February 13, 2009

நீ வருவாய் என - காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!




















நீ யார்..
எங்கிருக்கிறாய்..
எதுவும் எனக்குத் தெரியாது..
உனக்காக நான்
காத்திருக்கப் போவதுமில்லை..
இருந்தும்..அன்பே..
எனக்காய் நீ வரும்வரை..
உன்னை நான்
காதலித்துக் கொண்டிருப்பேன்!!!
***********************************************
என்றேனும்...
நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
**********************************************
(நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!! நான் திருமணத்திற்குப் பின்னான காதலை நம்புபவன். எங்கோ இருந்து கொண்டு.. என் கண்ணில் தட்டுப்படாமல்.. என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்!!!)





26 comments:

Anonymous said...

என்றேனும்...
நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!
*********************
ரொம்பவே பெரிய நம்பிக்கை
காதலர்தின ஸ்பேசலா?????????

Anonymous said...

என் கண்ணில் தட்டுப்படாமல்.. என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்
*****************
உங்களுக்கும் இன்னும் தட்டு படலையா???????
ரொம்பவே அதிஸ்ரசாலிதங்க நீங்க
*******************

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
காதலர்தின ஸ்பேசலா?????????//

முதல் ஆளா வந்து கருத்து குத்தின கவினுக்கு நன்றி..//

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
உங்களுக்கும் இன்னும் தட்டு படலையா???????
ரொம்பவே அதிஸ்ரசாலிதங்க நீங்க//

உங்களுக்கும்?ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே.. எங்க கவின்.. நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டே தான் இருக்கேன்.. வந்து சேந்தாதானே அவங்க நம்மோட அதிஷ்டமா.. இல்ல வேற ஏதாவதான்னு தெரியும்..

வந்தியத்தேவன் said...

உங்கள் கண்ணிலும் அந்த காதல் தேவதை இன்னமும் தட்டுப்படவில்லையா? பொறுத்தார் பூமியாள்வார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//வந்தியத்தேவன் said..
உங்கள் கண்ணிலும் அந்த காதல் தேவதை இன்னமும் தட்டுப்படவில்லையா? பொறுத்தார் பூமியாள்வார்.//
உங்கள் கண்ணிலும்?என்னப்பா இது.. வர்றவங்க எல்லாமே நம்மள மாதிரிதானா? வருகைக்கு நன்றி நண்பா..

சொல்லரசன் said...

உங்கள் நம்பிக்கை விரைவில் மெய்பட வாழ்த்துகள்,கவிதை அருமை

ஆதவா said...

நீ யார்..
எங்கிருக்கிறாய்..
எதுவும் எனக்குத் தெரியாது..
உனக்காக நான்
காத்திருக்கப் போவதுமில்லை..
இருந்தும்..அன்பே..
எனக்காய் நீ வரும்வரை..
உன்னை நான்
காதலித்துக் கொண்டிருப்பேன்!!!


சரிதான்..... அப்படி காதலித்துக் கொண்டு சேமித்த அன்பை சந்தித்தபின் கொட்டுவதா???

என்றேனும்...
நீ வந்து
பெற்றுக் கொள்வாய்
என்னும் நம்பிக்கையில்
சேமித்து வைக்கிறேன்
உனக்கான...
பரிசுப்பொருட்களையும்
என் காதலையும்!!


வாவ்... அருமைங்க...  இதைவிட பெரிய பரிசு வேறேதும் இருக்க முடியாது... வாழ்த்துக்கள்.. காதலர் தின வாழ்த்துக்கள்

Muniappan Pakkangal said...

Chinna kavithaiyai irunthaalum nalla varigal. Karthigai Pandian.

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
உங்கள் நம்பிக்கை விரைவில் மெய்பட வாழ்த்துகள்,கவிதை அருமை//
வாழ்த்துக்கு நன்றி நண்பா.. உங்கள் வாக்கு விரைவில் பலிக்கட்டும்.. ஹி ஹி

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
வாவ்... அருமைங்க... இதைவிட பெரிய பரிசு வேறேதும் இருக்க முடியாது... வாழ்த்துக்கள்.. காதலர் தின வாழ்த்துக்கள்//

காதலர்தின நல்வாழ்த்துக்கள் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

முனியப்பன் பக்கங்கள்... முதல் முறையாக வருகை தந்ததற்கு நன்றி

தமிழிசை said...

அருமையான கவிதை...

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழிசை அவர்களே..

