April 19, 2011

அழகர் திருவிழாவும் சில அக்கப்போர்களும்


டேய் என்னடா இது சாமியையும் காணோம் ஒரு கூட்டத்தையும் காணோம்

ஏண்டா லூசுங்களா சாமி காலைல ஆறரை மணிக்கு ஆத்துல இறங்குவாராமாம் இவங்க மத்தியானம் பனிரெண்டு மணிக்கு வந்து யாரையும் காணோம்னு தேடுவாய்ங்களாம் போங்கடா போக்கத்தவய்ங்களா போயி மண்டகப்படிகள்ல தேடி பாருங்கடா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது வேட்டைக்காரன் வர்றதப் பார்த்து

என்னடா நம்ம வாராரு வாராரு அழகர் வாராரு பாட்டயே காணோம்

உங்களுக்கு மட்டும் எல்லாத்துலையும் புதுசா புதுசா கேக்குதல்ல அழகருக்கு மட்டும் அதே பாட்ட போட்டிக்கிட்டு இருந்தா முடியுமா அதனாலத்தான்யா மாற்றம் ஒன்றே மாறாததுடா தம்பி

வெளங்கிரும்


ஆத்துல தண்ணி ஜாஸ்தி விட்டுருக்காய்ங்க பரவாயில்ல

இந்த வருஷம் முடி இறக்கம் நிறைய போலயேடா


எல்லாம் வெய்யக்காலம் மாப்ள டெக்னிக்கலா மொட்டயப் போட்டுட்டு சாமி பேரச் சொல்லி எஸ்கேப் ஆயிடுறாய்ங்க


இதுதான் உங்க தொழிலேவாண்ணே

ஆமா தம்பி நாங்க எல்லாம் ஒரே ஊருக்காரவுக ஆட்டுத்தோல பதப்படுத்தி பை செஞ்சு திருவிழா காலத்துல கொண்டு வந்து விப்போம் மத்த சமயங்கள்ல வெவசாயம் பார்ப்போம் இதுமாதிரி முப்பது குடும்பம் இருக்கோம் முந்தி நூறு குடும்பத்துக்கிட்ட இருந்தோம் இப்ப எங்க இந்த தலைமுறைப் பிள்ளைக எல்லாம் படிச்சுப்புட்டு வேற வேலைக்குப் போயிருச்சுக இது நிரந்தரமான வருமானம் கிடையாதுல


இந்த வருஷம் நல்ல வியாபாராமாண்ணே


இல்ல தம்பி இப்போ புதுசா ஏதோ பம்ப்பு ஒண்ணு செஞ்சு விக்கிறாக வர்ற மனுஷன குளுமையாக்க தண்ணி பீய்ச்சணும்னா ஆட்டுத்தோல் பைதான் வேணும்கிறது ஐதீகம் அதெல்லாம் யாரு மதிக்கிறா எல்லாம் கலிகாலம் ப்ச் விடுங்க தம்பி நன்றி வாறோம்


டேய் அந்த ப்ளூ சேல வர்றாள்ல அவ மேல தண்ணிப் பீச்சுடா

அதேதாண்டா எலேய் அவ வெக்கப்பட்டு சிரிக்கிறாடா


விடாதடா கரெக்டா அவ ***** மேல அடிடா மாப்ள


அய்யய்யோ பின்னாடி வர்றவன் அவங்கப்பன் போல இடத்த விட்டு ஜெண்ட் ஆகுங்கடா


சாமி ராமராயன் மண்டகப்படில இருக்காராம்

இந்த வருஷமும் பச்சப்பட்டுதானா


ஆமாங்க

ஹே ஹே ஹே எங்க வருஷா வருஷம் அவரும் பச்ச உடுத்தித்தான் எறங்குறாரு ஆனா எதும் பசுமையா நடக்க மாட்டேங்குதே பிரச்சினைதான் ஜாஸ்தி ஆகுது ஹ்ம்ம்ம்


கொஞ்சம் ***** மூடிக்கிட்டு வர்றியா கூட்டத்துல அடி வாங்கிக் கொடுத்துடாதடா


மயிறானுங்க சாமி பாக்கவா வர்றானுங்க புள்ளைகள நசுக்குறதுக்குன்னே வர்றாங்க இவங்க பண்ற அட்டூழியத்துலதான் இந்த வருஷம் வந்த மழையும் நிண்டு போச்சு

இந்தக் கூட்டத்துல பொம்பளப் பிள்ளைகளையும் கொழந்தைகளையும் கூட்டிட்டு வர்றது நம்ம தப்பு
ங்க

தம்பி அப்படிச் சொல்லாதீய அப்புறம் எதுக்கு இம்புட்டுப் போலீசு இதே ஊருக்குள்ள இதவிட சாஸ்தி மக்களக் கூட கட்டுப்பாடோட வச்சு திருவிழா நடத்தி இருக்காக தெரியுமா
எல்லாம் நம்ம கைலதான் இருக்கு

யாத்தாடி எம்புட்டுக் கூட்டம் செத்து சுண்ணாம்பு ஆயிட்டேண்டா மாப்ள

எப்படியோ அப்புடி இப்புடின்னு சாமி பார்த்தாச்சுல போவோமாடா

எந்த நம்பிக்கைலடா இத்தன லட்சம் மக்கள் சாமியப் பாக்க எந்தந்த ஊர்ல இருந்தோ எல்லாம் வர்றாங்க


நீ சொன்னைல அதாண்டா.. நம்பிக்கை.. இந்த சாமி நமக்கு நல்லது செய்யுங்கிற நம்பிக்கை.. கோவிந்தா கோவிந்தா..

6 comments:

Anonymous said...

மயிறானுங்க சாமி பாக்கவா வர்றானுங்க புள்ளைகள நசுக்குறதுக்குன்னே வர்றாங்க இவங்க பண்ற அட்டூழியத்துலதான் இந்த வருஷம் வந்த மழையும் நிண்டு போச்சு//
ரசித்து படித்தேன்....பகிர்வுக்கு நன்றி..லைவ் மாதிரி இருக்கு

குமரை நிலாவன் said...

பகிர்வுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதுரை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிங்க....பதிவு அருமை...

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்கு கார்த்தி :)

கார்த்திகைப் பாண்டியன் said...

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..:-)))

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா