April 21, 2009

பேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..!!! (சங்கமம் போட்டிக்காக)


பேருந்தை பிடிக்கும்
அவசரத்தில் உணவை
மறுத்து ஓடிய நாட்களும்....

நிற்கும்போது ஏறாமல் - நகரத்
துவங்கியபின் ஓடிப்போய்
ஏறும் இளமைத்திமிரும்....

சக பயணியின் வசவை
ரசித்துக்கொண்டே படியில்
தொங்கும் பெருமிதமும்..

நண்பர்களின் பாட்டுக் கச்சேரியும்..
கணப்பொழுதில் சிரிப்பை தந்து
கடந்து போகும் பள்ளிப் பெண்ணும்..

நடத்துனரோடு ஆடும் நகைச்சுவை
கூத்தும் - பஸ் டே
கொண்டாட்ட குதூகலமும்..

எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

79 comments:

வினோத் கெளதம் said...

கார்த்தி நல்லா இருக்கு..
சப்மிட் பண்ணுங்க வோட்டு போடுறோம்..

ஆ.சுதா said...

|உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!|

கவிதை நால்லா இருக்கு கார்த்திகை பாண்டியன்,
எத்தனை கொடுமையான சம்பவம்.
படித்ததும் வலி கொள்ளும் கடைசி வரிகளிள்.

ஆதவா said...

இப்போதான் கல்லூரி பட பாடல்கள் கேட்டேன். சட்டென்று மனதுக்குள் வலி இறங்கியது... அதே வலியுடன் உங்கள் கவிதை படித்தால்//???

கவிதையில் ஆழமான தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அது படிப்பவர்களைக் குத்தி எடுக்கிறது! அருமை கார்த்திகைப் பாண்டியன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham ssid..
கார்த்தி நல்லா இருக்கு..
சப்மிட் பண்ணுங்க வோட்டு போடுறோம்..//

இங்க பாருடா.. சப்மிட் பண்ணிட்டு வரதுக்குள்ள கம்மென்ட்டா? ரொம்ப நன்றி நண்பா..

நையாண்டி நைனா said...

அங்கே என்ன நடக்குது?

நல்லா எழுதி இருக்கே நண்பா.

ஆனா ஒட்டு போட எனக்கு ரூபாய் அஞ்சு ஆயிரம் வேணும் (மதுரைக்காரங்க கொடுப்பாங்கன்னு சொன்னாங்க)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம் said..
எத்தனை கொடுமையான சம்பவம்.
படித்ததும் வலி கொள்ளும் கடைசி வரிகளிள்.//

என் வாழ்நாளில் மறக்க முடியாத கொடுமையான சம்பவம் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
இப்போதான் கல்லூரி பட பாடல்கள் கேட்டேன். சட்டென்று மனதுக்குள் வலி இறங்கியது... அதே வலியுடன் உங்கள் கவிதை படித்தால்//???//

சில நேரங்களில் இதுபோல எதேச்சையாக நடப்பது உண்டு ஆதவா..

//கவிதையில் ஆழமான தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அது படிப்பவர்களைக் குத்தி எடுக்கிறது! அருமை கார்த்திகைப் பாண்டியன்..//

நன்றி நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!


உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!//

நாட்கள் பல ஆனாலும் மறக்கமுடியாதது...
மனதை சுட்ட வரிகள் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
அங்கே என்ன நடக்குது?
நல்லா எழுதி இருக்கே நண்பா.
ஆனா ஒட்டு போட எனக்கு ரூபாய் அஞ்சு ஆயிரம் வேணும் (மதுரைக்காரங்க கொடுப்பாங்கன்னு சொன்னாங்க)//

அய்யா.. ஒரு வாரமா காணாம போயிருந்த நைனா கிடைச்சுட்டாரு.. நன்றி நண்பா.. என்னது அஞ்சாயிரமா? இங்க சாமியே நடந்து போறப்ப நைனா பிளைட்டு கேட்டா எப்படி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said..
நாட்கள் பல ஆனாலும் மறக்கமுடியாதது...
மனதை சுட்ட வரிகள் நண்பா//

எத்தனை நாள் ஆனாலும் மறக்காத வலி நண்பா..

Raju said...

"பஸ்" அப்டின்னதும் தர்மபுரி மேட்டர்தான் எனக்கு ஞாபகம் வாஅந்துச்சு..!
செயல் படுத்தீட்டீங்க பேரா..!
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நையாண்டி நைனா said...

