
கொஞ்சம் தோரணை.. நிறைய ரோதனை..
இந்த சூழ்நிலையில் மூன்று சதிகாரர்களையும் தான் கொன்று விட்டதாக சொல்லிக் கொண்டு அரண்மனைக்கு வருகிறான் பெயரிலி(Nameless) ஒருவன். அவனை நன்றாக சோதனை செய்த பிறகு அரசனை சந்திக்க அனுமதிக்கிறார்கள். தான் கொன்றதாக சொல்லும் மூன்று பேரின் ஆயுதங்களையும் அவன் அரசனிடம் சமர்பிக்கிறான். பல பரிசுகள் பெறுவதோடு அரசனை நெருங்கி பத்தடி தூரத்தில் உட்காரும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவன் மூன்று பேரையும் எப்படி கொன்றான் என அரசன் கேட்க பெயரிலி தன் கதையை சொல்லத் துவங்குகிறான்.
செஸ் விளையாட்டுக்கூடம் ஒன்றில் ஸ்கையை நேரடியாக சந்திக்கிறான் பெயரிலி. அங்கே நடக்கும் ஆக்ரோஷமான சண்டையின் முடிவில் ஸ்கை சாகிறான். அவனுடையின் ஈட்டியின் முறிந்த முனையை எடுத்துக் கொண்டு ஜாவ் (Zhao) என்னும் நாட்டுக்கு பயணம் ஆகிறான் பெயரிலி. அங்கே ஒரு எழுத்துப்பயிற்சி பள்ளியில்தான் ஸ்நொவும் ஸ்வார்டும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் காதலர்கள். ஆனால் ஸ்கைக்கும் ஸ்நொவுக்கும் முன்னரே பழக்கம் உண்டு. இதை ஸ்வார்டிடம் தெரிவிக்கிறான் பெயரிலி. கோபம் கொள்ளும் ஸ்வார்ட் ஸ்னோவை பழி வாங்குவதற்காக அவள் கண்முன்னரே தன் பணிப்பெண்ணான மூனுடன் உறவு கொள்கிறான். வெறி கொள்ளும் ஸ்னோ ஸ்வார்டையும், மூனையும் குத்திக் கொல்கிறாள். மறுநாள் படைவீர்கள் முன்னால் பெயரிலியுடன் மோதும் ஸ்னோ ஆத்திரத்துடன் போராடி செத்துப்போகிறாள். இத்துடன் பெயரிலி சொல்லும் கதை முடிகிறது.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...