September 25, 2010

எஸ்.எம்.எஸ் மொக்கைகள்

தண்ணி அடிச்சா மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

* மாப்ள.. நீ ஒண்ணியும் கவலைப்படாத.. நான் ஸ்டேடியாத்தான் இருக்கேன்..

* டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

* ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

* நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

* இன்னொரு கல்ப் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

* இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

கடைசியா.. இதுதான் பட்டாசு...

* மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது

@@@@@

உலகத்துலேயே சின்ன லீவ் லெட்டர் எது தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,

உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்

மிக்க நன்றி.

@@@@@

* டீ மாஸ்டர் என்னதான் "லைட்டா" டீ போட்டாலும், அதுல இருந்தாலும் வெளிச்சம் வராது

* பவர் கிளாசை எவ்ளோ நேரம் பிரிட்ஜ்ல வச்சாலும் அது கூலிங் கிளாஸ் ஆகாது

* ரயில் என்னதான் வேகமாப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் வரும்..

@@@@@

உலகக் காதலின் சின்னமா தாஜ்மகால சொல்றோம். ஆனா உங்களுக்கு சில உண்மைகள் தெரியுமா?

* மும்தாஜ் ஷாஜகானோட நாலாவது பொண்டாட்டி (மொத்த டிக்கட் ஏழு)

* மும்தாஜ கரெக்ட் பண்றதுக்காக அவளோட புருஷனையே ஷாஜுக்குட்டி போட்டுத் தள்ளியிருக்காரு (இது காதலா கள்ளக்காதலா?)

* மும்தாஜ் செத்தது அவளோட பதினாழாவது பிரசவத்துல (அவ்வ்வ்வவ்வ்வ்)

* அவ செத்ததுக்குப் பிறகு மும்தாஜோட தங்கச்சிய வேற சாசு கரெக்ட் பண்ணியிருக்காரு (மச்சக்காரன்யா..)

தாஜ்மகாலைப் பத்தி இப்போ சொல்லுங்க சாமிகளா..

@@@@@

உனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக் கொள். விருப்பம் போல காதல் செய். உள்மனம் சொல்வதை மட்டும் கேள். மனதில் தோன்றுவதை மட்டுமே பேசு. ஒரு நாள் இந்த உலகம் உன்னைப் பார்த்துச் சொல்லும்..

"தறுதலப் பயபுள்ள.. இது யார் பேச்சையும் கேக்காது.. எங்குட்டு உருப்புடப் போகுது?"

@@@@@

பத்து வருஷத்துக்கு முன்னாடி..

ஒரு பணியாரம் பத்து பைசா, ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா

இன்னைக்கு..

ஒரு போன்காலுக்கு பத்து பைசா, ஒரு பணியாரம் ஒத்த ரூவா

அதனாலத்தான் சொல்றேன்..

வாழ்க்கை ஒரு வட்டம்டா

@@@@@

இவ்வளவு சொல்லிட்டு "அவரப்" பத்தி சொல்லலைனா எப்படி?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே காமெடிதான்.

* "கில்லி"ன்னு சொல்லிக்கிட்டு ஹீரோ கபடி ஆடுவாரு

* "போக்கிரி"ல போலிஸ்னு சொல்லிபுட்டு கடைசில கூர்க்காவ காமிப்பாங்க

* "அழகிய தமிழ்மகன்"னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அப்படி யாரையும் கண்ணுல காட்டவே இல்ல

* இது கூட பரவாயில்லைங்க.. "குருவி"ன்னு சொன்னாங்க.. ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல

* "வேட்டைக்காரன்"னு சொல்லி ஒரு ஈத்தர ஆட்டோக்காரனக் காமிக்குறாங்க

* கடைசி கொடுமை.. "சுறா"ன்னு சொல்லி கருவாடக் காமிக்குறாங்க..

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

(வர பதிவுகள் எல்லாமே ரொம்ப சீரியஸா இருக்கு.. ஏன் மொக்கை போட மாட்டேங்கிற என்று கேட்ட நண்பர்களுக்காக..)

19 comments:

ஆ.ஞானசேகரன் said...

எல்லாம் கலக்கல்...... கடைசி வில்லங்கதனம் சொந்த பகையா?

