February 23, 2011

இரு பூதங்கள் - 2

இரு பூதங்கள் - 1

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்”

காசு பணம் சம்பாதிக்கணும்னு வேலை தேடி போன புருஷன் ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்டானேன்னு முனியம்மாளுக்கு மண்டை காய்ஞ்சு போச்சு.

“நான் உனக்கு என்ன கொண்டாந்திருக்கேன் பாரு..”

தன்கிட்ட இருக்க மண்தட்ட எடுத்துக் காமிச்சான் முனியன். முனியம்மாவுக்கு புஸ்ஸுன்னு ஆகிப்போச்சு. இதுக்குத்தானா இந்தக் கேனையன் இந்த ஆட்டம் ஆடினான்? புருஷன எளக்காரமாப் பார்த்தா. முனியனுக்கு அவ என்ன நினைக்கிறான்னு புரிஞ்சு போச்சு.

“அடிப்பாவி.. இது மாயத்தட்டுடி..”

தனக்கு அந்தத் தட்டு கிடச்ச கதைய முனியன் சொன்னவுடனே முனியம்மாவுக்கு தலைகால் புரியல. நம்ம கஷ்டகாலம்லாம் ஓடிப்போச்சுன்னு ஒரே குஷியாயிட்டா.

“ஏன்யா.. எனக்குத்தான் அல்வான்னா ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமே.. வர வச்சுக் கொடுய்யா..”

முனியனும் சந்தோஷமா தட்ட எடுத்து அல்வா கொடுன்னு நினச்சான். ஒண்ணும் வரல. பூந்தி கொடு தட்டே. சேவு கொடு. தட்டே எனக்காகக் கொடு. ஒரு மண்ணும் வரல. அவ்வ்வ்.. பூதம் நம்மள நல்லா ஏமாத்திருச்சோ?

“ஏய்.. அப்படிப் பார்க்காத புள்ள.. அது.. நேத்திக்கு தட்டு ரொம்ப நேரம் வேலை பார்த்துச்சுல.. அதனால இப்போ ஓய்வா இருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்..”

முனியனும் தன்னல முடிஞ்ச மட்டுக்கும் கெஞ்சுனான் கதறுனான். ஆனா ஒண்ணும் வேலைக்காகல. வெறும் மண்தட்டு என்னத்தக் கொடுக்கும்?

முனியம்மாவுக்கோ உச்சி மண்டைல சுர்ருன்னு ஏற ஆரம்பிச்சுருச்சு. நம்ம புருஷன மனுஷங்கதான் ஏமாத்துறாய்ங்கன்னு பார்த்தா இப்போ பூதங்க கூட ஏமாத்த ஆரம்பிச்சுருச்சே. ஒரு மனுஷன் இம்புட்டு கேனையனாவா இருக்குறது? சுத்தி முத்தி பார்த்தா. ஒரு நீட்ட கழி கிடந்தது. எடுத்து புருஷனுக்கு போட்டா ஒரு பூசை.

அடியப் பூரா வாங்கிக்கிட்டு நின்ன முனியன் ஒரு முடிவுக்கு வந்தான். மறுநாள் ஒரு தூக்குச் சட்டில ரெண்டு களி உருண்டைய எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள நடந்து பூதம் இருக்க மரத்துக்கு வந்து சேர்ந்தான்.

“ஏய்.. உங்க ரெண்டு பேரையும் இப்போ நான் சாப்பிடப் போறேன்..”

ஆகா அந்த மந்திரவாதி ஏன் திரும்பி வந்தான் நாம்தான் அவனுக்கு மாயத்தட்டு தந்தோமேன்னு பூதங்களுக்கு ஒரே குழப்பம். குடுகுடுன்னு கீழ எறங்கி முனியன் முன்னாடி வந்து நின்னுச்சுங்க.

“அய்யா மந்திரவாதி.. இன்னும் என்ன பிரச்சினை?”

முனியன் நடந்தத சொன்னான். பூதங்களுக்கு ஒரே குழப்பம்.

“சரி.. எங்கேயோ தப்பு நடந்து போச்சு தலைவரே.. விடுங்க அத சரி பண்ணிடுவோம்..”

ஒரு பூதம் கண்ண மூடி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சது. ஜூலோ கூலோ அபால் டுபால் பம் பஜக். டஸ்.. புகைக்கு நடுவுல ஒரு ஆடு மேன்னு கத்திக்கிட்டு நின்னுச்சு.

“இந்த ஆடு இருக்கே.. இது ஒரு மந்திர ஆடு. நீங்க கொஞ்சம் புல்லு வெட்டி போட்டாப்போதும்.. தங்கமா புழுக்க போடும்..”

“இந்தத் தடவை என்னை நீங்க ஏமாத்தலயே..”

“அய்யய்ய.. என்ன தலைவரே.. நீங்க எம்புட்டுப் பெரிய மந்திரவாதி.. உங்கள நாங்க ஏமாத்த முடியுமா?”

முனியனுக்குப் பெருமை தாங்கல. சரி சரின்னு இளிச்சுக்கிட்டே ஆட்ட இழுத்துக்கிட்டு கெளம்பிட்டான்.

வழக்கம் போல இருட்டிப்போனதால வழில இருந்த கெழவி வீட்டுல முனியன் தங்குனான். போன தடவை மாயத்தட்டு. இந்த தடவை ஆடா? இதுல என்னா இருக்குன்னு கெழவி கேட்டா. முனியனும் வெள்ளந்தியா ஆடு தங்கப்புழுக்க போடும்னு ஒளரிட்டுத் தூங்கப் போயிட்டான். அன்னைக்கு ராத்திரி கெழவி முனியனோட ஆட்டக் கழட்டி ஒளிச்சு வச்சுட்டு ஒரு சாதா ஆட்ட கட்டி விட்டுட்டா. காலையில் கெளம்பி வீட்டுக்கு வந்தான் முனியன்.

