February 15, 2011

காட்சிப்பிழை


கனவுகளில்
எத்தனையோ லட்சம் மனிதர்களால்
எத்தனையோ கோடி முறை
விதவிதமாய்
புணரப்பட்ட அவ்வுடல்
உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது
லாரியின் முன்தொங்கும்
கறுப்புக்கயிற்றின் வெண்சங்கு
அல்லது
அறுந்து தொங்கும்
சிலந்தி வலையின்
ஒற்றையிழையில்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
பூச்சியொன்றை நினைவுறுத்தியபடி
காதல் தோல்வியென சிலரும்
தீராத நோயென சிலரும்
நம்பிக்கைத் துரோகமென சிலரும்
படங்களின் தோல்வியே காரணமென சிலரும்
எல்லாம் தெரிந்திருந்தும்
ஏதும் தெரியாதவன் போல்
கூட்டத்தில் ஒருவனாய் நின்றிருந்தேன்
அன்றிரவென் சம்போகத்தில்
தொடர்ச்சியாய் வந்து போன
முகங்களின் ஊடே
திடீரெனத் தோன்றிய அவள் முகத்தில்
கண்கள் இருக்குமிடத்தில் வெற்றுக்குழிகளும்
வாயில் இரு கோரைப்பற்களும் - அதில்
உறைந்து போனதொரு சிரிப்பும்
இருந்தன

(புகைப்படம் - auniakahn.com)

15 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமை.. உங்கள் எழுத்து மனதை ஏதோ செய்கிறது..

Anonymous said...

இப்படியெல்லாம் எழுதி எங்கள பயமுறுத்தலாமா????
அந்த முகத்தை நெனச்சுப் பாக்கவே திகிலா இருக்குது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நெகிழ வைக்கும் கவிதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

சுதர்ஷன் said...

அழகான நெகிழ வைக்கும் வரிகள் .. நல்ல படைப்பு வாழ்த்துக்கள் .:)

Raju said...

சம்திங் மிஸ்.

R. Gopi said...

கவின்ஜர் காபா வால்க வால்க

ஜெய்சக்திராமன் said...

Excellent as usual...

ஜீவன்சிவம் said...

மனதை தொடுகிறது நண்பரே..

தமிழ்வாசி பிரகாஷ் said...

i like it...superbbbb

மதுரை சரவணன் said...

eppadi ippadi... super.. vaalththukkal

குமரை நிலாவன் said...

கவிதை அருமை நண்பரே

மேவி... said...

முதல் பகுதிக்கும் கடைசி பகுதிக்கும் தொடர்பில்லாதது போலுள்ளது

ஒரு நடிகையின் தற்கொலைக்கும் உங்களது பயதிற்க்குமான முடிச்சு சரியாயில்லை வாத்தியாரே

கொண்டு சென்ற கிளாஸ்

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.. ஏதோ ஒன்று குறைகிறதென சொன்ன நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.. முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மக்களே..

மேவி... said...

"முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மக்களே."


ஒடுங்க ஒடுங்க ...அது நம்மள நோக்கி தான் வருது