March 31, 2009

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!!

"காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. ". இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க.. ஆனா காதலிக்காத மக்கள் இருக்குற மாதிரி தெரியல.. காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை. காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட காதலிகளை சந்தோஷமா வச்சுக்க சில யோசனைகள்..



----- > காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேகஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.


---- > காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..



----> காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..



---- > உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..



---- > காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..



---- > முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..



---- > ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..



---- > உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..



---- > உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..



---- > கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..


நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

120 comments:

வேத்தியன் said...

மீ த பர்ஷ்ட்டு...

வேத்தியன் said...

ஐ நல்ல மேட்டரா கீதே...
படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

காதலியை குஜாலாக வச்சிருக்கவா???
இருந்தாதானே அந்த பிரச்சினையெல்லாம்???
:-)
ஒன்னு மாட்ட மாட்டேங்குதே...
கடவுளே காப்பாத்து...
:-)

வேத்தியன் said...

ஆஹா சொல்லிக்கீற ஐடியாவப் பாத்தா வொர்க் அவுட் ஆனது மாதிரி தோனுதே???
அனுபவமோ??
சரி நீங்களும் என்னை மாதிரி காதலி இல்லாத ஆளுன்னு ஒத்துக்கிறேன்..
அப்பாடா...

வேத்தியன் said...

ஓட்டுப் போட்டாச்சுங்க...

Anbu said...

தலைப்பு நன்னாயிருக்கு இருங்க வரேன்..

Anbu said...

பத்தும் நன்றாகத்தான் உள்ளது அண்ணா..

என்னமோ தெரியவில்லை.. நமக்கு ஏனோ எதுவுமே அமைய மாட்டேங்குது..

அகநாழிகை said...

கார்த்தி,
நல்லாத்தான் உசுப்பி விடறீங்க...


எனக்கு இரண்டு சந்தேகம் ?
1. //காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட 'காதலிகளை' சந்தோஷமா 'வச்சுக்க' சில யோசனைகள்.. //

அது என்ன... ?

'காதலிகளை'

'வச்சுக்க'

ரொம்ப பெரிய மனசுப்பா உங்களுக்கு.

மெய்யாலுமே ‘தாங்கத்தான் முடியல அய்யோ என்னால‘ன்னு பாடத் தோணுது கார்த்தி.

நடக்கட்டும்... நடக்கட்டும்...

- பொன். வாசுதேவன்


- பொன். வாசுதேவன்

குடந்தை அன்புமணி said...

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) //

எனக்கென்னமோ நம்புறமாதிரி இல்லை.

குமரை நிலாவன் said...

----- > காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேகஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.

அப்பாகிட்ட பாக்கெட் மணி கேட்டு வாங்கினவன்
இனிமே கேக்காம சுடுவான் ஏன்னா பில் கட்டனுமில்ல

நையாண்டி நைனா said...

ஹைய்யா சாமி....
இதெல்லாம் நாங்க செய்ய ரெடி, ஆனா அதற்கு அந்த காதலர்கள் சம்மதிக்கணுமே.......??????

குமரை நிலாவன் said...

---- > காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..

கண்மணி அன்போட நான் அனுப்பும் SMS

இப்படியா

குமரை நிலாவன் said...

----> காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..


அம்மா துணி துவைக்க துணி எடுக்கும் போது பாக்க வசதியா இருக்கும்

நிகழ்காலத்தில்... said...

டிஸ்கி; அதே காதலியை திருமணம்
செய்த பின் நடக்கும் விளைவுகளுக்கு,
(முன்னே எப்படி இருந்தே,இப்ப எப்படி..) பொன்னியின் செல்வன்
எந்த விதத்திலும் பொறுப்பல்ல...

வாழ்த்துக்கள்..

குமரை நிலாவன் said...

---- > உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..

கடைசி வரைக்கும் கால்ல விழுந்துகிடக்காம இருந்தா சரி

குமரை நிலாவன் said...

---- > காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..


குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தான் ரெண்டு ரூபாக்கு
கிடைக்கும் அது பிடிக்குமா

மனோ said...

