December 31, 2008

நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப்போன ஜாதியும்...!!!

நான் கோயம்பத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம். அப்பா ரயில்வேயை சேர்ந்தவர் என்பதால் ஓசி பாஸ் உண்டு. சனி மற்றும் ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் ரயிலை பிடித்து மதுரைக்கு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமை மதிய நேர வகுப்புக்களை நான் அட்டென்ட் செய்ததே கிடையாது. (என்னமோ மற்ற நாளெல்லாம் ரொம்ப ஒழுங்கு மாதிரி...). அப்போது இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என்று ஒரு ட்ரைன் இருந்தது. மாலை நாலு மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி இரவு ஒன்பது மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து விடும். அந்த வண்டி தான் நம்முடைய ஆபத்பாந்தவன். காலேஜ் கட்டடித்து விட்டு ரயிலில் ஏறி வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன்.

அன்றும் அதேபோல் கோவையில் இருந்து கிளம்பும் ரயிலில் உட்கார்ந்து இருந்தேன். ட்ரைன் கிளம்பும் வேலையில் ஒரு குடும்பம் ஓடி வந்து ஏறியது. நான் இருந்த கம்பார்த்மன்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நான் ஒருவன் மட்டுமே இருந்த கூபேவில் அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள். அம்மா, அப்பா மற்றும் மூன்று பெண் பிள்ளைகள். அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கரடு முரடாக இருந்தார்கள். மூத்த பெண்ணுக்கு என் வயதுதான் இருக்கும். நல்ல உயரமாக, அழகாக இருந்தாள். இரண்டாவது பெண் கருப்பு என்றாலும் பார்க்க லட்சணமாக இருந்தாள். மூன்றாவது பெண் சற்றே சைனீஸ்காரி போல் இருந்தாள். ஓடி வந்த அவசரத்தில் எதையோ மூத்த பெண் மறந்து விட்டது போல. அவள் அம்மா அவளை திட்டி கொண்டு இருந்தாள். நான் எதையும் கவனிக்காதது போல புத்தகம் படித்து கொண்டு இருந்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் நன்றாக செட்டில் ஆகி விட்டனர். பொறுமையாக கொண்டு வந்த தின்பண்டங்களை எடுத்து சாப்பிட தொடங்கினார்கள். அவர் என்னிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார்.

இரண்டு முறுக்கை என்னிடம் கொடுத்து " சாப்பிடுங்க தம்பி".. என்றார்.

"இல்லைங்க.. பரவாயில்ல" என்றேன்.

"அட சும்மா சாப்பிடுங்க தம்பி" என்று கொடுத்தார். வாங்கி கொண்டேன்.

"தம்பி என்ன பண்றீங்க..."

நான் கல்லூரியின் பெயரை சொல்லி " நாலாவது வருஷம் இன்ஜினீரிங் படிச்சுட்டு இருக்கேன்" என்று சொன்னேன்.

"ரொம்ப சந்தோசம். என் பேரு குருமூர்த்தி. சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்க காலேஜ்ல இருந்து கொஞ்ச தூரத்துல தான் நம்ம வீடு. தம்பிய எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அதான் உங்ககிட்டே பேசினேன்" என்றார்.

நான் "அப்படீங்களா.. " என்று பொத்தாம்பொதுவாக சொல்லி வைத்தேன்.

கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் எல்லோரும் என்னிடம் நன்றாக பேசத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆன்ட்டி (அப்படித்தான் கூப்பிட வேண்டுமாம்...) ஒரு கவர்மென்ட் ஸ்கூல் டீச்செர். மூத்த பெண் கல்லூரி இறுதி வருடம். இரண்டாவது பெண் கல்லூரி முதல் வருடம். கடைசி பெண் +1. என்னை பற்றி எல்லாம் கேட்டு கொண்டார்கள். சொந்த ஊர், குடும்பம், படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்குமா என எல்லாமே கேட்டு கொண்டார்கள். எனக்கும் அவர்களோடு ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பரவாயில்லையே, முதல் சந்திப்பிலேயே இவ்வளவு நன்றாக பழகுகிரார்களே என சந்தோசப்பட்டேன்.

எல்லோரும் ஒன்றாய் சீட்டு விளையாண்டு கொண்டு இருந்தோம். அப்போது அந்த ஆன்ட்டி சொன்னார்கள்.. "மூத்தவளுக்கு பையன் பார்த்துகிட்டு இருக்கோம்பா..... மூணு பொண்ணுங்களா வேற போச்சு...சீக்கிரமா கட்டி கொடுக்கணும்ல". நானும் சரி சரி என்று தலையை ஆட்டி வைத்தேன்.

"எங்க.. ஒன்னும் சரியா அமைய மாட்டேங்குது. நல்ல பையனா இருக்கனும்னுதான் ரொம்ப கஷ்டப்படுறேன்..இவ ரொம்ப உயரமா வேற இருக்காளா.. அதுவே பெரிய பிரச்சினையா இருக்கு ." என்றார்கள்.

திடீர் என்று "தம்பி.. நீங்க கொஞ்சம் எந்திரிச்சு நில்லுங்களேன்.." என்றார்.

எனக்கு சங்கடமாக போய் விட்டது. "எதுக்கு ஆன்ட்டி.." என்றேன்.

"பரவா இல்லப்பா.. இங்க கொஞ்சம் நில்லேன்.." என்றவுடன் நான் எழுந்து நின்றேன்.

"அம்மாடி.. நீயும் இங்க வந்து கொஞ்சம் தம்பி பக்கத்துல நில்லேன்".

மூத்த பெண் சற்றே சிணுங்கிக்கொண்டே என்னருகில் வந்து நின்றாள். "ஏங்க, உயரம் சரியா இருக்குல்ல.. "என்று அங்கிள்கிட்ட சொன்னார்கள். அவரும் ஆமாம் என்று சொன்னார்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்குள் ரொம்ப மும்முரமாக பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர். ஆகா இது என்னடா வம்பா போச்சு. விட்டா நம்ம கல்யாணம் ட்ரைன்ல தான் நிச்சயம் ஆகும் போலயே என எண்ண தொடங்கி விட்டேன்.