/*அய்யா.. ஒரு வாரமா காணாம போயிருந்த நைனா கிடைச்சுட்டாரு.. நன்றி நண்பா.. என்னது அஞ்சாயிரமா? இங்க சாமியே நடந்து போறப்ப நைனா பிளைட்டு கேட்டா எப்படி..*/

அலுவல் காரணமா தான், அதை இங்கே சொன்ன பெரிய அழுவலே நடக்கும். அதெல்லாம் அப்புறம்.

ஆமா. இப்படி எஸ்கேப்பு ஆனா எப்படி? மதுர காரவுகன்ன தில்லு இருக்கணும் மாமு... சும்மா சும்மா சொல்லி பெருமை கொள்ள கூடாது

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
"பஸ்" அப்டின்னதும் தர்மபுரி மேட்டர்தான் எனக்கு ஞாபகம் வாஅந்துச்சு..!
செயல் படுத்தீட்டீங்க பேரா..!
வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

நன்றி நண்பா.. ஏனப்பா.. உங்க பேர டக்குன்னு சுருக்குனதுக்கு பழி வாங்கிடீன்களே.. பேரா..? என்ன கொடுமை சார் இது?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
அலுவல் காரணமா தான், அதை இங்கே சொன்ன பெரிய அழுவலே நடக்கும். அதெல்லாம் அப்புறம்.//

ச்சே.. நைனா ஸ்டைல்.. ரசித்தேன்..

//மதுர காரவுகன்ன தில்லு இருக்கணும் மாமு... சும்மா சும்மா சொல்லி பெருமை கொள்ள கூடாது//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டுத்தான் உடம்பு ரணகளமா இருக்கு.. ஆமா.. இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது?

லோகு said...

இப்பொழுதுதான் பார்த்தேன்.. பிரமாதப் படுத்தி விட்டீர்கள்.. அருமை..

நையாண்டி நைனா said...

/*நன்றி நண்பா.. ஏனப்பா.. உங்க பேர டக்குன்னு சுருக்குனதுக்கு பழி வாங்கிடீன்களே.. பேரா..? என்ன கொடுமை சார் இது?*/

அன்பு பேரா...

ஹா ஹா ஹா .. அப்படின்னா நம்ம டக்கு கிரிகெட் விளையாடும்போது டக்குன்னு டக் அவுட் ஆகிட்டார்னா எப்படி சொல்வாங்க..?

டக்கு, டக்குன்னு, டக்கவுட்டு ஆகிட்டருன்னா?

சூப்பரா இருக்குல்லே...

ஹா ஹா ஹா..

சும்மா, சும்மா நான் வெறுப்பு ஏத்தினா, நீங்களும் சும்மா சும்மா ரென்சன் ஆகாதீங்க, நான் சும்மா தான் சொன்னேன்,.

நையாண்டி நைனா said...

மாப்பி டக்குலசு... இருக்கியாமா நீயி....

ராமலக்ஷ்மி said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். பேருந்து தலைப்பென்றதும் இதுதான் என் நினைவிலும் நிழலாடியது. எவருக்கும் மறக்க முடியாத கறுப்பு தினமே அது:(!

கார்த்திகைப் பாண்டியன் said...

// லோகு said...
இப்பொழுதுதான் பார்த்தேன்.. பிரமாதப் படுத்தி விட்டீர்கள்.. அருமை..//

நன்றி லோகு.. என்னக்கு இந்த போட்டி பற்றி சொல்லி, என்னை கலந்து கொள்ள வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி..

லோகு said...

//நையாண்டி நைனா said...
ஹா ஹா ஹா .. அப்படின்னா நம்ம டக்கு கிரிகெட் விளையாடும்போது டக்குன்னு டக் அவுட் ஆகிட்டார்னா எப்படி சொல்வாங்க..?
//

ஏங்க மாப்ளைய இப்படி அசிங்க படுத்தறீங்க..

மாப்ளைக்கு கிரிக்கேட்டுனா என்னன்னே தெரியாதுன்னு உங்களுக்கு தெரியாதா?

அப்படிதானே டக்கு..

Prabhu said...

