November 14, 2008

அடங்கொக்காமக்கா...!!!






நடிகர் கவுண்டமணி ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு...

"என்னடா..ரிக்கி தம்பி.. எப்படிடா இருக்க அண்டார்டிக்கா வாயா ... வீட்ல எல்லாரும் சௌக்கியமா? அட எதிரியா இருந்தாலும் நலம் விசாரிக்கிறது தானேப்பா தமிழ் மரபு...ஐயா இன்னும் இந்தியா கிட்ட தோத்த பீலிங்க்ஸ்ல இருந்து வெளிய வரல போல இருக்கு? அட..விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா.. ஒன்கிட்ட சில விஷயம் சொல்லணும்னு ஆசைடா.. அதுக்கு தான் இந்த லெட்டர்..

உண்மைய சொல்லனும்னா இந்தியாகாரன் அத்தன பெரும் உனக்கு கடன்பட்டு இருக்கோம்டா பேரிக்கா தலையா.. நாக்பூர் டெஸ்ட்ல நம்ம பசங்க திடீர்னு ஆறு விக்கெட் அவுட் ஆனவுடனே சரி.. அவ்ளோ தான்னு நினச்சேன்... ஆனா உன்னோட அறிவு அப்போ வேல செஞ்ச ஸ்டைல் இருக்கே..அடங்க்கொன்னியா ரொம்ப பொறாமையா இருக்குடா..ஓவர் ரேட் மெதுவா இருக்குன்னு சொல்லி ஹஸ்சி, வைட், கிளார்க்னு எப்படிப்பட்ட உலகத்தரமான பவுலர்ஸ யூஸ் பண்ணி நம்ம பசங்கள நீ காப்பாத்துனனு எனக்கு தெரியும்டா.. முள்ளம்பன்றித் தலையன் வடிவேலு சொல்ற மாதிரி சொல்லணும்னா.. நீ ரொம்ப நல்லவன்டா... உனக்கு மட்டும் எப்படிடா நாயே இதெல்லாம் தோணுது?

எல்லா துறைலயும் இந்தியா நல்லா விளையாண்டாங்க..நாங்க தோல்விய ஒத்துக்கிறோம்னு நீ யாருக்குமே புரியாத ஒரு இங்கிலிஷ்ல சொன்னப்ப சரி ரைட்டு..பய புள்ள நல்லவந்தாண்டா நான் நினச்சேன்..ஆனா உங்க ஊர்ல போய் நீ போடுற சீனப்பாத்தா.. அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமின்னு தோணுது... ஏண்டா.. ஏன் தோத்திங்கனு கேட்டா யாரும் சரியா விளையாடலை.. அதனாலே தோத்தோம்னு சொல்லு.. அத விட்டுட்டு, சம்பந்தமே இல்லாம.... போன வருஷம் நாங்க ஆஸ்திரலியாவில விளையாண்டப்ப எங்க வாரியம் எங்கள கை விட்டுறுச்சு அத பத்தி பேசுங்கனு சொல்ற.. ..விட்டா சைமண்ட்ஸ் மீன் பிடிக்க போனதால தான் நாங்க தோத்தோம். அதனாலே..இனிமேல் யாரும் மீனே பிடிக்க கூடாதுன்னு கூட சொல்லுவ போல.. போடா டுபாக்கூரு.. அது இதுனு ஏண்டா உளர்றே..

இந்த டூர்ல நீ விளையாண்ட லட்சணம் என்னனு உனக்கு தெரியுமா? இதுல ஊருக்கு போய் இறங்கின உடனே ஐயா பேட்டி தர்றிங்க.. எல்லாரும் ஒழுங்கா விளையாடனும்.. இல்லனா டீம்ல இருக்க முடியாதுன்னு.. முதல நீ ஒழுங்கா விளையாடுடா பச்சில புடுங்கி.. விட்டா அம்பயருக்கு அன்னைக்கு மூடு சரி இல்ல.. ஜலதோஷம்..அதனால மூக்க தொடைக்க அடிக்கடி கைய தூக்கிகிட்டே இருந்தாரு.. அத போய் அவுட்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுவ போல..டே டிஸ்னிலான்ட் மண்டையா..உண்மைய ஒத்துக்கொங்கடா..

அது என்னடா உங்களுக்கு அப்படி ஒரு மப்பு.. எதிர் டீம்காரன்கிட்ட போய் உன் பொண்டாட்டி நல்லா இருக்காளா? அக்கா, அம்மா எல்லாம் சௌக்கியமானு கேட்டு கடுப்பேத்த வேண்டியது.. அதையே வேற எவனாவது உன்கிட்ட கேட்டுட்டான்னா, ஐயோ...அம்மா...மானம் போச்சே...மரியாத போச்சேன்னு பொலம்ப வேண்டியது.. அவங்க அழுகுணி ஆட்டம் ஆடுறாங்கன்னு வேற கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது.. ஏண்டா அணுகுண்டு வாயா... நீங்க பண்ணா ரைட்டு.. மத்தவங்க பண்ணா தப்பா..

சரி தம்பி.. முடிஞ்சது முடிஞ்சுபோச்சு.. நீங்க முன்னாடி மத்த டீம்க்கு என்ன செஞ்சிங்களோ அத தான் இன்னைக்கு அவங்க உங்களுக்கு செய்றாங்க..களத்துக்குள்ள வெச்சு எதிரணிக்காரங்கள திட்டுறதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கிரிக்கெட் ஆடுற வழிய பாருங்க.. அவ்ளோதாண்டா ஆப்பத்தலையா....


அன்புடன்,

கவுண்டமணி

2 comments:

ஸ்ரீதர்கண்ணன் said...

Super

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீதர்கண்ணன் said..
super...//

அடேங்கப்பா.. பழசு முதற்கொண்டு ஒண்ணு விடாம படிச்சு இருக்கீங்க.. ரொம்ப நன்றி நண்பா..