அந்த பக்கம் பார்த்தால் மூத்த பெண் கொஞ்சம் வெட்கத்தோடு என்னை பார்த்து சிரிக்கிறது. "ஆள் வேற நல்லா தான் இருக்கா.. பண்ணிக்கிட்டா என்ன.. " உள்ளே இருந்து சாத்தான் சங்கு ஊத ஆரம்பித்தான். "அப்பா அம்மா கேட்டா.?.. அதெல்லாம் பார்த்துக்கலாம்.." எனக்கு நானே சொல்லி கொண்டேன்.

சற்று நேரம் கழித்து ஆன்ட்டி என்னிடம் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டார்கள். மெதுவாக என்னிடம் கேட்டார்கள்.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?".

எனக்கு புரியவில்லை. குழம்பியவனாக "என்னங்க..?" என்றேன்.

"இல்ல தம்பி.. நீங்க என்ன ஜாதின்னு கேட்டேன்...".

எனக்குள் எதோ ஒன்று வெறுமையானதை போல் இருந்தது. பொங்கி வந்த நீரூற்று சட்டென்று அடங்கி போனதை போன்ற உணர்வு. மெதுவாக என் ஜாதியை சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவர்களின் முகம் இறுகிப்போனது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். சற்று நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு ட்ரைன் ஒரு ஸ்டேஷனில் நின்றது. பிளாஸ்க்கில் இருந்த காப்பியை எடுத்து எல்லோருக்கும் ஊற்றி கொடுக்க தொடங்கினார் ஆன்ட்டி. ஒரு கப்பில் ஊற்றி மூத்த பெண்ணிடம் கொடுத்தார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு எனக்கு காதில் ரத்தம் வராத குறைதான்.

"அண்ணனுக்கு காப்பி கொடும்மா.."

"அடப்பாவிகளா... ஒரு ஜாதி பிரச்சினையால.. அதுக்குள்ளே நான் அண்ணன் ஆகிட்டேனா.. என்ன கொடுமை இது..." மனதுக்குள் புலம்பி கொண்டேன். அதன் பிறகு அவர்கள் என்னிடம் சரியாக பேசவில்லை. அந்த பெண் என்னை பாவமாய் பார்த்து கொண்டு இருந்தது. எனக்குள் ஓங்கி கத்தினேன்..."ஜாதிகள் நாசமாய் போகட்டும்"!!!!!

December 29, 2008

சினிமா அவார்ட்ஸ் 2008!!!!


கிட்டத்தட்ட நூற்று இருபது படங்கள். அதில் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தமிழ் சினிமாவிற்கு 2008 நல்லதொரு ஆண்டாக அமையவில்லை. எனினும் கதையம்சம் கொண்ட படங்களின் வெற்றி நமக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.

டாப் டென் படங்கள்:

1.சுப்ரமணியபுரம்
2.பூ
3.அஞ்சாதே
4.தசாவதாரம்
5.சந்தோஷ் சுப்ரமணியன்
6.சரோஜா
7.அபியும் நானும்
8.யாரடி நீ மோகினி
9.பொம்மலாட்டம்
10.அறை எண் 305ல் கடவுள்

டாப் டென் பாடல்கள்:

1.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்)
2.கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
3.டாக்ஸி டாக்ஸி (சக்கரக்கட்டி)
4.முதல் மழை(பீமா)
5.அன்பே என் அன்பே (தாம் தூம்)
6.கல்லை மட்டும் கண்டால் (தசாவதாரம்)
7.வெண்மேகம் பெண்ணாக (யாரடி நீ மோகினி)
8.கண்ணதாசன் காரைக்குடி (அஞ்சாதே)
9.தோழியா என் காதலியா (காதலில் விழுந்தேன்)
10.ச்சூ ச்சூ மாரி (பூ)

சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகர்: கமல்ஹாசன் (தசாவதாரம்)
(சிறப்பு விருது)

சிறந்த நடிகை:பார்வதி (பூ)

சிறந்த நடிகை:சுவாதி (சுப்ரமணியபுரம்)
(சிறப்பு விருது)

சிறந்த நகைச்சுவை நடிகர்: பிரேம்ஜி அமரன் (சரோஜா)

சிறந்த வில்லன் நடிகர்:பிரசன்னா (அஞ்சாதே)

சிறந்த இயக்குனர்:சசிகுமார் (சுப்ரமணியபுரம்)

சிறந்த இயக்குனர்: சசி (பூ)
(சிறப்பு விருது)

சிறந்த இசைஅமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)

சிறந்த இசைஅமைப்பாளர்:ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம்)
(சிறப்பு விருது)

சிறந்த பாடல் ஆசிரியர்:தாமரை (வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடகர்: பெல்லி ராஜ் (கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்)

சிறந்த பாடகி:பாம்பே ஜெயஸ்ரீ (வலியே என் உயிர் வலியே - தாம் தூம்)

சிறந்த வசனகர்த்தா:சிம்புதேவன் (அறை எண் 305ல் கடவுள்)

சிறந்த ஒளிப்பதிவாளர்:மகேஷ் முத்துசுவாமி (அஞ்சாதே)

சிறந்த கலை இயக்குனர்:ராம்போன் (சுப்ரமணியபுரம்)

சிறந்த நடன இயக்குனர்:ஸ்ரீதர் (நாக்க முக்க - காதலில் விழுந்தேன்)

சிறந்த சண்டைபயிற்சி இயக்குனர்:ஆன்டி டிக்ஸ்ன் (தசாவதாரம்)

சிறந்த படத்தொகுப்பாளர்:அஷ்மிட் குந்தேர் (தசாவதாரம்)

வருடத்தின் இறுதியில் வெளிவந்துள்ள சில படங்களின் வெற்றி நமக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் மேலும் நல்ல படங்கள் வரவேண்டும் என வேண்டிக்கொள்வோம்!!!

December 25, 2008

அவனும் அவளும்....(2)!!!!!



நேரம் காலை பத்து மணி. அவள் அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது அவனிடமிருந்து போன் வந்தது.


"ஹலோ.. சொல்லுப்பா..."


"என்னடிம்மா, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.. உடம்புக்கு எதுவும் முடியலியா?"


"இல்லப்பா... ஒன்னும் இல்ல.. இங்க ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சினை.. அவ்ளோதான்.. நீ சொல்லு.. "


"ஏம்மா... என்ன ஆச்சு?"