நல்லாதான் இருக்கு ஆனால் என்னமோ தெரியவில்லை..நமக்கு ஏனோ எதுவுமே அமைய மாட்டேங்குது.. :-)

குமரை நிலாவன் said...

---- > முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..

கோவிந்தா மாதிரி தான் டிரஸ் பண்ணுவோம்

குமரை நிலாவன் said...

---- > ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..

அவங்க தங்கச்சிக்கு ரூட்
போடுறத கூட
சொல்லனுமா

நையாண்டி நைனா said...

/*கோவிந்தா மாதிரி தான் டிரஸ் பண்ணுவோம்*/
அப்படினா காதலும் கோவிந்தா,கோவிந்தா, கோ..விந்தா தான்..

நையாண்டி நைனா said...

/*அவங்க தங்கச்சிக்கு ரூட்
போடுறத கூட
சொல்லனுமா*/

இந்த மூஞ்சிக்கு வேற எதுவும் சிக்காது என்று அவர்களுக்கே அது தெரியும். ஸோ அவங்களே அதை நம்ப மாட்டாங்க

Anonymous said...

:-)

குமரை நிலாவன் said...

---- > உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..

இப்ப ஹெல்மெட் போட்டு ஊரு சுத்துரங்கப்பா

Unknown said...

அண்ணா ரொம்ப அருமையாக உள்ளது......அப்படியே first காதலியை correct பண்ணுவது எப்படினு சொன்னா இன்னும் நெறைய பேருக்கு உபயோகமா இருக்கும் ...............

குமரை நிலாவன் said...

---- > கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..

எப்படி மனசு வரும்
அவங்க தங்கச்சி அங்கதான இருக்கும்

நையாண்டி நைனா said...

/*muralidharan said...
அண்ணா ரொம்ப அருமையாக உள்ளது......அப்படியே first காதலியை correct பண்ணுவது எப்படினு சொன்னா இன்னும் நெறைய பேருக்கு உபயோகமா இருக்கும் ...............*/

யாரோட first காதலியைன்னு சொன்னா எங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்.

குமரை நிலாவன் said...

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. //

நமக்கும் தான்

நையாண்டி நைனா said...

/* நிலாவன் said...
//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. //

நமக்கும் தான்*/

அப்புறம் எதுக்கு இப்படி வளைச்சு வளைச்சு பின்னூட்டம் போட்டீங்க.

இப்படி இங்கே பின்னூட்டம் போட்டதிற்கு பதிலா எங்கேயாவது பஸ்டாண்டு, காலேஜி, கோயில்ன்னு சுத்துனா கிடைக்கும்.

நையாண்டி நைனா said...

/*காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. */

இப்படி யாரும் இப்போது இல்லை என்று... இந்த சமூகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.

நையாண்டி நைனா said...

/*இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க..*/

இதுக்கு முந்திய பதிவா "ரேசெச்சனை" போட்டுட்டு இப்படி ஒரு குத்தா???? இருடி... உன்னை வந்து கவனிக்கிறேன்.

நையாண்டி நைனா said...

/*காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. */

நண்பா உனக்கு ஏன் இந்த கொலைவெறி

முரளிகண்ணன் said...

இதற்கு பல எதிர்ப்பதிவுகள் வருமென எதிர்பார்க்கிறேன்

நையாண்டி நைனா said...

/* காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேகஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும். */

இது செகண்டு சேனல் ஓபன் பண்ண இடையூறாக இருக்க பயங்கர வாய்ப்பு உள்ளது. அதான் கன்பார்ம் ஆயிட்டுள்ளே, அப்புறம் என்னத்துக்கு இந்த வெட்டி செலவு.

நையாண்டி நைனா said...

மீதிய நாளைக்கு வந்து சொல்றேன்.... என்னோட லவ்வர் கூப்பிடுறா....
( இதையும் கடைசி பாய்ண்ட்டா சேர்த்துகோங்க, என்னதான் நண்பன் கூட பேசிகிட்டு இருந்தாலும், காதலி கூப்பிட்ட ஒடனே ஓடி போயரனும்)

கார்த்திகைப் பாண்டியன் said...

