிடுவேன்.அதேநேரத்தில் நான் பணியில் இருந்தால் வயதுவித்தியாசம் பார்க்காமல் அவரை அபராதத்தொகை கட்டாமல் அனுப்பவும் மாட்டேன்.(முறையான ரசீதுடன்.)

Anonymous said...

நிஜமாவே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை கா.பா!

அருமை!

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said..
அற்புதமான பதிவு சேர்... கடந்த வாரம் மிக மிக முக்கியமான அலுவல்கள் இருந்ததால் வலைப்பூ பக்கம் அதிகம் நேரம் செலவிட முடியவில்லை.. மன்னிக்கவும்...
அவன் புத்தகம் வாசித்துள்ளீர்களா? சிவசங்கரியின் படைப்பு... வாசித்துப்பாருங்கள்.. :)//

வாங்க தோழா.. லேட்டா வந்தா என்ன பரவா இல்லை.. நீங்க சொல்லும் புத்தகத்தை வாசித்தது கிடையாது.. முயற்சிக்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
சிகரெட்டும் வணிகமும் பின்னி பிணைந்துள்ளது.. அதன் பின்னால் அரசியல்...... ம்ம்ம்ஹும்//

நீங்க சொல்றது ரொம்ப சரி நண்பா.. இதுல அரசியல் சூதும் இருக்கு.. ஆனா பொதுமக்களா பார்த்து ஏதாவது செய்யலாமே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை.என் அருகில் புகை பிடிப்பவரை கண்டால் அவரைவிட்டு விலகி வந்துவிடுவேன்.அதேநேரத்தில் நான் பணியில் இருந்தால் வயது வித்தியாசம் பார்க்காமல் அவரை அபராதத்தொகை கட்டாமல் அனுப்பவும் மாட்டேன்.(முறையான ரசீதுடன்.)//

உங்களைப் பற்றி ஒவ்வொரு விஷயம் தெரிய வரும்போதும் என்னுடைய ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.. நீங்கள் எங்கள் நண்பனாக இருக்கு நாங்கள் ரொம்ப பெருமைப்படுகிறோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிசி said..
நிஜமாவே இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை கா.பா!
அருமை!//

என்னப்பா.. கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. வீட்டுப்பக்கம் ரொம்ப பிசியா? வாழ்த்துக்கு நன்றி நண்பா..

sarathy said...

இந்த பஞ்சு வைச்ச சிகரெட்டுனு சொல்றாங்களே அது பரவாயில்லையா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//sarathy..//
நீங்க வானத்தை போல உள்ளம் கொண்டவர் நண்பா.. என்ன ஒரு வெகுளித்தனம்.. எனக்கு புல்லரிக்குது போங்க..

தேவன் மாயம் said...

தண்ணி அடிப்பவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். எங்காவது ஓரமாக மல்லாந்து விடுவார்கள்.. அவர்களால் மற்றவர்களின் உடல்நலம் பாதிக்கப் படுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்..? தங்களின் உடல் நலத்தையும் கெடுத்து.. அடுத்தவரின் நிம்மதியையும் உடலையும் பாழ் பண்ணி (passive smoking)... இவர்களை///

சொன்னா கேட்காமல் இன்னும் பொது இடங்களில் சிகரெட் குடிக்கிறார்கள்!
சட்டம் பேப்பரில்தான் உள்ளது!

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம புலம்ப மட்டும்தானே நண்பா முடியுது..சட்டத்தை தீவிரமாக்கினால் இந்த நிலை மாறலாம்..

பொன்.பாரதிராஜா said...

சரிதான் கார்த்தி...பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை போட்டார்களே?ஒழுங்காக இருக்கிறதா?இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டீர்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்தக் கவலையின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு பாரதி.. நான் சட்டத்தை விட தனி மனித ஒழுக்கத்தைத் தான் நம்புகிறேன்.. நாம் ஒவ்வொருவருமே திருந்தினால் போதாதா?

Anonymous said...

நல்ல பதிவு வெற்றின் வாசலை அடைய வேண்டாமா? அதனால இப்போதைக்கு 75 அடித்து விட்டு செல்கிறேன்.

Anonymous said...

ரெடி 1

Anonymous said...