சிவாஜி சங்கர் said...

நாமளும் ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டியதான்.. ;)

Karthik said...

:))))))))

அத்திரி said...

அப்புறம் ”அவங்க” விஜய் ரசிகர்னு கேள்விப்பட்டேன்..........அடக்கி வாசிங்க புரொபசர்..................

அத்திரி said...

தளபதிய சீண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதோ..............ஞாபகம் வச்சிக்குங்க திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமில்லை அருவாவுக்கும் ஸ்பெசல்..............................ஜாக்க்க்க்க்க்க்க்குரதை

க.பாலாசி said...

//உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்//

இது அனுபவங்களா?

எல்லாத்தும் சிரிக்கலாம்...

Anbu said...

///அப்புறம் ”அவங்க” விஜய் ரசிகர்னு கேள்விப்பட்டேன்..........அடக்கி வாசிங்க புரொபசர்..................\\\

அப்படியா...

kannamma said...

Ending???????இது கொஞ்சம் ஓவர்...............நல்லவங்களா ரசிக்க கத்துக்கோங்க .......ஒரு நாள் பாருங்க யாருகிட்டயாவது அடி வாங்கப்போரிங்க Sir............

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
எல்லாம் கலக்கல்...... கடைசி வில்லங்கதனம் சொந்த பகையா?//

அது இல்லாம நாம ஏது தலைவரே?

//Sivaji Sankar said...
நாமளும் ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டியதான்.. ;)//

தாங்காது தம்பி.. யோசிச்சு செய்ங்க..:-)))

//Karthik said...
:))))))))//

எஸ்கேப்பு?

// க.பாலாசி said...
இது அனுபவங்களா?எல்லாத்தும் சிரிக்கலாம்...//

அனுபவமா? உண்மைல இப்படிப் பேசினா மறுவினாடி டிசி தருவாங்கப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said...
அப்புறம் ”அவங்க” விஜய் ரசிகர்னு கேள்விப்பட்டேன்..........அடக்கி வாசிங்க புரொபசர்... தளபதிய சீண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதோ..............ஞாபகம் வச்சிக்குங்க திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமில்லை அருவாவுக்கும் ஸ்பெசல்//

சிறுநரியின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்ல.. ஹா ஹா ஹா

//Anbu said...
அப்படியா...//

அன்பு.. நீயும் கூட்டணில சேர்ந்துடாதப்பா

//kannamma said...
Ending???????இது கொஞ்சம் ஓவர்...............நல்லவங்களா ரசிக்க கத்துக்கோங்க .......ஒரு நாள் பாருங்க யாருகிட்டயாவது அடி வாங்கப்போரிங்க Sir............//

உன்னோட ஆசைன்னு வெளிப்படையாவே சொல்லுமா.. உன் திட்ட்ம் பலிக்காது:-)))

ஜாபர் ஈரோடு said...

//உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ
நான் கிளாசுக்கு வரமாட்டேன்//

கார்த்தி இது அனுபவமா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//பதினாழாவது//
பதினாலாவதா? பதினேழாவதா?

Mahi_Granny said...

'' நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க'' தப்பாவே நினைக்கலீங்க . ( just forn fun .)ஆனாலும் நல்லாவே இருக்குங்க

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. நல்ல மொக்கை. வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கார்த்தி....அந்த லீவு லெட்டர் சொந்த அனுபவம்போல இருக்கே !

வால்பையன் said...

எனகென்னமோ தாஜ்மகால் மேட்டர் சந்தேகமா தான் இருக்கு!

வால்பையன் said...

வேற எதாவது காரணத்துக்கு கட்டியிருக்கலாம்!, முக்கியமா முஜ்தாஜுக்கு பிறகு மத்த பொண்டாட்டிகள் பண்ணிய கொடுமைக்காக!

:)

நிலாமகள் said...

நல்லாயிருக்கு வேடிக்கை... ஹையோ ஹையோ ....!

Anonymous said...

//(வர பதிவுகள் எல்லாமே ரொம்ப சீரியஸா இருக்கு.. ஏன் மொக்கை போட மாட்டேங்கிற என்று கேட்ட நண்பர்களுக்காக..)//

இப்படி போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்காமல் கேட்டு இருப்பாங்க பாண்டியன்..