"உனக்கு தான் தெரியும்ல.. நமக்கும் மானேஜருக்கும் நல்ல நாள்லயே ஆகாது... இன்னைக்கு இன்னொரு ஆள் பண்ண தப்புக்கு நான் மாட்டிக்கிட்டேன்.. அத விடு.. நீ எதுக்கு கால் பண்ணின.. அத சொல்லு..."


"ஒண்ணும் இல்லமா... பழைய தோஸ்த் ஒருத்தன் ஊருக்கு வந்து இருக்கான்...சாயங்காலமா அவன மீட் பண்ணலாம்னு ஒரு பிளான். மத்த பசங்ககிட்டையும் சொல்லி இருக்கேன். அப்படியே ஒரு படத்துக்கும் போயிட்டு வரலாமேனு ஐடியா...அது தான் மேடம்கிட்டே சொல்லிட்டு..."


"சரி.. சரி.. ரொம்ப இழுக்காத.. போயிட்டு வாப்பா.."


"நீங்க ஜாயின் பண்ண முடியாதா..."


"இல்லப்பா..சாரி.. வேல ஜாஸ்தி.. அதோட மானேஜர் பிரச்சினை வேற இருக்கு... நீ போயிட்டு வா..."


"ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே..."


"லூசே..நான் தான் போயிட்டு வான்னு சொல்றேன்ல..ஒண்ணும் பிரச்சினை இல்ல.. ஹவ் எ நைஸ் டைம் பா..."


"ஓகேமா... டேக் கேர்... "


நேரம் நாலு மணி. அவன் நண்பர்களோடு இருந்த பொது அவளது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.


"ஹலோ.. நான் ஆபீஸ் கிளார்க் பேசுறேன்.. சார் இருக்காங்களா?"

"நான் தான் பேசுறேன்.. சொல்லுங்க..."


"சார், இங்க மேடம்க்கு ஒரு சின்ன அக்சிடென்ட்..."


"என்னப்பா ஆச்சு..: அவன் பதறிப்போனான்.


"பயப்படுறமாதிரி ஒண்ணும் இல்ல சார்.. வண்டில இருந்து கீழ விழுந்துட்டாங்க.. கைல மட்டும் சின்ன காயம்..மருந்து போட்டாச்சு..."


"இப்போ அவங்க எங்கே இருக்காங்க.."


"பக்கத்திலேதான் இருக்காங்க. பேசுங்க சார்..." போனை அவள் வாங்கி கொண்டாள்.


"சொல்லுப்பா..பிரெண்ட பார்த்துட்டயா?"


"இப்போ அது தான் முக்கியமா.. என்னமா ஆச்சு.. கொஞ்சம் பத்திரமா இருக்க வேண்டாமா.. அடி ஏதும் படலியே?"


"இரு.. இரு.. இரு.. நீ டென்சன் ஆகுற அளவுக்கு ஒண்ணும் சீரியஸா எல்லாம் அடி படலப்பா.. லைட்டாதான்.. நான் போன் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்,.. ஆபீஸ்ல தான் கேக்காம போன் பண்ணிட்டாங்க.."


"நீ அங்கேயே இரு..நான் கிளம்பி வரேன்.."


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நீங்க போய் படத்த பார்த்திட்டு வாங்க.. வண்டிய இங்கயே விட்டுட்டு நான் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போறேன்.. நீ பிரெண்ட்ஸ் கூட கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிட்டு வா.."


"இல்லமா..நான் சொல்றத கொஞ்சம் கேளு.."

"முடியாது..நான் சொல்றத நீ கேளு.. ஓடு.. ஓடு..நான் கிளம்பி வீட்டுக்கு போறேன்..சீ யு..பாய்.. "போனை வைத்து விட்டாள்.


அவள் வீட்டுக்கு வந்து இறங்கியபோது கதவு திறந்து இருந்தது. வெளியே அவனுடைய பைக் நின்றது. உள்ளே போனால் அவன் இருந்தான்.


"எங்க அடிபட்டுச்சிமா.. சொல்லு.. மருந்து போடலாம்.."அவன் அவளை நெருங்கி வந்தான்.


"படத்துக்கு போகலையா..?"


"இல்ல..தியேட்டர் வாசல் வரைக்கும் போனேன்.. மனசு சரில்ல..அதனால டிக்கெட் வாங்கி பசங்கள உள்ள அனுப்பிட்டு நான் வந்துட்டேன்.."


"நான் தான் ஒண்ணும் இல்லன்னு சொன்னேன்ல.. ரொம்ப நாள் கழிச்சு வந்த பிரென்ட்னு சொன்ன.. கூட போய்ருக்கலாம்ல..நான் சொல்றத கேக்கவே கூடாதுன்னு முடிவே ஏதும் பண்ணிருக்கியா?"


"அப்படி எல்லாம் இல்லடிமா.."


"பின்ன..பாவம்ல உன் பிரெண்ட்ஸ் எல்லாம்..என்னதான் திட்டி இருப்பாங்க.."


"அதெல்லாம் இல்லடி.. அவங்களுக்கு தெரியும்.. சொல்லிட்டுதான் வந்தேன்.. காலைல இருந்து ஆபீஸ்ல பிரச்சினை..இப்போ இந்த அக்சிடென்ட் வேறே..நீ இங்க எப்படி இருப்பனு எனக்கு தெரியும்டிமா... இதுல போய் என்னால நிம்மதியா படம் பார்த்துகிட்டு உக்கார்ந்து இருக்க முடியாது.. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.."


"என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சுருப்பியே.. உன்ன திருத்தவே முடியாது.."


"பரவாயில்லடிமா.. நீ என்ன எவ்ளோ திட்டினாலும்... நமக்கு ஒண்ணுனு சொன்னவுடனே இந்த பய துடிச்சி போய் ஓடிவந்துட்டான் பார்த்தியான்னு உள்ளுக்குள்ள சந்தோஷந்தான்படுவன்னு எனக்கு தெரியும்டி.." அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.


"பரதேசி..நாயே..பன்னி..என்னோட வீக்பாயிண்ட் தெரிஞ்சுக்கிட்டு, என் உயிரை வாங்குறதுக்கே வந்திருக்கடா.."செல்லமாக அவன் தோள்களில் குத்தியவாறே மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவன் சந்தோஷமாக அவளை அணைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான்."உனக்கென நான்.. எனக்கென நீ.."!!!!!!

