December 23, 2008

சிறந்த மொக்கை படங்கள் 2008....!!!!


2008 ஐ பொறுத்த வரை தமிழ் சினிமாவிற்கு போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் ஊத்தி கொண்டன. அப்படி இப்படி என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் ரசிகர்களின் தலையில் மசாலா அரைத்த, தயாரிப்பாளரின் தலையிலும் துண்டை போட்ட டாப் டென் படங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.

1. குருவி

சென்ற ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படம். தரணி, விஜய், திரிஷா, என நம்பி போன எல்லோருக்கும் ஆப்பு. சூப்பர்மேன் கூட செய்ய யோசிக்கும் சாகசங்களை கூசாமல் செய்திருந்தார் விஜய். எல்லாத்தையும் விட பெரிய காமெடி, இந்த படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடியது, அதோடு இல்லாமல் அதை டிவியில் வேறு ஒளிபரப்பினார்கள். அழகிய தமிழ்மகனை தொடர்ந்து விஜயின் ரெண்டாவது தோல்வி படம். வில்லு படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துக்கள்.

2. குசேலன்

2008இன் மிகப்பெரும் ஏமாற்றம். ரஜினியின் பெயரை ரிப்பேராக்கியதே இந்த படத்தின் சாதனை. பரமசிவன், தொட்டால் பூ மலரும் போன்ற அதி அற்புத படங்களை எடுத்த பிறகும் வாசுவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரிடம் இந்த படத்தை கொடுத்தது ரஜினியின் மாபெரும் தவறு. ரஜினி கவுரவ வேடத்தில் தான் வருகிறார் என்றாவது அடக்கி வாசித்து இருக்கலாம். படத்தின் வியாபாரத்திற்காக ரஜினியை பெயரை ஓவராக பயன்படுத்தியது தப்பாகி போனது. கர்நாடக பிரச்சினை, மன்னிப்பு என எல்லா விதத்திலும் ரஜினியை பாடாய் படுத்தி விட்டு படம் டப்பாவிற்குள் படுத்து கொண்டது.

3. காளை

தியேட்டருக்குள் வந்தவர்களை எல்லாம் வருவியா வருவியா என்று சிம்பு துரத்தி துரத்தி முட்டிய படம். டப்பா கதைக்கு ஏகப்பட்ட பில்ட் அப் வேற. குட்டி பிசாசே பாடல் மட்டும் பிரபலம் ஆனது. திமிர் படத்தை நம்பி போனால் தருண் கோபி ரசிகர்களை செமையாக மண்டை காய வைத்தார். யார் திருந்தினாலும் சிம்பு திருந்த போவதில்லை என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்தது.

4. சத்யம்

விஷாலின் டெரர் படம். போலீஸ், சிக்ஸ் பேக், ஆச்சா ஊச்சா என பில்ட் அப் கொடுத்து செமையாக வாங்கி கட்டிக்கொண்ட படம். நயன்தாராவை இதற்க்கு மேல் கேவலமாக யாராலும் காட்டி இருக்க முடியாது. நான் பொறுக்கி இல்ல, போலீஸ் என விஷால் சீரியசாக வசனம் பேச மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உபேந்திரா ஒருவர் மட்டுமே இந்த படத்தால் தமிழுக்கு கிடைத்த உருப்படியான விஷயம்.

5. இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

வடிவேலு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட படம். கடைசி வரை இது காமெடி படமா இல்லை சீரியஸ் படமா என்றே புரியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக இருபத்து இரண்டு படங்களை வேண்டாம் என்றாராம் வடிவேலு. ஐயோ பாவம்.. இந்த டுபுக்கு படத்துக்காக எவ்வளவு தியாகம் பண்ணி இருக்காரு.. ரொம்ப நல்லவரு சார் நீங்க..

6. அரசாங்கம்

புரட்சி கலைஞரின் 150ஆவது படம். இந்தியாவையும் தாண்டி கனடா வரை போய் கேப்டன் அங்கேயும் தீவிரவாதிகளை பந்தாடும் வழக்கமான கதை. ரெண்டு கதாநாயகிகள் வேற. அரசியல் பேசாமல் நடித்தும் படம் ஓடவில்லை.

7. சக்கரக்கட்டி

சாந்தனு அறிமுகமான படம். கலைப்புலி தாணுவின் மகன் பிரபு இயக்குனர். A.R. ரகுமானின் துள்ளல் இசை. எல்லாம் இருந்தும் கதை என்னும் விஷயம் இல்லாததால் படம் பப்படமாகி போனது.

8. ஏகன்

பில்லாவின் வெற்றிக்கு பின் அஜித் நடித்த படம். முதல் முறையாக தல காமெடி செய்ய முயற்சி செய்து இருந்தார். ராஜு சுந்தரத்தின் தெளிவில்லாத திரைக்கதை, மொக்க காமெடி என எல்லாம் சேர்ந்து படத்தை காலி செய்து விட்டன.

9. பீமா

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் படம். இயக்கம் லிங்குசாமி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். வித்தியாசமான கிளைமாக்ஸ். இருந்தும் படம் படுத்து கொண்டது. காரணம் - கதை. எத்தனை நாள் தான் ஒரே ரவுடி கதையை மாற்றி மாற்றி எடுப்பார்களோ. இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஏ. எம். ரத்தினம் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

10. வாரணம் ஆயிரம்

சூர்யா போன்ற ஒரு அற்புதமான நடிகரை எந்த அளவு வீணடிக்க முடியுமோ அந்தளவுக்கு வீணடித்த படம். பாடல்களின் தயவால் படம் A சென்டர்களில் தப்பித்து கொண்டது. செந்தில் அருணாச்சலம் படத்தில் சொன்னது போல முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம்.

அடுத்த வருடத்தில் இருந்தாவது நடிகர்களை நம்பாமல் கதையை நம்பி படம் எடுக்கும் வழக்கம் வந்தால் மட்டுமே, நமக்கு நல்ல திரைப்படங்கள் கிடைக்கும்!!!

3 comments:

Anonymous said...

hello karthigai!
nalla padangala alasarthu kastame illa. ippadi mokkai padangala list poteennga parunga anga neenga nikareenga. intha part mattum illama i like ur ponni-in selvan blog very much. keep filling up the page.
Bye!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹலோ சார்,
உங்க ப்ளாக் சூப்பர்.குறிப்ப டாப் டென் மொக்கை படங்கள் விமர்சனம் டாப்பு. சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திரிச்சு. நீங்க நேர்ல சொல்ற மாதிரியே இருந்திச்சு. அவனும் அவளும் ஓகே. நானும் அவளும்னு எப்ப எழுதபோரிங்க? ம்ம்.... கெளப்புங்கள்.......
அன்புடன்,
த.பிரபு
(Final E&I)