பின்னூட்டம் போட்ட மக்களுக்கு நன்றி.. நைனாவும் நிலாவனும் கொஞ்சம் கும்மி வேற அடிச்சிருக்காங்க.. நடத்துங்க.. பசங்க கூட கொஞ்சம் வெளிய போறதால அப்புறமா வந்து எல்லாரையும் கவனிக்கிறேன்..

வினோத் கெளதம் said...

SSuperrruuu..

புல்லட் said...

நமக்குத்தான் குடுப்பினை இல்லை..//

செத்தாலும் நம்ப மாட்டோம் :) கைவசம் இவளவு டெக்னிக்க வச்சிருந்துகிட்டு எப்பிடி மாட்டாம இருப்பீங்க? ஹிஹி? இல்ல ன்னா உந்த டெக்னிக்க பாவிச்சு இருந்ததயும் தொலச்சுபுட்டீங்களா? நரிக்கு வாலறுந்த மாதிரி நம்ம வாலையும் அறுக்க ஒரு ட்ரையா?)

தேவன் மாயம் said...

நல்ல யோசனைகள்!!!

முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் கவனிக்கவும்!!

Suresh said...

Machan nalla irukku aana sila points nammaku othu pogathu :-)
but i enjoyed the whole post nanba

//கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க.. //

he he :-) athukku melayum sollalam avan avan saththu he he :-)

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) //

nambitom ha ha

//காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)//

vottum pottachu karuthum solliyachu nanba\

//"காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. ". இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க.. ஆனா காதலிக்காத மக்கள் இருக்குற மாதிரி தெரியல.. காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை. காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட காதலிகளை சந்தோஷமா வச்சுக்க சில யோசனைகள்..///

ivai athanithum miga arumaiya sonninga ...

//ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..//

ithu super i accept this machan

சொல்லரசன் said...

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..//

அப்ப இந்த ஜடியா கொடுத்தது
குழந்தைஒவியனோ!

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

// பின்னூட்டம் போட்ட மக்களுக்கு நன்றி.. நைனாவும் நிலாவனும் கொஞ்சம் கும்மி வேற அடிச்சிருக்காங்க.. நடத்துங்க.. பசங்க கூட கொஞ்சம் வெளிய போறதால அப்புறமா வந்து எல்லாரையும் கவனிக்கிறேன்..//

எங்கே திண்டல் மலைக்க!

யாழினி said...

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..)//


நாங்க நம்பீற்றமப்பா...!

சம்பத் said...

நல்லா யோசிச்சிருகீங்க...உங்க கிட்ட படிக்கிற பசங்களையும் கேடுத்திறாதிங்க வாத்தியார் சார்..

Suresh said...

Vottum pottachu nanba

நசரேயன் said...

//கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க.. //

காதலிக்கு மட்டும் தானா?

பட்டாம்பூச்சி said...

யதார்த்தமான அறிவுரைகள் :)

ஆதவா said...

ஆஹா.... நம்ம லெக்ஷரர் பாடம் எடுக்கும் விதமே குஜாலா கீதே!!! மாமே!! டாப் டக்கருப்பா!!

நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..


இருந்தாலும் நம்பிட்டேன்..... இவ்ளோ யோசனை சொன்ன உங்களுக்கே ஒண்ணுமில்லைன்னா, நமக்கு கிடைக்குமா என்ன.... ஹி ஹி ....

ொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..

ஆமாமாம்.... எதுன்னாலும் காதலியைவிட நம்க்கு அறிவு கம்மியாத்தான் இருக்கணும்....

!!!!

ஆதவா said...

சொல்லரசன் said...
//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..//
அப்ப இந்த ஜடியா கொடுத்தது
குழந்தைஒவியனோ!

அடப்பாவமே!!! இப்படி ஒரு கூட்டமே இருக்கா?????

நான் ரொம்ப நல்லவங்க..... (நம்பிடுங்க...)

ச.பிரேம்குமார் said...

// காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை//

ம்ம்ம், சரியா சொன்னீங்க பாண்டியன்...இது ஒரு பெரிய பிரச்சனை :(

உங்கள் மாணவர்கள் மத்தியிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா?

ச.பிரேம்குமார் said...

அப்புறம் பாண்டியன், நீங்க கொடுத்துருக்கிற அறிவுரைகள பாத்தா நீங்க எக்கச்சக்கமா எங்கேயோ மாட்டியிருக்கீங்க போல?????