//
ஆனா ஒட்டு போட எனக்கு ரூபாய் அஞ்சு ஆயிரம் வேணும் (மதுரைக்காரங்க கொடுப்பாங்கன்னு சொன்னாங்க)//
பாத்தீங்களா தல, நம்ம ஊரப் பத்தி எப்படி பேசுறாங்கன்னு..

யப்பா, எங்க வாத்தியாரோட கவிதைக்கு நீங்கதான் ஐயாயிரம் குடுத்து ஓட்டும் போடனும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
ஹா ஹா ஹா .. அப்படின்னா நம்ம டக்கு கிரிகெட் விளையாடும்போது டக்குன்னு டக் அவுட் ஆகிட்டார்னா எப்படி சொல்வாங்க..?டக்கு, டக்குன்னு, டக்கவுட்டு ஆகிட்டருன்னா?
சூப்பரா இருக்குல்லே...//

ஐயோ ஐயோ.. நைனா கொலவெறியோட கிளம்பி இருக்காரு..

//சும்மா, சும்மா நான் வெறுப்பு ஏத்தினா, நீங்களும் சும்மா சும்மா ரென்சன் ஆகாதீங்க, நான் சும்மா தான் சொன்னேன்,.//

ஆமா இங்க யாரோ ரென்சனா இருக்கீங்கலாமே.. யாரு.. நைனா கிட்ட சொன்னா குச்சி மிட்டாய் வாங்க்திட் தருவாரு..

நையாண்டி நைனா said...

எங்கள் அணி தலைவர், வீர, வீர, வீர ஜெகவீர அண்ணன் டக்குவை கேலி செய்யும் எதிர் அணி தலைவர் அண்ணன் லோகுவை வன்மையாக ஆதரிக்கிறேன். (எனக்கு ஒப்பனிங் வெல்லாட தரலல்லே, நல்லா அனுபவி)

நையாண்டி நைனா said...

Hi Guys...
See You Tomorrow.
I am leaving for the day.

Enjoy with all your imaginations and creative thoughts.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராமலக்ஷ்மி said..
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். பேருந்து தலைப்பென்றதும் இதுதான் என் நினைவிலும் நிழலாடியது. எவருக்கும் மறக்க முடியாத கறுப்பு தினமே அது:(!//

ரொம்ப நன்றி மேடம், எனக்கு வேற எதுவும் தோணலை.. இனைக்கு வரைக்கும் என்னால ஒத்துக்கொள்ள முடியாத நிகழ்வு அது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
பாத்தீங்களா தல, நம்ம ஊரப் பத்தி எப்படி பேசுறாங்கன்னு..யப்பா, எங்க வாத்தியாரோட கவிதைக்கு நீங்கதான் ஐயாயிரம் குடுத்து ஓட்டும் போடனும்.//

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.. மதுரை போல எந்த ஊரும் வராது.. ஆகா, நம்ம ஊரு பயபுள்ள என்னமா நம்மள சப்போட் பண்ணுது.. ரொம்ப நன்றி பப்பு.. அப்புறம், டூர் சூப்பரா என்ஜாய் பண்ணி இருப்பீங்கன்னு நம்புறேன்:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said...
Hi Guys...See You Tomorrow.
I am leaving for the day.
Enjoy with all your imaginations and creative thoughts.//

bye nanbaa..

சொல்லரசன் said...

மறக்கமுடியாத கருப்புதினம்.
தற்போதைய தேர்தல் நேரத்தில்
அனைவரும் நினைவுபடுத்தி கொள்வது நலம்.

Suresh said...

கார்த்தி மச்சான் சூப்பர் :-) நல்லா இருக்கு போடு மச்சான் வோட்டு உனக்கு தான்

நானும் ஒன்னு அடிச்சு வச்சிட்டேன் 51வது பதிவு அது தான்

Suresh said...

//உடன் பழகிய தோழிகள் கண்முன்னே உயிரோடு கொளுத்தப் படும்வரை.. !!!//

கடைசி வரி நச் மச்சான்

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said.. மறக்கமுடியாத கருப்புதினம்.
தற்போதைய தேர்தல் நேரத்தில்
அனைவரும் நினைவுபடுத்தி கொள்வது நலம்.//

வாங்க நண்பா.. ஊருக்கு போயிட்டு வந்தீங்க போல.. சத்தமே இல்லை? நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Suresh said..
கார்த்தி மச்சான் சூப்பர் :-) நல்லா இருக்கு போடு மச்சான் வோட்டு உனக்கு தான் //

நன்றி மாப்பு..