December 23, 2008

சிறந்த மொக்கை படங்கள் 2008....!!!!


2008 ஐ பொறுத்த வரை தமிழ் சினிமாவிற்கு போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் ஊத்தி கொண்டன. அப்படி இப்படி என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் ரசிகர்களின் தலையில் மசாலா அரைத்த, தயாரிப்பாளரின் தலையிலும் துண்டை போட்ட டாப் டென் படங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.

1. குருவி

சென்ற ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படம். தரணி, விஜய், திரிஷா, என நம்பி போன எல்லோருக்கும் ஆப்பு. சூப்பர்மேன் கூட செய்ய யோசிக்கும் சாகசங்களை கூசாமல் செய்திருந்தார் விஜய். எல்லாத்தையும் விட பெரிய காமெடி, இந்த படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடியது, அதோடு இல்லாமல் அதை டிவியில் வேறு ஒளிபரப்பினார்கள். அழகிய தமிழ்மகனை தொடர்ந்து விஜயின் ரெண்டாவது தோல்வி படம். வில்லு படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துக்கள்.

2. குசேலன்

2008இன் மிகப்பெரும் ஏமாற்றம். ரஜினியின் பெயரை ரிப்பேராக்கியதே இந்த படத்தின் சாதனை. பரமசிவன், தொட்டால் பூ மலரும் போன்ற அதி அற்புத படங்களை எடுத்த பிறகும் வாசுவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரிடம் இந்த படத்தை கொடுத்தது ரஜினியின் மாபெரும் தவறு. ரஜினி கவுரவ வேடத்தில் தான் வருகிறார் என்றாவது அடக்கி வாசித்து இருக்கலாம். படத்தின் வியாபாரத்திற்காக ரஜினியை பெயரை ஓவராக பயன்படுத்தியது தப்பாகி போனது. கர்நாடக பிரச்சினை, மன்னிப்பு என எல்லா விதத்திலும் ரஜினியை பாடாய் படுத்தி விட்டு படம் டப்பாவிற்குள் படுத்து கொண்டது.

3. காளை

தியேட்டருக்குள் வந்தவர்களை எல்லாம் வருவியா வருவியா என்று சிம்பு துரத்தி துரத்தி முட்டிய படம். டப்பா கதைக்கு ஏகப்பட்ட பில்ட் அப் வேற. குட்டி பிசாசே பாடல் மட்டும் பிரபலம் ஆனது. திமிர் படத்தை நம்பி போனால் தருண் கோபி ரசிகர்களை செமையாக மண்டை காய வைத்தார். யார் திருந்தினாலும் சிம்பு திருந்த போவதில்லை என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்தது.

4. சத்யம்

விஷாலின் டெரர் படம். போலீஸ், சிக்ஸ் பேக், ஆச்சா ஊச்சா என பில்ட் அப் கொடுத்து செமையாக வாங்கி கட்டிக்கொண்ட படம். நயன்தாராவை இதற்க்கு மேல் கேவலமாக யாராலும் காட்டி இருக்க முடியாது. நான் பொறுக்கி இல்ல, போலீஸ் என விஷால் சீரியசாக வசனம் பேச மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உபேந்திரா ஒருவர் மட்டுமே இந்த படத்தால் தமிழுக்கு கிடைத்த உருப்படியான விஷயம்.

5. இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

வடிவேலு தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட படம். கடைசி வரை இது காமெடி படமா இல்லை சீரியஸ் படமா என்றே புரியவில்லை. இந்த படத்தில் நடிப்பதற்காக இருபத்து இரண்டு படங்களை வேண்டாம் என்றாராம் வடிவேலு. ஐயோ பாவம்.. இந்த டுபுக்கு படத்துக்காக எவ்வளவு தியாகம் பண்ணி இருக்காரு.. ரொம்ப நல்லவரு சார் நீங்க..

6. அரசாங்கம்

புரட்சி கலைஞரின் 150ஆவது படம். இந்தியாவையும் தாண்டி கனடா வரை போய் கேப்டன் அங்கேயும் தீவிரவாதிகளை பந்தாடும் வழக்கமான கதை. ரெண்டு கதாநாயகிகள் வேற. அரசியல் பேசாமல் நடித்தும் படம் ஓடவில்லை.

7. சக்கரக்கட்டி

சாந்தனு அறிமுகமான படம். கலைப்புலி தாணுவின் மகன் பிரபு இயக்குனர். A.R. ரகுமானின் துள்ளல் இசை. எல்லாம் இருந்தும் கதை என்னும் விஷயம் இல்லாததால் படம் பப்படமாகி போனது.

8. ஏகன்

பில்லாவின் வெற்றிக்கு பின் அஜித் நடித்த படம். முதல் முறையாக தல காமெடி செய்ய முயற்சி செய்து இருந்தார். ராஜு சுந்தரத்தின் தெளிவில்லாத திரைக்கதை, மொக்க காமெடி என எல்லாம் சேர்ந்து படத்தை காலி செய்து விட்டன.

9. பீமா

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் படம். இயக்கம் லிங்குசாமி. இசை ஹாரிஸ் ஜெயராஜ். வித்தியாசமான கிளைமாக்ஸ். இருந்தும் படம் படுத்து கொண்டது. காரணம் - கதை. எத்தனை நாள் தான் ஒரே ரவுடி கதையை மாற்றி மாற்றி எடுப்பார்களோ. இந்த படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஏ. எம். ரத்தினம் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

10. வாரணம் ஆயிரம்

சூர்யா போன்ற ஒரு அற்புதமான நடிகரை எந்த அளவு வீணடிக்க முடியுமோ அந்தளவுக்கு வீணடித்த படம். பாடல்களின் தயவால் படம் A சென்டர்களில் தப்பித்து கொண்டது. செந்தில் அருணாச்சலம் படத்தில் சொன்னது போல முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம்.

அடுத்த வருடத்தில் இருந்தாவது நடிகர்களை நம்பாமல் கதையை நம்பி படம் எடுக்கும் வழக்கம் வந்தால் மட்டுமே, நமக்கு நல்ல திரைப்படங்கள் கிடைக்கும்!!!