ஆ.ஞானசேகரன் said...

எனக்கு.... ஓகே என்மனைவியும் என் காதலிதான்... நல்ல டிப்ஸ் வாழ்த்துகள்

Anonymous said...

குடந்தைஅன்புமணி said...
//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) //

எனக்கென்னமோ நம்புறமாதிரி இல்லை.
___________
ரிப்பீட்டோய்

Anonymous said...

என்னமா ஐடியா கொடுகாரு../

Prabhu said...

நாங்களே ஒண்ணும் சிக்காம தான் இப்படி உங்களோட பேசிட்டிருக்கோம். ஏதாவது இருந்தாதான் அதுகூடல பேசிட்டிருப்போம்ல.

Anonymous said...

ஹா! ஹா! ... உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவேயில்ல.... யு கிரேஸி!!!

அட்டகாசம் பா.... எல்லாமே ஒர்க் அவுட் ஆகும்போல இருக்கே!

இதெல்லாம் காதலி’ங்க’ :) வச்சிட்டு இருக்கறவங்களுக்கும் வேலைக்கு ஆகுமா?! ஒகே! ஒகே!

சூப்பர் கா.பா.

Anonymous said...

hahaha
nalla comedya erukku.
postm pinnuttamum.

மேவி... said...

sorry....
naan innum love vishyathila lgk kuda join pannala .....
first figure set agattum....
piragu ithu ellam parthu kollalam

மேவி... said...

"காதலியை குஜாலாக"

double meaning varuthey....
he he he

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
ஆஹா சொல்லிக்கீற ஐடியாவப் பாத்தா வொர்க் அவுட் ஆனது மாதிரி தோனுதே???அனுபவமோ?? சரி நீங்களும் என்னை மாதிரி காதலி இல்லாத ஆளுன்னு ஒத்துக்கிறேன்..
அப்பாடா...//

நீங்கதான் மொத போணி.. என்ன நம்புனதுக்கு நன்றி.. நான் ரொம்ப அப்பிரானிப்பா.. நம்புங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
என்னமோ தெரியவில்லை.. நமக்கு ஏனோ எதுவுமே அமைய மாட்டேங்குது..//

சீக்கிரமே நல்ல காதலி கிடைக்க வாழ்த்துக்கள் அன்பு...

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
அது என்ன... ?'காதலிகளை'
'வச்சுக்க' ரொம்ப பெரிய மனசுப்பா உங்களுக்கு.//

வாசு.. இது என்ன புதுக்கூத்து? தமிழ்ல இருக்குற வார்த்தைகளை இப்படி எடக்கு மடக்கா பயன்படுத்த கூடாது.. (அது என்ன எடக்கு மடக்குன்னு கேக்காதேங்கப்பா.. என்னால தாங்க முடியாது..)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தை அன்புமணி said...
எனக்கென்னமோ நம்புறமாதிரி இல்லை.//

நண்பா.. நான் நல்லவன்... நல்லவன்... நல்லவன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன்...//

ஒரு ஆராய்ச்சியே பண்ணி இருக்கீங்க நண்பா... நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
ஹைய்யா சாமி....
இதெல்லாம் நாங்க செய்ய ரெடி, ஆனா அதற்கு அந்த காதலர்கள் சம்மதிக்கணுமே.......??????//

இதெல்லாம் ஓவர் லொள்ளு.. பாவம் காதலர்கள்.. அவங்கவங்க காதலிகளை போய் அசத்துங்கப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அறிவே தெய்வம் said..
டிஸ்கி; அதே காதலியை திருமணம்
செய்த பின் நடக்கும் விளைவுகளுக்கு,
(முன்னே எப்படி இருந்தே,இப்ப எப்படி..) பொன்னியின் செல்வன்
எந்த விதத்திலும் பொறுப்பல்ல...//

ஆகா.. சப்போட்டுக்கு ஒரு ஆள் ரெடி.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மனோ said..
நல்லாதான் இருக்கு ஆனால் என்னமோ தெரியவில்லை..நமக்கு ஏனோ எதுவுமே அமைய மாட்டேங்குது.. :-)//

