August 3, 2011

மூன்று முடிச்சு - தொடர்பதிவு

இந்தத் தொடர் பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட நண்பன் கோபிக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், புத்தகம், சினிமா

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

என் அப்பாவின் ஒன் சைடு பாசம், பஸ்ஸில் பிரயாணம் செய்வது, நம்முடைய நண்பர்களை வேறொருவர் உரிமை கொண்டாடுவது

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

பாம்பு, உயரம், பணம்

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?

பெண்கள், ரஜினி, கடவுள்

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

பேனா, எஸ்ராவும் நானும் இருக்கும் போட்டோ, அவ்வப்போது படிக்கும் புத்தகம்

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?

குழந்தைகள், எப்போதும் கவுண்டர், என் நண்பன் முத்துக்கண்ணன்

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

கல்லூரியில் நமது நண்பர் முரளிக்கண்ணனைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் முயற்சி, இலக்கியம் சார்ந்து ஒரு வேலை, எப்பொழுதும் போல மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

ஆதரவற்ற மக்களுக்கென ஒரு இல்லம் அமைப்பது, சொந்தமாக ஒரு லான்சர் கார் வாங்குவது, முடிந்த மட்டும் வெளிநாடுகள் சுற்றி வருவது

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?

டாக்டர் பட்டம் பெற்று நல்லதொரு கல்லூரியில் உயர்பதவியில் அமர்வது, சீக்கிரமே என் அம்மாவுக்காக சின்ன வீடொன்றைக் கட்டித் தருவது, என் நண்பர்களுக்கு அவர்கள் அறிந்த கார்த்தியாகவே எல்லாரையும் சிரிக்க வைப்பது

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

முன்னாள் காதலிகள் பற்றிய தகவல்கள், நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பர்கள் என நான் நம்பி ஏமாந்தவர்களின் பேச்சு, பிரியமானவர்களின் துயரங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

கிடார், சினிமா மொழி, ஓவியம்

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பிரியாணி, புரோட்டா, எல்லா அசைவ சமாச்சாரமும்

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

லூசுப்பெண்ணே, பார்த்த முதல் நாளே, என் காதல் சொல்ல (கொஞ்சம் மாறிக்கிட்டே இருக்க லிஸ்ட் இது..)

14) பிடித்த மூன்று படங்கள்?

நிறைய இருக்கு.. ஆனாலும் மூன்று முக்கியமான படங்கள் - சில காரணங்களுக்காக.. வகைக்கு ஒண்ணா

முள்ளும் மலரும் (ரஜினி-மகேந்திரன்)
ப்ரோக்கன் ஆரா (ஜான் டிரவோல்டா - ஜான் வூ)
தி ரோடு ஹோம் (யாங் ஜீமு - நான் பார்த்த முதல் உலகப்படம்)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?

என் மீதான நம்பிக்கை, இசையும் புத்தகமும், நட்பு

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?

எங்க ஊருக்கார அண்ணே ஸ்ரீ
நம்ம பிரியத்துக்குரிய மொக்கைச்சாமி மேவி
கோயம்புத்தூர் அம்மிணி தாரணிபிரியா

10 comments:

Balakumar Vijayaraman said...

ம்ம், நேர்மையான எளிய பதில்கள்.

//லூசுப்பெண்ணே//

:)

//எங்க ஊருக்கார அண்ணே ஸ்ரீ//

இப்பயாவது வாங்க அண்ணே !

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே...ஸ்ரீ களத்துல இறங்குங்க....

அமுதா கிருஷ்ணா said...

அப்பாவின் பாசம் டபுள் சைடாகும்.நோ வருத்தம்.அம்மாவிற்கு சீக்கிரம் வீடு கட்டுவீர்கள்.வாழ்த்துக்கள்.

jeya said...

remba nalla iruku karthi!!!!

'பரிவை' சே.குமார் said...

எளிய பதில்கள்.

குமரை நிலாவன் said...

நேர்மையான பதில்கள் நண்பரே

ILA (a) இளா said...

பல விசயங்கள் என்னோட விருப்பத்திலேயும் ஒத்து போறீங்க :)

Balakumaran Lenin said...

Lancer Car than sir TOPPP!! Semmmaaa answers :)

குடந்தை அன்புமணி said...

1) ஆகா...
2)ஏன் ஜன்னலோர இருக்கை விருப்பமில்லையா...
3)ரைட்டு...
4)உங்களுக்கு மட்டுமா...
5)நிச்சயம் எஸ்.ரா. இல்லாமலா...
6)கவுண்ட்ன் கவுண்டன்தான்...
7)முயற்சிக்கு வாழ்த்துகள்
8)நியாயமான ஆசைகள்...
9)நிறைவேற வாழ்த்துகள்...
10)கள்???
11), 12)- ம்...
13)(கொஞ்சம் மாறிக்கிட்டே இருக்க லிஸ்ட் இது..)உண்மைதான்...
14),15) நன்று...
16)வருக... வருக...

மாய உலகம் said...

தங்களது எதார்த்தமான மூன்று முடிச்சு ரசிச்சு படிச்சேன்... வாழ்த்துக்கள் நண்பா