“முனியம்மா.. கதவைத்திற.. டிங்டிங்டிங் டிடிக்டிடிங்..”

கதவைத் தொறந்த முனியம்மா கைல வெளக்குமாறோட நின்னா. இப்போ நம்ம புருஷன்காரன் என்ன கூத்து பண்ணப்போறானோ?

“இன்னைக்கு என்னா கதை சொல்லப்போற?”

அடியே இது மந்திர ஆடுன்னு ஆரம்பிச்சு முனியன் ஆட்டப் பத்தி சொன்னான். முனியம்மாவுக்கு இந்தத்தடவ கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. சரின்னு சொல்லி ஊரு பூரா சுத்தி புருஷனும் பொண்டட்டியும் புல்லறுத்துக் கொண்டு வந்து ஆட்டுக்குப் போட்டாங்க. அந்த ஆடும் நல்லாத் தின்னுபுட்டு வீடு பூரா வெறும் புழுக்கையா போட்டு வச்சது. தங்கப்புழுக்கையா இது? முனியம்மா பத்திரகாளியா மாறி வெளக்கமாத்த கொண்டு புருஷன சாத்து சாத்துன்னு சாத்திட்டா.

கடைசியா ஒரு முயற்சி. முனியன் திரும்பவம் பூதங்ககிட்ட போனான். அதுங்களுக்கு புரிஞ்சு போச்சு. யாரோ வெளயாடுறாங்க. சரி.. இதுக்கு ஒரு வழி பண்ணுவோம்னு மந்திரத்த சொல்லுச்சு பூதம். இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்புறங்கொய்யா.. முனியன் கைல ஒரு கம்பும் கயிறும் மாயமா வந்திருச்சு.

“தலைவரே.. இத எடுத்துக்கிட்டு போங்க.. உங்க பிரச்சினை எல்லாமே தீர்ந்துடும்”

சரின்னு கெளம்பி வந்த முனியன் எப்பவும்போல பாட்டி வீட்டுக்கு வந்தான். அசதியா இருக்குன்னு சீக்கிரமாவே தூங்கிட்டான். ஒவ்வொரு தடவையும் ஏதச்சும் மாயமந்திரப் பொருளைக் கொண்டுவருவானே இந்தத் தடவை கயிறும் கம்பும் கொண்டு வந்திருக்கானேன்னு பாட்டிக்கு ஒரே சம்சயம். ராத்திரி சத்தமில்லாமப் போய் கம்பக் கைல தொட்டுச்சு.

அடுத்த நிமிஷம்.. கயிறு கெழவியக் கட்டிருச்சு. கம்பு போட்டு டம் டம்முன்னு கெழவிய அடி நொறுக்குது. அவ குய்யோ முய்யோன்னு கத்த ஆரம்பிச்சுட்டா. சத்தம் கேட்ட முனியன் முழிச்சு வந்தான்.

“தம்பி.. தெரியாத்தனமா உன் பொருளைப் பூரா திருடிட்டேன். என்ன மன்னிச்சுடு. உன் தட்டையும் ஆட்டையும் திருப்பித் தந்திடுறேன். என்ன விட்டுடச் சொல்லு”ன்னு கெழவி கதறுது. முனியன் கம்பை பார்த்துக் கைய அசச்சான். அது அடிக்கிறத நிப்பாட்டி கயிரும் அவுந்துச்சு. கெழவி ஓடிப்போய் அவன்கிட்ட இருந்து எடுத்தத எல்லாம் திருப்பிக் கொடுத்தான்.

“எப்பவும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.. புரிஞ்சுதா?”

பாட்டிக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்குக் கெளம்பி வந்தான் முனியன். அவன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்னு புரிஞ்சுக்கிட்ட முனியம்மா அவனோட சேர்ந்து சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா.

தன்கிட்ட இருந்த மாயப்பொருட்களோட உதவியோட எல்லாருக்கும் நல்லது பண்ணி ரொம்ப நாளைக்கு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க.

7 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முடிவுல எந்த பின் நவீனத்துவமும் இல்லையே தலைவரே!!!!!!!!!!! கதை தெரிஞ்சதுதான் ,ஆனாலும் உங்க நடையில படிக்கிறப்ப நல்லாருக்கு.

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருந்தது நண்பரே. இதை ஒரே பதிவாகவே போட்டிருக்கலாமே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறுவர்களுக்கான நீதி கதை..

கார்த்திகைப் பாண்டியன் said...

ஸ்ரீ
அண்ணே.. என்ன ஓட்டலைன்னா உங்களுக்குத் தூக்கமே வராதே..

சரவணா..
மொத பதிவு எழுதினப்ப கொஞ்சம் சோம்பேறித்தனம்.. அதுதான்..

தமிழ்வாசி..
நன்றி நண்பா..

cheena (சீனா) said...

சரி சரி - தமிழ் வாசி சொன்னது தான் - இன்னும் சின்னப் புள்ளகளூக்கு வாத்யாரா இருக்கணூமா ? - தூக்கிப் போட்டுட்டு வழக்கம் போல தூள் கெளப்ப வேணாமா

கார்த்திகைப் பாண்டியன் said...

சீனா அய்யா.. இது தெரிஞ்சே எழுதினதுதான்.. குழந்தைகளுக்குன்னு ஏதாவது செய்யணுமேன்னு..

நையாண்டி நைனா said...

Jhony Jhony Yes papa
Reading blogs No papa

-NB: this is written without reading the story, but simply reading the comments from Mr.tamiilvasi and Mr.cheena.