நீங்களும் நம்ம கேஸ் தானா.. விடுங்க நண்பா.. எங்கயாவது ஒரு ஜீவன் நமக்காக வளந்துகிட்டு இருக்கும்.. சீகிரமே வருவாங்க.. கவலைப்படாதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
இந்த மூஞ்சிக்கு வேற எதுவும் சிக்காது என்று அவர்களுக்கே அது தெரியும். ஸோ அவங்களே அதை நம்ப மாட்டாங்க//

என்னா ஒரு வில்லத்தனம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said...
:-)//

வாங்க நண்பா.. சிரிப்புக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//muralidharan said..
அண்ணா ரொம்ப அருமையாக உள்ளது......அப்படியே first காதலியை correct பண்ணுவது எப்படினு சொன்னா இன்னும் நெறைய பேருக்கு உபயோகமா இருக்கும் ...............//

என்ன கொடுமைப்பா இது? காதலுக்காக ஒரு பதிவ போட்டா ஏன் தொழிலையே மாத்திருவீங்க போல இருக்கே?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
இதுக்கு முந்திய பதிவா "ரேசெச்சனை" போட்டுட்டு இப்படி ஒரு குத்தா???? இருடி... உன்னை வந்து கவனிக்கிறேன்.//

ஹி, ஹி, ஹி.. எல்லாம் ஒரு உள்குத்துதான் நைனா.. எதுன்னாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//முரளிகண்ணன் said..
இதற்கு பல எதிர்ப்பதிவுகள் வருமென எதிர்பார்க்கிறேன்//

அதெல்லாம் பெரிய பதிவர்கள் போட்டாத்தான் எதிர்ப்பதிவு எல்லாம் வரும் முரளி.. நாம எல்லாம் அந்த ஆட்டத்துலையே இல்லப்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
superrru..//

நன்றி வினோத்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//புல்லட் பாண்டி said..

செத்தாலும் நம்ப மாட்டோம் :) கைவசம் இவளவு டெக்னிக்க வச்சிருந்துகிட்டு எப்பிடி மாட்டாம இருப்பீங்க? ஹிஹி? இல்ல ன்னா உந்த டெக்னிக்க பாவிச்சு இருந்ததயும் தொலச்சுபுட்டீங்களா? நரிக்கு வாலறுந்த மாதிரி நம்ம வாலையும் அறுக்க ஒரு ட்ரையா?)//

அட சாமி.. நண்பர் புல்லட் கூட இந்த அப்பாவி பாண்டியன நம்ப மறுக்குராரே.. ஐயகோ.. நான் என் செய்வேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//thevanmayam said..
நல்ல யோசனைகள்!!!
முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் கவனிக்கவும்!!//

வாங்க டாக்டர்.. நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//suresh...//

ரசிச்சு படிச்சதுக்கு நன்றி சுரேஷ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said...
அப்ப இந்த ஜடியா கொடுத்தது
குழந்தைஒவியனோ!//

குழந்தை ஓவியனை யாரும் குழந்தைனு நம்பிராதீங்க மக்களே.. ஆனா இந்த ஐடியா கொடுத்தது அவர் கிடையாது நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//யாழினி said...
நாங்க நம்பீற்றமப்பா...!//

நன்றி சகோதரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
நல்லா யோசிச்சிருகீங்க...உங்க கிட்ட படிக்கிற பசங்களையும் கேடுத்திறாதிங்க வாத்தியார் சார்..//

ச்சே ச்சே.. பசங்களுக்கு நல்லதா மட்டும்தான் சொல்லிக் கொடுப்பேன் நண்பா.. கொஞ்ச வளர்ந்த நண்பர்களுக்காக இதெல்லாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//நசரேயன் said..
காதலிக்கு மட்டும் தானா?//

உங்க மனைவி மக்களுக்கு செட்டாச்சுனா யூஸ் பண்ணிக்கங்க நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பட்டாம்பூச்சி said..
யதார்த்தமான அறிவுரைகள் :)//

நன்றிங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
ஆஹா.... நம்ம லெக்ஷரர் பாடம் எடுக்கும் விதமே குஜாலா கீதே!!! மாமே!! டாப் டக்கருப்பா!! //