//நானும் ஒன்னு அடிச்சு வச்சிட்டேன் 51வது பதிவு அது தான்//

சீக்கிரம் போடுங்க.. அதுக்கு முன்னாடி அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வலிக்குது..........

Anonymous said...

யதார்த்த வரிகள, நல்லா இருக்கு!

ச.பிரேம்குமார் said...

நல்ல பதிவு பாண்டியன். வெற்றி பெற வாழ்த்துகள்.

அந்த கொடுமையை நினைத்தால் இப்போதும் கடுப்பாகத்தான் இருக்கிறது இந்த அரசியல்வாதிகளை நினைத்து :(

கார்த்திகைப் பாண்டியன் said...

//SUREஷ் said..
வலிக்குது..........//

அந்த வலியை பதிவு பண்ணும் முயற்சிதான் நண்பா இந்தக் கவிதை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
யதார்த்த வரிகள, நல்லா இருக்கு!//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said...
நல்ல பதிவு பாண்டியன். வெற்றி பெற வாழ்த்துகள்.அந்த கொடுமையை நினைத்தால் இப்போதும் கடுப்பாகத்தான் இருக்கிறது இந்த அரசியல்வாதிகளை நினைத்து :(//

சில சம்பவங்கள் நம் நெஞ்சில் ஆறாத ரணங்களை விட்டுச் செல்லும்.. பேருந்து என்றதும் எனக்கு இந்த சோகம்தான் ஞாபகம் வந்தது.. அதைத்தான் பதிவு செய்தேன்..

வேத்தியன் said...

பேருந்தை பிடிக்கும்
அவசரத்தில் உணவை
மறுத்து ஓடிய நாட்களும்....//

ஆஹா...
அவசரமான ஆரம்பமா கீதே..

வேத்தியன் said...

நிற்கும்போது ஏறாமல் - நகரத்
துவங்கியபின் ஓடிப்போய்
ஏறும் இளமைத்திமிரும்....//

உண்மை உண்மை...
:-)

வேத்தியன் said...

சக பயணியின் வசவை
ரசித்துக்கொண்டே படியில்
தொங்கும் பெருமிதமும்..//

இது கலக்கல் பாஸு...
:-)

வேத்தியன் said...

கணப்பொழுதில் சிரிப்பை தந்து
கடந்து போகும் பள்ளிப் பெண்ணும்..
//

ஆஹா
பின்னுறியளே தல...

வேத்தியன் said...

எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!
//

நச்...
சூப்பர்...

வேத்தியன் said...

கார்த்தி, கலக்கல்...

புதியவன் said...

//எல்லாம் அவனுக்கு
பிடித்து இருந்தன..!!

உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!//

ரொம்ப அருமையா முடிச்சிருக்கீங்க கவிதையை...

கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன்..//

அணு அணுவா ரசிச்சு சொல்லி இருக்கீங்க.. ரொம்ப நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புதியவன் said..
ரொம்ப அருமையா முடிச்சிருக்கீங்க கவிதையை...கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...//

முடிவை மனதில் வைத்து எழுதிய கவிதைதான் நண்பா.. நன்றி..

Anbu said...

anna super

தீப்பெட்டி said...

கவிதை பிரமாதம்.
கலக்கிட்டீங்க கார்த்தி

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
anna super..//

நன்றி அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said..
கவிதை பிரமாதம்.
கலக்கிட்டீங்க கார்த்தி//

ரொம்ப நன்றி நண்பா..

பட்டாம்பூச்சி said...

மனதை சுட்ட வரிகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நெஞ்சில் இன்னும் எரிந்து கொண்டே இருக்கும் நினைவுகள் நண்பா..

குமரை நிலாவன் said...

கவிதை அருமை நண்பா

என்னாலும் நண்பா

இன்னைக்கு வரைக்கும் என்னால ஒத்துக்கொள்ள முடியாத நிகழ்வு அது..

முரளிகண்ணன் said...

கவிதை அருமை

அத்திரி said...

அருமையான கவிதை நண்பா

அகநாழிகை said...

கார்த்தி,
அருமையான பதிவு.
கவிதைக் கரு உணர்ந்து ரசிக்க வேண்டிய வரிகள்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Karthik said...

feel panna vachiteengale kadasi varyile.. sooperunga!!

naanum government bus la thaan kallurikku poren

கார்த்திகைப் பாண்டியன் said...