75 வந்த வேளை முடிஞ்சுது. அப்புறமா வர்ரேன்.

Karthik Lollu said...

vaalkaiyil tham pidi...nee vetri pera tham pidi.. thadaigal vandaalum tham pidi...


adra adra adra adra adra DUM!!!!

DUM na manaurudi

Karthik Lollu said...

சிகரெட்டு பிடித்து

சீர்கெட்டு போகாதே...

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த்..//

நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik lollu//

karutthu sonna kaarthikku nandri

Kris said...

Nalla Velai intha mattera soninga illaina engaluku theriamaiyeia poierukum

Ungal karuthuraiku mika vandanam

Vandanam

அய்யனார் சாமி said...

புகையைப் பற்றி கருத்து சொன்னது சரி. மூடிக்கிட்ட அதமட்டும் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும். உன் வலை தளத்தைத் நாலு பேருக்கு சொல்ல அனுப்ப தோன்றிருக்கும். தொடர்ந்து படிக்கவாவது தோன்றியிருக்கும். எவன் நல்லது செய்தாலும் அதை எல்லாத்தையும் மூடிகிட்டு ஏத்துக்கனும். அதுல உங்க சாக்கடை அரசியல் புத்தியைக் காட்டக்கூடாது. ஒட்டு மொத்த பெரும் முதலாளிகளையும் எதுத்துகிட்டு டாக்டர் அன்புமணி கொண்டுவந்ததுதான் புகையிலைக்கு எதிரான சட்டம். அத ஒழுங்கா சுட்டிக்காட்டுவதோடு நிறுத்தியிருந்தால் நீ உண்மையிலேயே ஒழுங்கானவன். அதவிட்டு, எனக்கு பிடிக்காத கட்சி, வெங்காயம் , லொட்டு லொசுக்கு... இதலெல்லாம் உன்கிட்ட எவன் கேட்டான்? தமிழ் தொலைக்காட்சிகளில் பெப்சி, கோக், புகை, மது, திரைப்படம் போன்றவற்றை விளம்பரம் செய்யாத ஒரே தொலைக்காட்சி நீ பிடிக்காதுன்னு சொன்னியே அந்த கட்சியோடு மக்கள் தொலைகாட்சிதான் தெரியுமா? நீயெல்லாம் வலைதளம் நடத்தி என்ன கிழிக்கப்போற... போ... போய் புள்ளைங்கள நல்லா படிக்க வை
- அய்யனார் சாமி

Anonymous said...

புகையைப் பற்றி கருத்து சொன்னது சரி. மூடிக்கிட்ட அதமட்டும் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும். உன் வலை தளத்தைத் நாலு பேருக்கு சொல்ல அனுப்ப தோன்றிருக்கும். தொடர்ந்து படிக்கவாவது தோன்றியிருக்கும். எவன் நல்லது செய்தாலும் அதை எல்லாத்தையும் மூடிகிட்டு ஏத்துக்கனும். அதுல உங்க சாக்கடை அரசியல் புத்தியைக் காட்டக்கூடாது. ஒட்டு மொத்த பெரும் முதலாளிகளையும் எதுத்துகிட்டு டாக்டர் அன்புமணி கொண்டுவந்ததுதான் புகையிலைக்கு எதிரான சட்டம். அத ஒழுங்கா சுட்டிக்காட்டுவதோடு நிறுத்தியிருந்தால் நீ உண்மையிலேயே ஒழுங்கானவன். அதவிட்டு, எனக்கு பிடிக்காத கட்சி, வெங்காயம் , லொட்டு லொசுக்கு... இதலெல்லாம் உன்கிட்ட எவன் கேட்டான்? தமிழ் தொலைக்காட்சிகளில் பெப்சி, கோக், புகை, மது, திரைப்படம் போன்றவற்றை விளம்பரம் செய்யாத ஒரே தொலைக்காட்சி நீ பிடிக்காதுன்னு சொன்னியே அந்த கட்சியோடு மக்கள் தொலைகாட்சிதான் தெரியுமா? நீயெல்லாம் வலைதளம் நடத்தி என்ன கிழிக்கப்போற... போ... போய் புள்ளைங்கள நல்லா படிக்க வை