December 22, 2008

நாட்டு நடப்பு!!!!

பணியின் நிமித்தமாக வெளியூர் சென்று விட்ட காரணத்தினால் சில நாட்களாக எழுத இயலாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கோவையிலும் ஒரு வாரம் மதுரையிலுமாக பொழுது போனது. பல புதிய நண்பர்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. கோவை நகரம் பெரிதாக ஏதும் மாறவில்லை. ஈஷா யோகா மையம் வரை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. நான் பொதுவாக கடவுளை அதிகமாக நம்புவதில்லை என்னும் போதும் மனதிற்கு நிம்மதி தரும் இடமாக ஈஷா இருக்கிறது. பாதரசத்தால் செய்யப்பட்ட லிங்கத்தை நீரின் உள்ளே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். அந்த தண்ணீர் நம்மேல் படும் போதே நம்மால் வித்தியாசத்தை உணர முடிகிறது.மழையின் காரணமாக கோவையில் அதிகமாக வெளியே சுற்ற இயலவில்லை. மற்றபடி மதுரையில் நண்பர்களை சந்திக்கவே நேரம் சரியாக இருந்தது. இதோ, மீண்டும் பணிக்கு திரும்பி வந்தாயிற்று.
**********************************************************************

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் சமீபத்தில் நம் நாட்டில் நடைபெற்ற மிக மோசமான நிகழ்வாகும். முதல் முறையாக கடல் வழியே உள்ளே வந்துள்ளனர். நம் நாட்டின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த தாக்குதல். அமைச்சர்களை மாற்றுவதால் மட்டும் இந்த பிரச்சினை தீர்ந்து விட போவதில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரை நாம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மக்களை காக்க தங்கள் உயிரை இழந்தவர்கள், தாக்குதலின்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய வீரர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒற்றுமையாக இருந்து நம் மக்கள் அனைவரும் தேசத்திற்கான அபிமானத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த மதமானுலும் மக்களை நேசிக்க சொல்கிறதே தவிர கொள்ள சொல்வதில்லை. இனிமேல் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க எல்லா மத கடவுள்களும் அருள் புரிவதாக...
*********************************************************************
போன மாதத்தில் நண்பர் ஒருவருக்கு சென்னை சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஏண்டா போனோம் என்ற நிலையில் தான் மனிதர் திரும்பி வந்தார். மழைக்காலத்தில் சென்னை சென்று வருவதை விட நாம் நேராக நரகத்திற்கே சென்று வரலாம் என புலம்பி தள்ளி விட்டார். நண்பர் தங்கி இருந்த வேளச்சேரி பகுதி தனித்தீவாகவே மாறி போனதாம். கிட்டத்தட்ட படகு சவாரி மூலமாகதான் மக்களால் நடமாட முடிந்து இருக்கிறது. அதோடு கொஞ்சம் பாம்புகளும் வீட்டுக்குள் வந்து சென்றதால் மனிதர் அரண்டு போய் விட்டார். சிங்கார சென்னை மழையின் போது சிரிப்பாய் சிரித்து விடுவதை யாராலும் மாற்ற முடியாது போலும். ஒவ்வொரு முறையும் நிவாரணம் கொடுக்க வருவதை விட இதற்கான நிரந்தர தீர்வினை நம் அரசாங்கம் யோசித்தால் தேவலாம். மின்சாரமும் இல்லாமல் மக்கள் பாடு பெரும்பாடாய் போவதை எந்த புண்ணியவான் வந்து மாற்றுவாரோ..
**********************************************************************
வெகு நாட்களாய் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஒரு மெகா தொடர் முடிவுக்கு வந்தது. கண்கள் பனிக்க, இதயம் இனிக்க... அடடா என்ன ஒரு காட்சி.. பல திருப்பங்களுக்கும் மோதல்களுக்கும் பிறகு வந்த இந்த இனிய முடிவு நேயர்களாகிய தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி. யார் சந்தோஷபட்டிருப்பார்களோ இல்லையோ, நம் தமிழக முதல்வருக்கு இந்த இணைப்பு மிக்க சந்தோசத்தை தந்திருக்கும். ஒரே உறையில் இரண்டு வாள்கள்? சன் டிவி vs கலைஞர் டிவி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
**********************************************************************
விலைவாசி உயர்வு, தீவிரவாதம் என் அனைத்தையும் மீறி, காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளது. இது வரப்போகும் பாராளுமன்ற தேர்தல்களில் எதிரொலிக்குமா என் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு எஸ்.எம்.எஸ். இது..

விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுட்டு வெற்றி பெற்ற வீரருக்கு பத்து கோடி பரிசு.. நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தி தன் உயிரை விட்ட இராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு.. ஜெய் ஹிந்த்... வாழ்க இந்தியா...!!!!

November 15, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்!!!



வாரணம் ஆயிரம் - மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் திரைப்படம். வெற்றி பெற்ற கவுதம் - ஹாரிஸ் ஜெயராஜ் - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறார்கள். பெரும் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை பதிவு செய்ய முயன்று இருக்கிறார்கள். அதனூடாக தந்தை-மகன் பாசம், காதல், சோகம், தன்னை தானே உணரும் பருவம் என அனைத்தையும் சொல்ல முற்பட்டுள்ளார் கவுதம். படத்தின் முடிவில் நமக்கு ஆயாசமே ஏற்ப்படுகிறது.


