November 13, 2008

அவனும் அவளும்.....!!!!

அவன் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். டிவியில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடி கொண்டு இருந்தது. அவள் சமையலறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று பின்னால் இருந்து அணைத்து கொண்டான்.

"ஐயோ.. என்ன இது.. விடு விடு.. ஐயா ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல?"

"ஆமாம்மா.. இன்னைக்கு ...... புத்தகம் பார்த்தியா? அதுல என்னோட கதை வந்திருக்கு.. ஆபீஸ்ல எல்லாரும் பார்த்திட்டு கூப்பிட்டு பாராட்டினாங்க தெரியுமா?"

"ம்ம்ம்ம்ம்.. அப்படியா? சரிப்பா..."

"ஏம்மா... மேடம் ரொம்ப சலிச்சுக்கற மாதிரி தெரியுது?... நீ படிச்சியா?"

"படிச்சேன்..ஆனா..எனக்கு பிடிக்கல.."

"பிடிக்கலியா?..ஏன்?.."

"சொல்ல தெரியல.. ஆனா பிடிக்கல"

"என் பிரெண்ட்ஸ் எல்லோரும் பிடிச்சிருக்குனு தானே சொன்னாங்க.. ஆபீஸ்ல கூட அதே தான் சொன்னாங்க.."

"அதுக்காக.?எனக்கு பிடிக்கலேனா பிடிக்கலைனு தான் சொல்லுவேன்"

"அது தான் ஏன்னு கேட்குறேன்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லு.."

"இங்கே பார்..உனக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. அது எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லி தான் ஆகணும்னு எந்த சட்டமும் கிடையாது.. பிடிக்கலைனு சொன்னா விடேன்.. ஏன் என் உயிரை வாங்குற?..."

விளையாட்டாக ஆரம்பித்தது.... வினையாகப் போனது. அவன் அமைதியாக நடந்து சென்று சோபாவில் அமர்ந்தான். டிவியில் இப்போது டாம் ஜெர்ரியை கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருந்தது. அவள் சமையலறையின் உள்ளேயே இருந்தாள். அங்கே விவரிக்க முடியாத ஒரு மௌனம் மட்டுமே இருந்தது.

சற்று நேரத்திற்கு பின் அவள் மெதுவாக நடந்து வந்து அவன் முன் அமர்ந்தாள். அவன் கண்களை பார்த்து சொன்னாள்..

"நீ எழுதுறது எனக்கு பிடிக்குதோ இல்லையோ.. உன்னோட விருப்பங்கள் எனக்கு படிக்குதோ இல்லையோ..அதெல்லாம் தாண்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. உன்னோட அன்பு தாண்டா எனக்கு எல்லாமே.."

அவள் கண்களில் நீர் திரண்டிருந்தது. அவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். "நானும் அப்படித்தான்மா.."என்றவாறே அழத் தொடங்கினான். அங்கே காதல் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது!!!!

1 comment:

Balakumaran Lenin said...

தயவு செய்து.. இதை மட்டும் மறுபடியும் போஸ்ட் பண்ணுங்க சார்!!
செம சூப்பர்!!
நிறைய பேர் மிஸ் பனிருப்பாங்க இந்த அருமையான போஸ்ட்!!