//குமரை நிலாவன் said..
கவிதை அருமை நண்பா என்னாலும் நண்பா இன்னைக்கு வரைக்கும் என்னால ஒத்துக்கொள்ள முடியாத நிகழ்வு அது..//

மனதை நோகடிக்கும் நிகழ்வுதான் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said..
கவிதை அருமை//

நன்றி முரளி

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
அருமையான கவிதை நண்பா//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

/// "அகநாழிகை" said...
கார்த்தி,அருமையான பதிவு.
கவிதைக் கரு உணர்ந்து ரசிக்க வேண்டிய வரிகள்.வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி வாசு

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
feel panna vachiteengale kadasi varyile.. sooperunga!!naanum government bus la thaan kallurikku poren//

thanks karthi.. be safe pa

பீர் | Peer said...

அருமை நண்பா, சிரித்துக்கொண்டே வந்து கடைசியில் கண்ணீர் சிந்தவைத்துவிட்டீர்.

ஆமா... அங்கிட்டு நம்ம கடைய தொறக்க சொல்லிட்டு, பேசாம வந்துட்டீங்க? போனி பண்ணுங்க பாஸூ...இல்லனா கடைய மூட வேண்டிவந்துடும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி.. நம்ம ஊருக்காரர் நம்ம பக்கத்துக்கு வந்து இருக்கீங்க.. உங்க கடைப்பக்கம் வந்து பார்த்தேன்.. நல்லா இருக்கு.. தொடருங்க.. நானும் தொடருறேன்..

பொன்.பாரதிராஜா said...

அந்தக் கொடுமை நடந்த போது நான் தர்மபுரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன்...இப்போது நினைத்தாலும் வயிறு பற்றி எரியும் நிகழ்ச்சி...
அருமையான கவிதையில்,அமிலமாய் இந்த வரிகள்...

//உடன் பழகிய தோழிகள்
கண்முன்னே உயிரோடு
கொளுத்தப் படும்வரை.. !!!

வாய்ப்பே இல்லை கார்த்தி...

உமா said...

//உடன் பழகிய தோழிகள் கண்முன்னே உயிரோடு கொளுத்தப் படும்வரை.. !!!//

மனதை என்னவோ செய்துவிட்டது.

மகேஷ் : ரசிகன் said...

பொட்டில் அறையும் கடைசி வரிகள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன். பாரதிராஜாsaid...
அந்தக் கொடுமை நடந்த போது நான் தர்மபுரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன்...இப்போது நினைத்தாலும் வயிறு பற்றி எரியும் நிகழ்ச்சி...அருமையான கவிதையில், அமிலமாய் இந்த வரிகள்...//

கேட்கவே சங்கடமாக உள்ளது பாரதி.. நீ அங்கே இருந்த சூழ்நிழையில் உன் உள்ளம் எத்தனை வேதனைப் பட்டிருக்கும்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா said..
மனதை என்னவோ செய்துவிட்டது.//

சோகம் ததும்பும் நினைவுதானே தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகேஷ் said..
பொட்டில் அறையும் கடைசி வரிகள்!//

வருகைக்கு நன்றி தோழரே..

பாலகுமார் said...

உங்கள் உணர்வுகளை, வார்த்தைகளில் அப்படியே கொண்டு வந்துள்ளீர்கள் , கார்த்தி ...

வாழ்த்துக்கள் ....

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

Anonymous said...

வாவ்! ரொம்ப நல்லாருக்கு கா.பா!

வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி நண்பா

Venkatesh Kumaravel said...

காயத்தின் தழும்புகள் பார்க்கையில் மனதில் அடிபட்ட நாளின் வலி. முடிவில் உருக்கமான வரிகள்.
ஆறாதோ பஸ்ஸினால் சுட்ட வடு? :(

ப்ரியமுடன் வசந்த் said...

தல கலக்கீட்டீங்க
எப்படிங்க இத்தனை பின்னூட்டம்
நம்மளுக்கு ஒன்னு வர்ரதே கஷ்டமா இருக்கு.......

nila said...

கவிதைய படிச்சு மிரண்டத விட கருத்துரைகள் தான் ரொம்ப பயமுறுத்துது....
எந்த நம்பிக்கைல நானும் எழுதினேன்னு தெரியலிங்கனா

தமிழ் said...

அருமை