நன்றி ஆதவா.. அப்பப்ப இப்படி ஏதாவது செஞ்சாத்தான கிளாஸ் குஜாலா இருக்கும்.. ஹி.. ஹி. ஹி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
நான் ரொம்ப நல்லவங்க..... (நம்பிடுங்க...)//

மாட்டேன்.. மாட்டேன்.. மாட்டேன்.. நான் நம்பவே மாட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
உங்கள் மாணவர்கள் மத்தியிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா?//

ஆமா பிரேம்.. மொபைல் வந்த பிறகு நிலைமை ரொம்ப மோசம்.. எல்லாப் பயலும் ராத்திரி மூணு மணி வரைக்கும் மொக்கை போட்டுட்டு தான் படுக்கவே போறானுங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
அப்புறம் பாண்டியன், நீங்க கொடுத்துருக்கிற அறிவுரைகள பாத்தா நீங்க எக்கச்சக்கமா எங்கேயோ மாட்டியிருக்கீங்க போல?????//

இப்ப இல்ல நண்பா.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. ஞானசேகரன் said... எனக்கு.... ஓகே என்மனைவியும் என் காதலிதான்... நல்ல டிப்ஸ் வாழ்த்துகள்//

மனைவியே காதலியாக.. தூள்.. வாழ்த்துக்கள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
எனக்கென்னமோ நம்புறமாதிரி இல்லை.___________
ரிப்பீட்டோய்//

நண்பா.. நீங்க கூடவா என்னை நம்பலை? ஓ மை காட்.. ஞான் எந்து செய்யும்?

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
நாங்களே ஒண்ணும் சிக்காம தான் இப்படி உங்களோட பேசிட்டிருக்கோம். ஏதாவது இருந்தாதான் அதுகூடல பேசிட்டிருப்போம்ல.//

உண்மைய உள்ளபடி சொல்லி மதுரைன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க.. நீங்க என்கூட பேசிக்கிட்டு இருக்கனும்கறதுக்காவது உங்களுக்கு மெதுவா காதலிகிடைப்பதாக..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஷீ-நிஷி said..
ஹா! ஹா! ... உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவேயில்ல.... யு கிரேஸி!!!//

நன்றி நண்பா.. அப்பப்ப ஏதாவது இப்படி கோக்குமாக்கா செய்வேன்.. கண்டுக்காதீங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மகா said..
hahaha
nalla comedya erukku.
postm pinnuttamum.//

வாங்க சகோதரி.. ரசித்ததற்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
naan innum love vishyathila lgk kuda join pannala .....
first figure set agattum....
piragu ithu ellam parthu kollalam//

lkg paiyanukku சீக்கிரமே பெண் கிடைக்க வாழ்த்துக்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//mayvee said..
"காதலியை குஜாலாக"
double meaning varuthey....
he he he//

என்ன அழகா சிந்திக்கிறீங்க.. புல் அரிக்குது போங்க..

Anonymous said...

வழக்கம் போல் வந்து விட்டேன் நண்பா. ஆரம்பிப்போமா?

Anonymous said...

ரெடி 1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

6

Anonymous said...

7

Anonymous said...

நான் தான் 100

Anonymous said...

காதலை பற்றி நண்பர் எழுதியிருக்கிறhர். 100 அடிக்கலன்னா நாளை வரலாறு நம்மை தப்பா பேசும் இல்லீயா? அப்புறம் 101-ம் நான் தான். இது மொய்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணன் கடையம் ஆனந்த் வாழ்க.. வாழ்க.. நானே கூப்டணும்னு நினச்சேன்.. பாருங்க.. டெலிபதி.. நீங்களே வந்துட்டேங்க.. நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆம்மா.. ஆமா.. வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே.. (இம்சை அரசன் டோன்ல படிங்க.. )

உமா said...

ஆஹா!!!!!!!!!!!

பொன்.பாரதிராஜா said...

//நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) //

வாத்தியார் தொழில்ல இருந்துட்டு இப்படியெல்லாம் பொய் சொல்லக் கூடாது...

கார்த்திகைப் பாண்டியன் said...

//உமா said..
ஆஹா!!!!!!!!!!!//

வருகைக்கு நன்றி சகோதரி...

கார்த்திகைப் பாண்டியன் said...