கிருஷ்ணாவின் மகன் சூர்யா(இரண்டும் சூர்யா தான்). கிருஷ்ணா இறக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. தொலைவில் ஒரு மிஷனில் இருக்கும் மேஜர் சூர்யாவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரின் நினைவுகள் வாயிலாக படம் விரிகிறது. பள்ளி மாணவனாக, பின்பு கல்லூரியில் படிக்கும் இளைஞனாக சூர்யா. ஒரு சந்திப்பில் மேக்னாவிடம் (சமீரா ரெட்டி) மனதை பறிகொடுக்கிறார். விக்ரமன் படம் போல ஐந்தே நிமிடங்களில் வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கிறார். தாய் தந்தை உதவியோடு அமெரிக்கா சென்று அவள் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.ஆனால் ஒரு விபத்தில் மேக்னா இறந்து போகிறாள். சோகத்தில் சூர்யா போதை மருந்திற்கு அடிமை ஆகிறார். பின்பு அதிலிருந்து மீண்டு காஷ்மீர் செல்கிறார். அங்கு தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு குழந்தையை மீட்கிறார். பிறகு ராணுவத்தில் சேர்கிறார். இதன் நடுவே தன்னை காதலிக்கும் ப்ரியாவை (ரம்யா) திருமணம் செய்கிறார். அப்பாவிற்கு உடல் நலம் இல்லாமல் போகிறது. தொண்டையில் கான்சர். தான் விரைவில் திரும்பி வருவதாக சொல்லி சூர்யா ஒரு மிஷனுக்காக கிளம்புகிறார். இதோடு படம் மீண்டும் நிகழ் காலத்திற்கு வருகிறது. வேலையே முடித்த உடன் சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறார். இதோடு படம் முடிகிறது. இதை சொல்றதுக்கே கண்ணை கட்டுகிறதே.. பார்த்தால்?...


சூர்யா - ஒரே வார்த்தையில் சொல்வதானால்.. அற்புதம். ரொம்ப மெனக்கட்டிருக்கிறார். உடலை குறைத்து, கூட்டி, சிக்ஸ் பாக் என மிகவும் உழைத்து இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதாகட்டும், சின்ன சின்ன சேட்டைகளிலும் மிளிர்கிறார். இரண்டு ரோல்களிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளார் . அப்பாவுக்கு மட்டும் ஒப்பனை சரியாக பொருந்தவில்லை. மற்றபடி சூர்யா அசத்துகிறார். அவரின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராக போனது தான் கொடுமை. மூன்று நாயகிகளில் ரம்யாவிற்கு தான் முதலிடம். பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கிறார். சிம்ரன் அம்மாவாக வந்து போகிறார். சமீரா ரெட்டி..முதிர் கன்னி போல தோற்றம் கொண்ட இவரைப் பார்த்து சூர்யா இவ்வளவு உருக வேண்டாம் எனத் தோன்றுகிறது.


படத்தின் பெரிய பலம் இசை. தாமரையின் வரிகளில் எல்லா பாடல்களுமே நன்றாக உள்ளன. எனினும் பாடல்களை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மண்டை காய வைக்கிறது. குறிப்பாக முன்தினம், அஞ்சல பாடல்கள் நம்மை பாடாய் படுத்துகின்றன. காதலி இறந்த சோகத்தில் வரும் பாடலாக அஞ்சலை பாடல் நம்மை கொலைவெறி கொள்ள செய்கிறது. பாடல்களுக்கு நடனம் அமைத்தவரை ஓட விட்டு கல்லால் அடிக்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் பெரிதும் மெனக்கடவில்லை ஹாரிஸ். கவுதமுடன் இது தான் கடைசி படம் என்பதால் இது போதும் என் நினைத்து விட்டாரோ என்னவோ. ரத்னவேலு ஒளிப்பதிவு. பாதி படம் இருட்டிலேயே இருப்பது போல ஒரு உணர்வு. ஒவ்வொரு ஷாட் முடியும் போதும் திரை இருண்டு போவது எரிச்சலைதான் தருகிறது. எடிட்டிங் -ஆண்டனி. முடிந்ததை செய்து இருக்கிறார். பேசுபவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசி கொண்டிருப்பதால் நாம் பார்ப்பது தமிழ் படம் தானா என சந்தேகம் வருகிறது.


தந்தை மகனுக்கு இடையே உள்ள நெருக்கத்தை எந்த காட்சிகளுமே சொல்லாத நிலையில் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இதுதான் இந்த படத்தின் பெரும் பலவீனம். கவுதம் ஆங்கில படங்கள் பார்ப்பதை குறைத்து கொண்டு தமிழர்களுக்காக படம் எடுக்க வேண்டும். படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தையும் தாண்டி செல்கிறது. படம் ரொம்ப மெதுவாக போவதால் நம்மால் தாங்க முடியவில்லை. தனது தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்து இருக்கிறார் கவுதம். அதற்கு நாம் தானா கிடைத்தோம்?


ஆக மொத்தத்தில்..


வாரணம் ஆயிரம் - பார்க்காமல் இருக்க காரணம் ஆயிரம்....

November 14, 2008

அடங்கொக்காமக்கா...!!!






நடிகர் கவுண்டமணி ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு...

"என்னடா..ரிக்கி தம்பி.. எப்படிடா இருக்க அண்டார்டிக்கா வாயா ... வீட்ல எல்லாரும் சௌக்கியமா? அட எதிரியா இருந்தாலும் நலம் விசாரிக்கிறது தானேப்பா தமிழ் மரபு...ஐயா இன்னும் இந்தியா கிட்ட தோத்த பீலிங்க்ஸ்ல இருந்து வெளிய வரல போல இருக்கு? அட..விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா.. ஒன்கிட்ட சில விஷயம் சொல்லணும்னு ஆசைடா.. அதுக்கு தான் இந்த லெட்டர்..

உண்மைய சொல்லனும்னா இந்தியாகாரன் அத்தன பெரும் உனக்கு கடன்பட்டு இருக்கோம்டா பேரிக்கா தலையா.. நாக்பூர் டெஸ்ட்ல நம்ம பசங்க திடீர்னு ஆறு விக்கெட் அவுட் ஆனவுடனே சரி.. அவ்ளோ தான்னு நினச்சேன்... ஆனா உன்னோட அறிவு அப்போ வேல செஞ்ச ஸ்டைல் இருக்கே..அடங்க்கொன்னியா ரொம்ப பொறாமையா இருக்குடா..ஓவர் ரேட் மெதுவா இருக்குன்னு சொல்லி ஹஸ்சி, வைட், கிளார்க்னு எப்படிப்பட்ட உலகத்தரமான பவுலர்ஸ யூஸ் பண்ணி நம்ம பசங்கள நீ காப்பாத்துனனு எனக்கு தெரியும்டா.. முள்ளம்பன்றித் தலையன் வடிவேலு சொல்ற மாதிரி சொல்லணும்னா.. நீ ரொம்ப நல்லவன்டா... உனக்கு மட்டும் எப்படிடா நாயே இதெல்லாம் தோணுது?

