January 20, 2010

காலத்தை வென்றவன்..!!!


முகமெங்கும் சுருக்கங்களுடன்
கைகால்கள் நடுங்கியபடி
உடல் தள்ளாடியவாறே
சாலையை கடக்க யத்தனிக்கும்
ஆதரவற்ற பெரியவரை
"ச்சீ கிழட்டுப் பரதேசி...
கண்ணு தெரியல?"
எனத் திட்டயபடி
வாகனத்தில் கடந்து போகிறான்
என்றும் பதினாறிலேயே
இருக்கப் போகும்
மார்க்கண்டேயன் ஒருவன்..!!

32 comments:

sathishsangkavi.blogspot.com said...

மார்க்கண்டேயனுக்கு தெரியவில்லை நமக்கும் இது வரும் என்று...

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sangkavi said...
மார்க்கண்டேயனுக்கு தெரியவில்லை நமக்கும் இது வரும் என்று...//

:-((((

// ஈரோடு கதிர் said...
ம்ம்ம்//

அதேதான் கதிர்..

vasu balaji said...

இந்தத் திமிர் நான் அடிக்கடி கண்டு அதிரும் ஒன்று:(

Toto said...

ந‌ல்ல‌ க‌விதைக்கு பொருத்த‌மான‌ த‌லைப்புங்க‌.

-Toto
roughnot.blogspot.com

க ரா said...

நல்ல கவிதை...இந்த சிறுசுங்க இப்படித்தான் .. விட்டுல இருக்கற தாத்தாவுக்கே இந்த நிலமைதான் இப்ப

அ.மு.செய்யது said...

Good one boss !!!!

மேவி... said...

நல்ல இருக்கு

(சத்யமா எதிர்க்கவிதைன்னு என்ன எழுதுவது என்று தெரியல வாத்தியாரே)

ஹேமா said...

இயல்புதானே கார்த்தி.அந்தத் தாத்தாவும் அதையேதான் பண்ணியிருப்பார்.காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்.காலம் சுழன்று திரும்பவும் வரும் காலடியில்.சிந்திச்சாச் சொல்ல வராது.கவிதை அழகு.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க்கை ஒரு வட்டம்...

இன்னிக்கு நீ நாளைக்கு நான் தத்துவம் எல்லாருக்கும் புரிஞ்சா சரி...!

ஆரூரன் விசுவநாதன் said...

nice

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

இது இயல்பு - பெரும்பாலும் குருத்தோலைகள் சிரிக்கத்தான் செய்யும் - தவறாக எடுக்க வேண்டாம் - இப்படி எல்லாம் எழுதினா வயசாவுதுன்னு அர்த்தம் - சாக்கிரத

நல்வாழ்த்துகள் கார்த்தி

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு

கார்த்திகைப் பாண்டியன் said...

//வானம்பாடிகள் said...
இந்தத் திமிர் நான் அடிக்கடி கண்டு அதிரும் ஒன்று:(//

வருத்தப்பட வேண்டிய விஷயம்தான் பாலா சார்..

//Toto said...
ந‌ல்ல‌ க‌விதைக்கு பொருத்த‌மான‌ த‌லைப்புங்க‌.
-Toto
roughnot.blogspot.com//

நன்றி நண்பா

//ramasamy kannan said...
நல்ல கவிதை...இந்த சிறுசுங்க இப்படித்தான் .. விட்டுல இருக்கற தாத்தாவுக்கே இந்த நிலமைதான் இப்ப//

நிதர்சனம்..:-((

Unknown said...

உண்மை அதுவும் வலியுடன் ....,

கார்த்திகைப் பாண்டியன் said...

