January 2, 2009

அவனும் அவளும்...(3)!!!


"நீ கவிதை எல்லாம் கூட எழுதுவியா?" அவனுடைய பழைய டைரி ஒன்றை புரட்டிக் கொண்டு இருந்தபோது அவள் கேட்டாள்.

"ம். அப்பப்போ. சும்மா தோணுனத எழுதி வைப்பேன்"

"அடேங்கப்பா. எல்லாம் ஒரே காதல் கவிதையால்ல இருக்கு"

"தபூஷங்கர்னா ரொம்ப பிடிக்கும். விகடன்ல அவரோட கவிதைகள படிச்ச எபக்ட் மேடம்"

"அப்ப நீங்களும் பெரிய கவிஞர் தான்னு சொல்லுங்க"

"சேச்சே.. அப்படில்லாம் இல்லம்மா.. பட்... நான் உனக்குத்தான் நன்றி சொல்லணும். நான் இந்த கவிதைகள எழுதுறேன்னா அது உனக்காகத்தானே. சோ.. தாங்க்ஸ்.. "

"அதுக்கும் நான்தானா.. என் நேரம்" அவள் சலித்து கொண்டாள்.

அவன் சிரித்து கொண்டு இருந்தான்.

அவன் அவளுக்காக எழுதிய கவிதைகளில் சில...

தொடங்கினால்
முடிந்து விடும்
என்பதாலேயே...
உனக்கான - என்
கவிதைகள்
எழுதப்படாமலே
இருக்கின்றன!!!

*******

நீ அருகில்
இல்லாத
நேரங்களில் கூட
என் வீடெங்கும்
நிரம்பி
வழிகின்றன...
உன் நினைவுகள்!!!

*******

ஏன் என்னைப்
பார்த்து அடிக்கடி
சிரிக்கிறாய் என
நான் உன்னைக்
கேட்டபோது -
"ச்சும்மா" என்று
சொல்லி.. அதற்கும்
சிரித்துச் சென்றாய்!!!

*******

நீ யார்
எனத் தெரியாத
நிலையிலும்....
நீ - என்
எல்லாமுமாக
இருக்கிறாய்..!!!

(இது அவன் அவளை பார்ப்பதற்கு முன் எழுதியது)!!!

2 comments:

Anonymous said...

கவிதைகள் நன்றாக உள்ளன..:-)

ச.பிரேம்குமார் said...

//தொடங்கினால்
முடிந்து விடும்
என்பதாலேயே...
உனக்கான - என்
கவிதைகள்
எழுதப்படாமலே
இருக்கின்றன!!!
//

இந்தக் கவிதை நல்லா இருக்கு :)