July 30, 2011

வெப்பம் - திரைப்பார்வை

ஒரு சில படங்களைப் பார்க்கும்போது இது நல்ல படமா இல்லை நாதாரிப் படமா என்கிற மாதிரியான குழப்பம் மனதுக்குள் வந்து சேரும். வெப்பம் அதுமாதிரியான படம். இயக்குனராக எனக்குப் பிடிக்காத, ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னை ஆச்சரியப்படுத்தும், கவுதம் வாசுதேவ மேனனின் படம். கதை கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் கதையை ஒத்து வருகிறது. இதைப் பார்த்த பிறகு ஆரண்ய காண்டமும் இதுவும் ஏதாவதொரு படத்திலிருந்து பொதுவாக சுடப்பட்ட கதையோ என சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் எங்கே ஆரண்ய காண்டம் ஜெயித்ததோ - திரைக்கதை - அங்கே வெப்பம் காலை வாருகிறது.


குப்பத்தில் வசிக்கும் பாலாஜியும் கார்த்திக்கும் அண்ணன் தம்பிகள். கதை பாலாஜியின் பார்வையில் விரிகிறது. விஷ்ணு கார்த்தியின் உயிர் நண்பன். சின்ன வயதில் இருந்தே இவர்களை வளர்த்துவரும் பெரியவரின் மகள் ரேவதிக்கும் கார்த்திக்கும் காதல். கார்த்தியின் அப்பா ஜோதி அந்த குப்பத்தின் பிரபலமான மாமா. தன் அம்மா சாகக் காரணமானவன் என்பதால் கார்த்தியை ஜோதியிடம் இருந்து விலக்கியே வைக்க வேண்டும் என்பதில் பாலாஜி வெகு கவனமாக இருக்கிறான்.

ஜோதியிடம் இருந்து விபச்சாரத் தொழில் செய்யும் விஜியை விஷ்ணு காதலிக்கிறான். அவளை அங்கிருந்து மீட்டெடுக்க போதைப்பொருள் கடத்த சம்மதிக்கிறான். அவனுடைய துணைக்கு கார்த்தியும் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சரக்கைக் கொண்டு போகும் வழியில் தங்களைக் கொலை செய்ய ஜோதி திட்டம் போட்டிருப்பது இருவருக்கும் தெரிய வருகிறது. என்ன செய்வதென்று தெரியாத சூழலில் விஷ்ணு திடீரெனக் கொல்லப்பட கொலைப்பழி கார்த்தி மீது விழுகிறது. யார் உண்மையான கொலையாளி, அவர்கள் கடத்திப்போன சரக்கு என்ன ஆனது, ஜோதியை சகோதரர்கள் பழிவாங்கினார்களா என்பதுதான் வெப்பம்.


கார்த்தியாக அறிமுகம் ஆகியிருப்பது நானி. தேடிப்பிடித்து ஒரு டோங்கிரியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பேருக்காகாவது கலக்கி இருக்க வேண்டாமா.. (ஹி ஹி ஹி..). எல்லா சீனிலும் இறுக்கமாகச் சுற்றி வருவதைத் தவிர மனிதர் வேறெதுவும் செய்யவில்லை. விஷ்ணுவாக வரும் கார்த்திக் குமார்தான் கலக்கல். {நிஜப்பேர் அப்படி..:-))))} எப்போதும் தியாகம் செய்யும் நண்பன், அமெரிக்க ரிட்டர்ன் இளிச்சவாய் மாப்பிள்ளை என்று நடிப்பவர் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். காதலிக்கும் பெண்ணுக்காக எதையும் செய்யத் தயாராகும் இடம், கேலியும் கிண்டலும் கலந்த பேச்சு, குப்பத்துக்காரனின் மொழி என்று எல்லாமே கச்சிதம்.

விஜியாக வரும் பிந்து மாதவி செம கட்டை. காதலிப்பவன் கண்முன்னே கஸ்டமர் வந்து போக தான் அனுபவிக்கும் சங்கடத்தை அழகாக வெளிப்படுத்துகிறார். அரையடி ஆழாக்கு உயரத்திலிருக்கும் நித்யா மேனன் எதிலும் சேர்த்தி இல்லை. மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல. முதல் காட்சியில் இவர் கடலுக்குள் போவதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள் பாருங்கள்.. அடேங்கப்பா.. பாலாஜியாக வருபவர் யாரெனத் தெரியவில்லை. கவுதம் குரல் கொடுத்திருக்கிறார் போல. வில்லன் ஜோதியாக வரும் ஆஜானுபாகுவான மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். உடம்பு அத்தனையும் விஷம் என்பதைக் கண்களில் காட்டுகிறார்.