எல்லா துறைலயும் இந்தியா நல்லா விளையாண்டாங்க..நாங்க தோல்விய ஒத்துக்கிறோம்னு நீ யாருக்குமே புரியாத ஒரு இங்கிலிஷ்ல சொன்னப்ப சரி ரைட்டு..பய புள்ள நல்லவந்தாண்டா நான் நினச்சேன்..ஆனா உங்க ஊர்ல போய் நீ போடுற சீனப்பாத்தா.. அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமின்னு தோணுது... ஏண்டா.. ஏன் தோத்திங்கனு கேட்டா யாரும் சரியா விளையாடலை.. அதனாலே தோத்தோம்னு சொல்லு.. அத விட்டுட்டு, சம்பந்தமே இல்லாம.... போன வருஷம் நாங்க ஆஸ்திரலியாவில விளையாண்டப்ப எங்க வாரியம் எங்கள கை விட்டுறுச்சு அத பத்தி பேசுங்கனு சொல்ற.. ..விட்டா சைமண்ட்ஸ் மீன் பிடிக்க போனதால தான் நாங்க தோத்தோம். அதனாலே..இனிமேல் யாரும் மீனே பிடிக்க கூடாதுன்னு கூட சொல்லுவ போல.. போடா டுபாக்கூரு.. அது இதுனு ஏண்டா உளர்றே..

இந்த டூர்ல நீ விளையாண்ட லட்சணம் என்னனு உனக்கு தெரியுமா? இதுல ஊருக்கு போய் இறங்கின உடனே ஐயா பேட்டி தர்றிங்க.. எல்லாரும் ஒழுங்கா விளையாடனும்.. இல்லனா டீம்ல இருக்க முடியாதுன்னு.. முதல நீ ஒழுங்கா விளையாடுடா பச்சில புடுங்கி.. விட்டா அம்பயருக்கு அன்னைக்கு மூடு சரி இல்ல.. ஜலதோஷம்..அதனால மூக்க தொடைக்க அடிக்கடி கைய தூக்கிகிட்டே இருந்தாரு.. அத போய் அவுட்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுவ போல..டே டிஸ்னிலான்ட் மண்டையா..உண்மைய ஒத்துக்கொங்கடா..

அது என்னடா உங்களுக்கு அப்படி ஒரு மப்பு.. எதிர் டீம்காரன்கிட்ட போய் உன் பொண்டாட்டி நல்லா இருக்காளா? அக்கா, அம்மா எல்லாம் சௌக்கியமானு கேட்டு கடுப்பேத்த வேண்டியது.. அதையே வேற எவனாவது உன்கிட்ட கேட்டுட்டான்னா, ஐயோ...அம்மா...மானம் போச்சே...மரியாத போச்சேன்னு பொலம்ப வேண்டியது.. அவங்க அழுகுணி ஆட்டம் ஆடுறாங்கன்னு வேற கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது.. ஏண்டா அணுகுண்டு வாயா... நீங்க பண்ணா ரைட்டு.. மத்தவங்க பண்ணா தப்பா..

சரி தம்பி.. முடிஞ்சது முடிஞ்சுபோச்சு.. நீங்க முன்னாடி மத்த டீம்க்கு என்ன செஞ்சிங்களோ அத தான் இன்னைக்கு அவங்க உங்களுக்கு செய்றாங்க..களத்துக்குள்ள வெச்சு எதிரணிக்காரங்கள திட்டுறதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கிரிக்கெட் ஆடுற வழிய பாருங்க.. அவ்ளோதாண்டா ஆப்பத்தலையா....


அன்புடன்,

கவுண்டமணி

November 13, 2008

அவனும் அவளும்.....!!!!

அவன் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். டிவியில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடி கொண்டு இருந்தது. அவள் சமையலறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.

"ஐயோ.. என்ன இது.. விடு விடு.. ஐயா ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல?"

"ஆமாம்மா.. இன்னைக்கு ...... புத்தகம் பார்த்தியா? அதுல என்னோட கதை வந்திருக்கு.. ஆபீஸ்ல எல்லாரும் பார்த்திட்டு கூப்பிட்டு பாராட்டினாங்க தெரியுமா?"

"ம்ம்ம்ம்ம்.. அப்படியா? சரிப்பா..."

"ஏம்மா... மேடம் ரொம்ப சலிச்சுக்கற மாதிரி தெரியுது?... நீ படிச்சியா?"

"படிச்சேன்..ஆனா..எனக்கு பிடிக்கல.."

"பிடிக்கலியா?..ஏன்?.."

"சொல்ல தெரியல.. ஆனா பிடிக்கல"

"என் பிரெண்ட்ஸ் எல்லோரும் பிடிச்சிருக்குனு தானே சொன்னாங்க.. ஆபீஸ்ல கூட அதே தான் சொன்னாங்க.."

"அதுக்காக.?எனக்கு பிடிக்கலேனா பிடிக்கலைனு தான் சொல்லுவேன்"

"அது தான் ஏன்னு கேட்குறேன்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லு.."

"இங்கே பார்..உனக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. அது எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லி தான் ஆகணும்னு எந்த சட்டமும் கிடையாது.. பிடிக்கலைனு சொன்னா விடேன்.. ஏன் என் உயிரை வாங்குற?..."

விளையாட்டாக ஆரம்பித்தது.... வினையாகப் போனது. அவன் அமைதியாக நடந்து சென்று சோபாவில் அமர்ந்தான். டிவியில் இப்போது டாம் ஜெர்ரியை கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருந்தது. அவள் சமையலறையின் உள்ளேயே இருந்தாள். அங்கே விவரிக்க முடியாத ஒரு மௌனம் மட்டுமே இருந்தது.

சற்று நேரத்திற்கு பின் அவள் மெதுவாக நடந்து வந்து அவன் முன் அமர்ந்தாள். அவன் கண்களை பார்த்து சொன்னாள்..

"நீ எழுதுறது எனக்கு பிடிக்குதோ இல்லையோ.. உன்னோட விருப்பங்கள் எனக்கு படிக்குதோ இல்லையோ..அதெல்லாம் தாண்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. உன்னோட அன்பு தாண்டா எனக்கு எல்லாமே.."