//பொன். பாரதிராஜா..
வாத்தியார் தொழில்ல இருந்துட்டு இப்படியெல்லாம் பொய் சொல்லக் கூடாது...//

பொய்யா? அப்படின்னா என்னப்பா? தமிழ்ல நான் கேள்விப்படாத வார்த்தையா இருக்கே..

Raju said...

\\நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.\\

நீங்களும் நானும் போன்ல பேசுனாத்தான் அது பேரு மொக்கை...
அதே நிங்களும் நீங்க லவ்வுனவரும் போன்ல பேசுனா அது கடலை..
நீங்க சொன்னது கடலையா? இல்ல மொக்கை யா?
உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சுருவேன் போலயே...அய்யோ..அய்யோ!

kuma36 said...

///கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..///

:::::::::::::::::::::::::::::::::
நான் பின்னுட்டம் போடவும் லேட், உங்க பதிவும் லேட், கொஞ்சகாலத்திற்கு முன்பு சொல்லிறிந்திங்கனா.. ம்ம்ம்ம் முடிந்தது முடிஞ்சி போச்சி இனியாவது நீங்க சொன்ன வழிகளை கையாளனும். நன்றி நண்பரே!

ராம்.CM said...

நல்லாயிருந்தது.. அனுபவம் உண்டா?...

சம்பத் said...

//சம்பத் said..
நல்லா யோசிச்சிருகீங்க...உங்க கிட்ட படிக்கிற பசங்களையும் கேடுத்திறாதிங்க வாத்தியார் சார்..//

ச்சே ச்சே.. பசங்களுக்கு நல்லதா மட்டும்தான் சொல்லிக் கொடுப்பேன் நண்பா.. கொஞ்ச வளர்ந்த நண்பர்களுக்காக இதெல்லாம்.. ////

ஹி ஹி ...நம்பிட்டோம்... :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//டக்ளஸ் said..
உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சுருவேன் போலயே... அய்யோ..அய்யோ!//

விளக்கத்துக்கே ஒரு விளக்க்கம்.. அதோட கடலை மொக்கை என்ன வித்தியாசம்னு ஆராய்ச்சி வேற.. முடியலடா சாமி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கலை-இராகலை said..
முடிந்தது முடிஞ்சி போச்சி இனியாவது நீங்க சொன்ன வழிகளை கையாளனும். நன்றி நண்பரே!//

பரவா இல்லங்க.. இனியாவது பயன்படுமே..வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
நல்லாயிருந்தது.. அனுபவம் உண்டா?...//

இப்படி இருக்கணும்னு ஆசைகளும் கனவுகளும் உண்டு ராம்.. ஆனா அனுபவம் இல்லை..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத் said..
ஹி ஹி ...நம்பிட்டோம்... :-)//

நீ நம்புவன்னு எனக்குத் தெரியும் நண்பா.. ஹி ஹி ஹி

Karthik said...

BHAGYARAJ STYLE:

titla ah paarthu konjam kasa musa va irukkum ninachen... aana kujaal nu pothu enna bejaar aakiteeenga... irundaalum idha la follow panrada vida pesaama kaadalikkama irukalam...

*இயற்கை ராஜி* said...

நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..)

nambitten...
poster adichi otti irukkanga Perunduraila:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி.. கார்த்தி மற்றும் இயற்கை..

சித்த கார்த்திகை(stephen) said...

சூப்பரா கீதுங்க ! அப்பிடியே, புதுசா காதலிய எப்புடி உசார் பண்ரதுன்னு சொன்னீங்கன்னா, உங்கோ ஐடியாவ ஃபாலோ பண்ணிப்பேண். ஹி ஹீ... ஹீ.................!



அப்புரம்,

நானும் எத்தயோ ஏதுரன்னு, ஏதிகிர. அன்னாத்த அத பச்சிட்டு, கமென்டர் - ச்சீ ச்சீ.... கமென்ட்டு எய்தினீங்கன்னா, நா ரொம்ம குஜாலாய்டுவேன்.


http://yuvaking2005.blogspot.com/2009/07/blog-post.html

Anonymous said...

எம்புட்டு அருமையான கருத்து சொல்லிருகீக நன்றி