குமரை நிலாவன் said...

வந்துட்டேங்க ....
கொஞ்சம் வேலையா இருந்தேன்
அதான் உங்கள் பதிவுக்கு
வரமுடியலைங்க...



நீ யார்.. எங்கிருக்கிறாய்.. எதுவும் எனக்குத் தெரியாது..உனக்காக நான்காத்திருக்கப் போவதுமில்லை..இருந்தும்..அன்பே.. எனக்காய் நீ வரும்வரை.. உன்னை நான் காதலித்துக் கொண்டிருப்பேன்!!! ***********************************************என்றேனும்... நீ வந்து பெற்றுக் கொள்வாய் என்னும் நம்பிக்கையில் சேமித்து வைக்கிறேன் உனக்கான...பரிசுப்பொருட்களையும்என் காதலையும்!!

காதலர் தின வாழ்த்துக்கள்
கவிதை அருமை ...

ச.பிரேம்குமார் said...

//எங்கோ இருந்து கொண்டு.. என் கண்ணில் தட்டுப்படாமல்.. என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்//

நல்ல சமர்ப்பணம். சீக்கிரமே உங்க காதலி கிடைக்க வாழ்த்துகள் :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//நிலாவன்..
வந்துட்டேங்க ....கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் உங்கள் பதிவுக்கு வர முடியலைங்க...காதலர் தின வாழ்த்துக்கள் கவிதை அருமை//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி பிரேம்.. உங்கள் வார்த்தைகள் பொன்னாய் பலிக்கட்டும்:-)

அப்துல்மாலிக் said...

//நீ யார்.. எங்கிருக்கிறாய்.. எதுவும் எனக்குத் தெரியாது..உனக்காக நான்காத்திருக்கப் போவதுமில்லை..இருந்தும்..அன்பே.. எனக்காய் நீ வரும்வரை.. உன்னை நான் காதலித்துக் கொண்டிருப்பேன்!!! //

ஆஹா எத்தனைபேரு இப்படி கிளம்பிருக்கீங்க‌

கவிதை அருமை, காத்திருங்கள்

அப்துல்மாலிக் said...

//என்றேனும்... நீ வந்து பெற்றுக் கொள்வாய் என்னும் நம்பிக்கையில் சேமித்து வைக்கிறேன் உனக்கான...பரிசுப்பொருட்களையும்என் காதலையும்!! //

வரப்போகிறவர் ரொம்ப அதிஷ்டசாலி.. நிறைய பரிசுப்பொருட்கள் காத்திருக்கு

நல்ல வரிகள், உஙகளுக்கும் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

//அபுஅப்ஸர் said..
வரப்போகிறவர் ரொம்ப அதிஷ்டசாலி.. நிறைய பரிசுப்பொருட்கள் காத்திருக்கு
நல்ல வரிகள், உஙகளுக்கும் வாழ்த்துக்கள்//

முதல் முறையாக வருகை தந்து வாழ்த்தி இருக்கிறீர்கள்.. நன்றி நண்பரே..

எம்.எம்.அப்துல்லா said...

//நான் திருமணத்திற்குப் பின்னான காதலை நம்புபவன்.//

அட,நானும்தான்!

எம்.எம்.அப்துல்லா said...

//எங்கோ இருந்து கொண்டு.. என் கண்ணில் தட்டுப்படாமல்.. என்னை அலைக்கழிக்கும் என் காதல் தேவதைக்கு.//

கல்யாணம் ஆகட்டும்...அப்புறம் நீங்க அவங்க கண்ல தட்டுப்படாம அப்பப்ப அலைக்கழிப்பீங்க

:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

//எம்.எம்.அப்துல்லா said..
கல்யாணம் ஆகட்டும்...அப்புறம் நீங்க அவங்க கண்ல தட்டுப்படாம அப்பப்ப அலைக்கழிப்பீங்க :)))//

அனுபவம் பேசுகிறது..
வருகைக்கு நன்றி.. :-)

Dhavappudhalvan said...

வாவ்! இன்னும் மாட்டலையா? சீக்கிரமாய் நடக்க வாழ்த்துக்கள். இன்று நேரம் கிடைத்து வந்து விட்டேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//dhavapudhalvan said..
வாவ்! இன்னும் மாட்டலையா? சீக்கிரமாய் நடக்க வாழ்த்துக்கள். இன்று நேரம் கிடைத்து வந்து விட்டேன்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பா..