அவள் கண்களில் நீர் திரண்டிருந்தது. அவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். "நானும் அப்படித்தான்மா.."என்றவாறே அழத் தொடங்கினான். அங்கே காதல் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது!!!!

November 7, 2008

காமிக்ஸ் என்னும் அற்புத உலகம்!!!







இன்று 25 முதல் 40 வயது வரை இருக்க கூடிய யாரை கேட்டாலும் காமிக்ஸ் பற்றி பெருமையாக சொல்வார்கள். நம் நிஜ வாழ்வில் நினைத்து பார்க்க இயலாத வீரத்தீர சாகசங்களும் மாயாஜால மந்திரங்களும் நிறைந்த ஒரே அற்புத உலகம் காமிக்ஸ்களின் உலகம். ஆரம்ப காலங்களில் லைன், முத்து, திகில், மினி லைன் என்று பல காமிக்ஸ்கள் வந்து கொண்டு இருந்தன. நம்மால் மறக்க முடியாத பல கேரக்டர்களை இவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தன.


நிழல் உலக சக்கரவர்த்தி spider, டெக்ஸ் வில்லர், கார்சன், டைகர், ஆர்ச்சி என எண்ணிலடங்கா கதாபாத்திரங்களை நம் கண் முன் உலவ விட்டவை காமிக்ஸ்களே. புதிய இடங்களும் புதுப் புது அனுபவங்களையும் காமிக்ஸ்கள் நமக்கு தந்தன. காட்சிகள் நம் கண் முன்னே விரிய அவற்றின் ஊடான நமது வாசிப்பு தரும் இன்பம் அலாதியானது. காமிக்ஸ் என்பது சிறியவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவரும் படிக்க கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

இன்று ஊடகங்கள் பெரிதும் வளர்ந்து விட்ட நிலையில் காமிக்ஸ்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன.பாலமித்ரா, பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள் என பல புத்தகங்களும் இன்று இருந்த இடம் தெரியவில்லை. மதுரையில் இருந்து வெளிவந்தது கொண்டு இருந்த கலைப்பொன்னியின் மாயாஜால புத்தகங்களும் நின்று போயின. ராணி காமிக்ஸ் தனது தனித்தன்மை இழந்து விட்டது. லயன் காமிக்ஸ் மட்டுமே இன்று வரை பிடிவாதமாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று வரை தரமான படைப்புகளை தந்து கொண்டு இருக்கும் லயன் ஆசிரியர் எஸ். விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


நமது பால்ய பருவங்கள் கதைகளால் சூழப்பட்டு இருந்தது. ஆனால் நமது அடுத்த தலைமுறைக்கோ கதைகள் என்றால் என்ன என கேட்கும் நிலை வந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. கம்ப்யூட்டர்களின் முன்னும் தொல்லைகாட்சிகளின் முன்னும் தங்களின் நேரத்தை தொலைக்கும் அவர்களுக்காக நாம் பரிதாபப்பட மட்டுமே முடியும். காமிக்ஸ்களோடு வாழ்ந்த அந்த நாட்களை பற்றி சொல்வதானால், அது ஒரு அழகிய நிலாக்காலம்.




November 6, 2008

நாங்களும் இப்போ தமிழ்ல எழுதுறோமல!!!!!

அனைத்து எழுத்துலக நண்பர்களுக்கு, இப்போதுதான் தமிழில் டைப் செய்ய பழகி உள்ளேன். இனிமேல் எனது எழுத்துக்களை நம் தாய்மொழியிலேயே படிக்க முடியும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மா. கார்த்திகைப் பாண்டியன்

What are we heading for?

I would first like to register my strong condemn for the arrogant acts happening in srilanka... From the olden days, say 10 A D, its a well known fact that tamilians are also a part of the island. A lot of evidances are found in history to prove this. We people in Tamilnadu have always felt that they are our brothers. But what the hell is happening there is highly unacceptable. The photographs of people being tortured by the lankan soldiers is unbearable. It looks the war is not against the tigers but against the entire tamil community. Its not the fault of the people but of the government. Looks like they have only one agenda, to completely destroy the base of tamilians. And its a real pity that our country is also supporting the cause of this irrarionalist srilankans. We give them arms to shoot at our own brothers..Isnt that a shame? When our Chief Minister took this issue in his hand, I thought he would do his level best to ensure the safety of the tamilians. But.. what has happened to him? The comments that he say everyday are totally contradictory. One day he says that MP's would resign if the government wont take action. Next day, he reverts that it was said to force the central people and not in a serious mode. When a reporter asked can we intervene into another country's politics, he reminds him of Bangladesh. The next day itself he goes on the other side that a country has some limitations to look into other country's political affairs. Do we people look like jokers? The best comedy happened on the day of people demonstrating a human chain to showcase their support. The directors seeman, ammeer participated in the event and our CM was waving hands towars them. In few hours they were arrested. What to say about this? Then comes the turn of this people from film fraternity. What do they think about themselves? Saviours? Its good that they support the cause of tamilians but the reality is that most of these people do not know what the actual problem is.. The directors were arrested for their comments at Rameshwaram. It was fine till then.. The events that took place after this totally changed or robbed the cause. They were hailed as martyrs and when they came out of jail were given a red carpet reception, totally deviating from the issue. The one good thing was the hunger fast staged by the actors. Ya, I do agree that people came to see the stars and not to listen what they said. But some of the actors really registered their exact views. Especially Rajni. He may be a confused man but is a man driven by his emotions. One thing he said was exactly true. You are fighting for thirty years but still could not defeat a group. Then why dont you accept the defeat graciuosly as a man? Apart from that some actors spoke mindlessly.. But they had registered their feelings. One big problem here in Tamilnadu is that Srilankan Tamil issue is handled as a political concept for the local politicians. They are not really caring for the people over there but about how to run the politics here with that issue.But i can insist that we people are not intended in getting anything out of this. we would do the needful to support our brothers over there.Pray to God that finally peace prevails over the island.

November 3, 2008

my first writing...

hi friends...

i am M.Karthigai pandian... Lecturer in an Engineering college in perundurai... basically from madurai... a very keen follower of tamil blogs... would love to write in tamil but i dont have the necessary softwares here... anyway happy that am also able to join the blogging community... hope to have a nice time....