இயக்குனர் மணிரத்னத்தின் ரசிகையாய் இருந்திருக்க வேண்டும். பேசும் வசனம் ஒரு கருமமும் புரிவதில்லை. அதோடு கவுதமின் பாதிப்பு படபடவென வந்து விழும் நிமிஷத்துக்கு ரெண்டு கெட்ட வார்த்தைகளில் தெரிகிறது. கதை ஒரு குப்பத்தில் நிகழ்கிறது. ஆனால் விஷ்ணு தவிர்த்து யாருமே அந்தப்பகுதியோடு பொருந்த முடியவில்லை. அதிலும் கனவுப்பாட்டு வந்துவிட்டால் எல்லாரும் அல்ட்ரா மாடர்னாக இலக்கியத் தமிழில் பாட்டுப் பாடுகிறார்கள். கொடுமைடா சாமி.

நா.முத்துகுமாரின் பாடல்கள் - ஜோஷ்வா ஸ்ரீதர் இசை. பாட்டைக் கேட்டுத்தான் படத்துக்குப் போக வேண்டுமெனத் தீர்மானித்ததே. ஆனால் ஒரு பாட்டு கூட பார்க்க விளங்கவில்லை. அத்தோடு பின்னணி இசை பயங்கர இரைச்சல் நமக்கு ஒரே எரிச்சல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ். ஒரு மாதிரியான பச்சை ஃப்ளோரசண்ட் நிறத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கிரிம் மூடுக்கு அது நன்றாக சூட் ஆகிரது. பாடல்களில் டாப் ஆங்கிள்களில் வரும் அபார்ட்மெண்ட் காட்சிகள் ரொம்பவே அழகு. ஆண்டனியின் எடிட்டிங்தான் படத்துக்கு பெரிய பிளஸ். முதல் பாதி துண்டு துண்டாக இருக்கும் விஷயங்களுக்கு இரண்டாம் பாதியில் விடை தெரிய வரும் இடங்கள்தான் படத்தில் பார்ப்பது மாதிரியான விஷயம். இதுவும் இல்லையென்றால் படம் அரே சாம்பாதான்.


சுவாரசியமான சின்ன சின்னக் கதைகளைக் கோர்த்து அழகாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார் இயக்குனர் அஞ்சனா. முதல் பாதியைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக் கதை சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸை உடைக்கும்போது பிரமாதமாக வந்திருக்கும். ஆனால் முதல் பாதி சீக்கிரம் இண்டெர்வெல் விடுங்கப்பா எனக் கதற வைப்பதால், இத்தனைக்கும் முதல் பாதி ஐம்பது நிமிஷம்தான், சரிப்பட்டு வரவில்லை. பெண் இயக்குனர்கள் என்றாலே ஜாலி கோலியாக படம் எடுக்காமல் ஒரு துணிச்சலான குப்பத்து சப்ஜெக்ட் - போதைப்போருள் என எடுத்தவரை ஓகே. என்றாலும் மொத்தமாக ஒருத் திரைப்படம் என வரும்போது.. பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா.

வெப்பம்சுடும்.

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

விமர்சனமும் சூடா இருக்கே...

குடந்தை அன்புமணி said...

ஓகே.

selventhiran said...

ஜாலி கோலி, டோங்கிரி, நாதாரி, செம கட்டை, மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல //

யோவ் கானாபானா, எதை நோக்கிப் போகிறாய்...?!

கார்த்திகைப் பாண்டியன் said...

தமிழ்வாசி..
படமும் அப்படித்தானே நண்பா

அன்புமணி
நன்றி தல..

செல்வா..
வலைப்பூ ஒரு விளையாட்டுத்தானே. மத்த இடத்துல முடியாத ஆட்டமெல்லாம் இங்கே ஆடிப் பார்ப்போமே..:-))

Anonymous said...

பேசாம படத்துக்கு பேர குப்பம்னு வச்சிருக்கலாமோ?! :)

Unknown said...

சரியான டப்பா படம்

//மந்த்ராவுக்கு தூரத்து உறவு போல //

உண்மையா ?

அன்பேசிவம் said...

nithya... manthraa... yovv:-))

Balakumaran Lenin said...

என்னை மாதிரியே நீங்களும் முதல் நாள் 'சூடு' வாங்கிருக்கீங்க சார்!!

ஹேமா said...

சரி சரி கார்த்தி...நீங்களே சூடா இருக்கீங்கபோல !

Sivakumar said...

என்னைபோலவே நீங்களும் நொந்துருக்கீங்க..சியர்ஸ்!!

மேவி... said...

"பெட்டர் லக் ஃபார் தி நெக்ஸ்ட் மூவி அஞ்சனா."

இதுக்கு காஞ்சனாவுக்கு போயிருக்கலாம்

Unknown said...

Wolę grać tylko na sprawdzonych stronach kasyn online. Możesz wybrać tutaj https://top10casino.pl/kasino/casinia/