//அ.மு.செய்யது said...
Good one boss !!!!//

thanks buddy..:-))

/டம்பி மேவீ said...
நல்ல இருக்கு
(சத்யமா எதிர்க்கவிதைன்னு என்ன எழுதுவது என்று தெரியல வாத்தியாரே)//

எப்பூடி..:-)))

// ஹேமா said...
இயல்புதானே கார்த்தி.அந்தத் தாத்தாவும் அதையேதான் பண்ணியிருப்பார்.காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்.காலம் சுழன்று திரும்பவும் வரும் காலடியில்.சிந்திச்சாச் சொல்ல வராது.கவிதை அழகு.//

இந்த வாழ்க்கை ஒரு வட்டம்தானே தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
வாழ்க்கை ஒரு வட்டம்... இன்னிக்கு நீ நாளைக்கு நான் தத்துவம் எல்லாருக்கும் புரிஞ்சா சரி...!//

அதேதான்:-))))))

//ஆரூரன் விசுவநாதன் said...
nice//

நன்றிங்க

//cheena (சீனா) said...
அன்பின் கார்த்தி
இது இயல்பு - பெரும்பாலும் குருத்தோலைகள் சிரிக்கத்தான் செய்யும் - தவறாக எடுக்க வேண்டாம் - இப்படி எல்லாம் எழுதினா வயசாவுதுன்னு அர்த்தம் - சாக்கிரத நல்வாழ்த்துகள் கார்த்தி//

இதுல என்னங்கையா நான் கோபிக்கிற அளவுக்கு தப்பு இருக்கு? உண்மையில எனக்கு வயசு ஆகிருச்சுதானே? எப்படியோ கொஞ்சமாவது பக்குவப்பட்டா சரிதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//செ.சரவணக்குமார் said...
அருமையான பகிர்வு//

நன்றி நண்பா

//பேநா மூடி said...
உண்மை அதுவும் வலியுடன் //

ஆமாங்க.. நேர்ல பார்த்த வலியைத்தான் பதிவு பண்ணி இருக்கேன்...

Karthik said...

நல்லாருக்குங்ணா! :)

Balakumar Vijayaraman said...

o.k.

குமரை நிலாவன் said...

நல்ல இருக்கு

priyamudanprabu said...

.........
"ச்சீ கிழட்டுப் பரதேசி...
கண்ணு தெரியல?"
எனத் திட்டயபடி
வாகனத்தில் கடந்து போகிறான்
என்றும் பதினாறிலேயே
இருக்கப் போகும்
மார்க்கண்டேயன் ஒருவன்..!!
.,
சரியா சொன்னீக
நல்லாயிருக்கு

அத்திரி said...

புரொபசர் கவிதை நல்லாயிருக்கு,........

க.பாலாசி said...

உண்மைக்கிழவர்கள் இவர்கள்தான்...

நல்ல இடுகை..கவிதையாய்...

வினோத் கெளதம் said...

Nice..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Karthik said...
நல்லாருக்குங்ணா! :)//

welcome back after a long break..:-))

// வி.பாலகுமார் said...
o.k.//

நினைத்ததை நேர்மையாக சொன்னதற்கு நன்றி பாலா..

// குமரை நிலாவன் said...
நல்ல இருக்கு//

நன்றி நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரியமுடன் பிரபு said...
சரியா சொன்னீக
நல்லாயிருக்கு//

நன்றிங்க

//அத்திரி said...
புரொபசர் கவிதை நல்லாயிருக்கு,.......//

நன்றி தல

//க.பாலாசி said...
உண்மைக்கிழவர்கள் இவர்கள்தான்...
நல்ல இடுகை..கவிதையாய்...//

சரியாச் சொன்னீங்க பாலாஜி.. நன்றி

//வினோத்கெளதம் said...
Nice..//

thanks boss..:-)))

Romeoboy said...

எளிமையான, புரிந்துகொள்ள - கவிதை அருமை .

Mani said...

antha siruvanukku theriyavillai.
நமக்கும் இது வரும் என்று...

கார்த்திகைப் பாண்டியன் said...

//||| Romeo ||| said...
எளிமையான, புரிந்துகொள்ள - கவிதை அருமை .//

நன்றி பாஸ்..

//Mani said...
antha siruvanukku theriyavillai.
நமக்கும் இது வரும் என்று...//

என்ன செய்வது நண்பா.. இன்றைய உலகம் இப்படித்தானே இருக்கிறது..

*இயற்கை ராஜி* said...

ம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

*இயற்கை ராஜி* said...

//உண்மையில எனக்கு வயசு ஆகிருச்சுதானே? //


வாத்தியார் சார் நெறய உண்மை எல்லாம் சொல்றார்... எல்லாரும் ஓடியாங்கோ